districts

பாரதியும், பெரியாரும் இல்லையெனில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை

சேலம், ஆக.12- பாரதியும், பெரியாரும் இல்லையெனில் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்து இருக்காது என புத்தக கண்காட்சியில் சேலம்  அரசு கலைக் கல்லூரி முதல்வா் நா.செண்பக லெட்சுமி தெரிவித்தார்.  76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,  பெரியார் பல்கலைக்கழகம் சார்பில்  ‘மகா கவி பாரதியாரும் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமும்’ என்ற தலைப்பில் 3  நாள் புத்தகக் கண்காட்சி வியாழனன்று  நடை பெற்றது. இதனை, துணைவேந்தர் இரா. ஜெகநாதன் துவக்கி வைத்தார். இக்கண் காட்சியில் மகாகவி பாரதியார் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய 2,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், துணைவேந்தர் இரா.ஜெக நாதன் பேசுகையில், மாணவர்கள் கொள்கைப் பிடிப்போடு வாழ வேண்டும். நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது சுதந்திரப்  போராட்ட வீரர்கள் தன்னலம் பாராது உழைத் திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பால் இன்று நாம் சுதந்திரமாக இருக்கிறோம். சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பெரி யார் பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு நடை பெற்று வருகிறது. பழைய வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைதளங்களின் பிடியில் மாண வர்கள் சிக்கியுள்ளனர். இதில் இருந்து இளை ஞர்கள் மீள வேண்டும். திருக்குறளை அடிப் படையாகக் கொண்டு நோய்களை எளிமை யாக தீர்க்க முடியும் என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புத்தக்  கண்காட்சியினை மாணவ - மாணவியர் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சமூக வலைதளங் களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புத்தகங்களுக்கு கொடுக்க வேண்டும் என் றார். இந்நிகழ்ச்சியில், சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் நா.செண்பகலெட்சுமி, மகாகவி பாரதியாரும் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமும் என்ற தலைப்பில் பேசும்போது, பாரதியாரும், பெரியாரும் இல்லையெனில் பெண்களுக்கு முக்கியத் துவம் கிடைத்திருக்காது. இருவரின் உழைப் பினால்தான் பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைத்தன. 7  வயதிலேயே குழந்தைகளுக்கு பாரதியை  அறிமுகப்படுத்தினால் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே செம்மைப் படுத்திக் கொள்வார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில், தமிழ்த்துறைப் பேரா சிரியர் இரா.வசந்தமாலை நன்றி கூறினார்.