districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோவை - சார்ஜா இடையே ஏ321 ரக விமானம் இயக்கம்

கோவை, ஜூன் 23- கோவையிலிருந்து சார்ஜாவிற்கு ஏ321 ரக விமானம் இயக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். கோவை விமான நிலையத்தில் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பு ஆண்டுதோறும் 30 லட்சம் பயணி கள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். தினமும்  33 முதல் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா  நோய்த்தொற்று பரவலுக்கு பின்னர் தற்போது 28 ஆக இயக் கப்படுகிறது.  இதற்கிடையே, கோவை விமான நிலையத்தில் 168  பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஏர் பஸ் ஏ320 ரக விமானங் கள் மட்டுமே அதிகம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பய ணிகள் உரிய நேரத்தில் விமானம்  கிடைக்காமல் அவதி  அடைந்தனர். இந்நிலையில், பயணிகளின் வேண்டு கோளை ஏற்று ஏ321 என்ற ரகத்தை சேர்ந்த பெரிய விமா னத்தை ஏர் அரேபியா நிறுவனம் இந்த மாதம் முதல் தொடங் கியது. இந்த விமானம் வாரத்தில் 5 நாட்கள் கோவை சார்ஜா  இடையே சேவையை வழங்கி வருகிறது. இந்த விமானத் தில் 215 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானம் ஒவ் வொரு முறையும் வரும்போதும், செல்லும்போதும் அனைத்து இருக்கைகளும்  நிரம்பி வருகிறது.  இந்த விமானம் பெரிய விமானம் என்ற போதும் ‘வைட்  பாடி’ என்று சொல்லக்கூடிய ரகத்தை சேர்ந்தது அல்ல.  ‘நேரோ பாடி’ என்று சொல்லக்கூடிய ரகத்தை சேர்ந்தது. கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் நீளம் குறைவாக  உள்ள காரணத்தால் வைட் பாடி ரகத்தை சேர்ந்த விமா னங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. 8 ஆயிரம் அடி  நீளம் கொண்ட ஓடுதளத்தை 12 ஆயிரம் அடி நீளம் கொண்ட  ஓடுதளமாக மாற்றினால் தான் வைட் பாடி என்று சொல்லக் கூடிய விமானத்தை இயக்க முடியும். அவ்வாறு மாற்றி னால் அதிகளவிலான பயணிகள் பயன் அடைவார்கள். ஆகவே ஓடுதளத்தின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என் கிற கோரிக்கை எழுந்துள்ளது.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.3.40 லட்சம் ஒதுக்கீடு

கோவை, ஜூன் 23- கோவை மாவட்டத்தில் தேசிய உணவு பாதுக்காப்பு இயக்க திட்டத்தின் கீழ் பருத்தி பயிர்களின் உற்பத்தியை அதி கரிக்க ரூ.3.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் பருத்தி பயிர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்  நிலப்பரப்பில் அன்னூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,  சர்கார் சாமக்குளம் போன்ற பகுதிகளில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத் தின் கீழ் பருத்தி பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 3.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நீண்ட  இழைகள் கொண்ட பருத்தி 20 ஹெக்டருக்கும், அடர் நடவு  முறை பருத்தி ரகம் 10 ஹெக்டருக்கும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதற்குட்பட்ட  விதை, உயிர் உரங்கள் போன்ற  இடுபொருட்கள் மானியத்துடன் வட்டார வேளாண்மை விரி வாக்க மையம் மூலம் வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளிக்கு புதிய  ரங்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த உர  நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய பயிற்சி  போன்றவைகள் வழங்கப்பட உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத் தில் கிராமங்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்ப டும் எனவும், உழவன் செயலியின் மூலம் பதிவு செய்யும்  விவசாயிகளுக்கு முன்னுரிமை என அவர் தெரிவித்துள் ளார்.

தருமபுரியில் நடைபெறும் மாபெரும் புத்தக திருவிழாவில் 10 லட்சம் புத்தகங்கள் இடம்பெறும்

தருமபுரி, ஜூன் 23- தருமபுரி அரசு கலைகல்லூரி திடலில் நடைபெறும் மாபெரும் புத்தக திருவிழாவில் 10 லட்சம் புத்தகங்கள் இடம் பெற உள்ளதாக தகடூர் புத்தக பேரவை செயலாளர் மருத்து வர் இரா.செந்தில் தெரிவித்துள்ளார்.  தருமபுரி முத்து இல்லத்தில், தகடூர் புத்தக பேரவை  செயலாளர் இரா.செந்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள் ளதாவது, தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் சார் பில் 3 ஆண்டுகளாக தருமபுரியில் புத்தக திருவிழா நடை பெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு மாவட்ட நிர்வாகம்  மற்றும் தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் சார்பில்  தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் ஜூன் 24 முதல் ஜூலை  4 வரை புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. இந்த புத்தக  கண்காட்சி காலை 10 மணி முதல், இரவு 9 மணி வரை நடை பெறும். இந்த புத்தக கண்காட்சியில் 100 புத்தக கடைகள், 10 லட்சம் புத்தங்கள் இடம்பெறும்.  துவக்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலை மையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பண்ணீர் செல்வம் திறந்து வைக்கிறார். புத் தக கண்காட்சியில் தினமும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி  நடைபெறும். அதன்படி, ஜூன் 25 ஆம் தேதி ஒரே பூமி, ஒரே  வாழ்வு, ஒற்றை நலம் என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவரா மன் உரையாற்றுகிறார். ஜூன் 26 ஆம் தேதி இலக்கியத்தின்  இலக்கு என்ற தலைப்பில் இயக்குனரும், எழுத்தாளரு மான பாரதிகிருஷ்ணகுமார் பேசுகிறார். ஜூன் 27 ஆம் தேதி யன்று வாசிப்பு பண்பாடு என்ற தலைப்பில் எழுத்தாளர் தமிழ் செல்வன் பேசுகிறார். ஜூன் 28 ஆம் தேதியன்று ஒரு பண்பாட் டின் பயணம் என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் ஆர். பாலகிருஷ்ணனும், ஜூன்‌ 29 ஆம் தேதி எண்ணம் போல் வாழ்வு என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்  யுகபாரதியும், ஜூன் 30 அன்று வீழ்வேனென்று நினைத் தாயோ என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ் கரும் பேசுகின்றனர்.  ஜூலை 1 ஆம் தேதி பொருளில்லார்க்கு என்ற தலைப்பில்  தன்னம்பிக்கை பேச்சாளர் சோம.வள்ளியப்பனும், புவி விற் பனை அல்ல என்ற தலைப்பில் சுழலியலாளர் நக்கீரனும்,  ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் நேற்று இன்று நாளை என்ற  தலைப்பில் ஊடகவியலாளர் மு.குணசேகரனும், ஜூலை 2  ஆம் தேதி தருமபுரி மாவட்ட வளர்ச்சி சிறப்பு கருத்தரங்கம்  நடைபெறும். ஜூலை 3 ஆம் தேதி சொல்ல வந்த கதை என்ற  தலைப்பில் எழுத்தாளர் கண்மணி குணசேகரனும், வாழ் வார்க்கு உரை என்ற தலைப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடான்,  ஜூலை 4 ஆம் தேதி கணவு பெட்டகங்கள் என்ற  தலைப்பில் எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோரும் பேசுகின்றனர். இந்நிகழ்வின் போது, தகடூர் புத்தக பேரவை தலைவர் இரா.சிசுபாலன், பொருளாளர் எம்.கார்த்திகேயன், ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் தங்கமணி, நிர்வாகிகள் இராஜசேகர்,  செங்கண்ணன், பாரதிபுத்தகாலய பொறுப்பாளர் அறிவுடை  நம்பி  ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் குண்டர் சட்டம் பாயும் - கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

கோவை, ஜூன் 23- மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது  குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என கோவை  மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகரில் பள்ளிகள் அருகில் குட்கா விற்பனை செய்வதை தடுக்க 7 தனிப் படைகள் அமைக்கபட்டுள்ளது.  தற்போது வரை 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில், ஏற்கனவே வழக்கு நிலு வையில் உள்ள நபர்கள் மீது குண்டர் சட்டம்  பாயும். குட்காவை முழுமையாக ஒழிப்பதற் கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. குறிப்பாக, மாணவர்க ளுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். விற்பனை நடைபெற்றால் பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தக வல் தெரிவிக்க வேண்டும் கோவை மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்கி றேன். மேலும், பள்ளிகளுக்கு அருகில் போக் குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை  எடுத்து வருகிறது. போக்சோ தடுப்புச் சட்டத் தில் ஆசிரியர்கள் தகவல் எப்படி தெரிவிக்க  வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளோம். விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடும்  டாஸ்மாக் கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவையில் 20க்கும் மேற் பட்ட கஞ்சா விற்பனையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

“ஆப்ரேஷன் கந்துவட்டி” கந்துவட்டி கொடுமையா புகாரளிக்க  காவல் துறை அழைப்பு

கோவை, ஜூன் 23- கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப் பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்க வர வேண்டும். இதற்காக ஆபரேஷன் கந்து வட்டி என்கிற சிறப்பு செயல் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல்  துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது, ஏழை, எளிய,  நடுத் தர மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது தவிர்க்க இயலாத செலவினங்கள் மற்றும்  வியாபார நோக்கங்களுக்காக கந்துவட்டி யில் பணம் பெருகின்றனர். அதிகவட்டி வசூ லிக்கும் கந்துவட்டிகாரர்களிடம் கடனை வாங்குகின்றனர். தொடர்ந்து அதற்கு வட்டி யும், அபராதமும் கட்டி அசலை திருப்பி  செலுத்த இயலாத அளவுக்கு கந்துவட்டிக் காரர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற னர். இதனைத் தடுக்கும் விதமாகவும், கந்து வட்டி கொடுமைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள கோவை மாநகர காவல் ஆணையர் கண்காணிப் பில் “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற தலைப் பில் சிறப்பு செயல் திட்டம் வகுக்கப்பட்டு கோவை மாநகரில் கந்துவட்டி தொழில் புரி வோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  கந்துவட்டி சம்பந்தமாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒரு புகார் பெறப் பட்டு கந்து வட்டி தடைச் சட்டம் 2003 கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது போன்று கந்துவட்டி கொடுமையால் பாதிக் கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் உடன டியாக எவ்வித தயக்கமும், பயமுமின்றி புகா ரளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் பட் சத்தில் கந்துவட்டியில் ஈடுபடும் நபர்கள் மீது  கடும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் முகாம்

பொள்ளாச்சி நக ராட்சி அலுவலகத்தில் வெ;s ளியன்று (இன்று) காலை 11  மணியளவில் மாற்றுத்திற னாளிகளுக்கான குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளதென பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம்  ஞானதேவ் ராவ் தெரிவித்துள் ளார். இதில், பொள்ளாச்சி யைச் சுற்றியுள்ள மாற்றுத்தி றனாளிகள் பங்கேற்று பயன் பெற வேண்டுமென தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆண்டியகவுண்டனூரில் டாஸ்மாக் கடையா? மக்கள் கடும் எதிர்ப்பு

உடுமலை, ஜூன் 23 - பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் வழி யில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். உடுமலை தாலூக்க ஆண்டியகவுண்டனூர் அருகே மக் கள் அதிகம் பயன்படுத்தும் பொது சாலையின் அருகே புதிய  டாஸ்மாக் கடை திறக்க வேலைகள் நடந்து வருகிறது. இப் பகுதியில் கடை திறக்கக் கூடாது என பொதுமக்கள் முதல்வரின் தனி பிரிவு மற்றும் அனைத்து அரசுத் துறைக ளுக்கும் மனு அனுப்பியுள்ளார்கள். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில்: இப்பகுதி யில் உள்ள  நான்கு கிராம மக்கள் உடுமலைக்குச் செல்ல  இந்த சாலையைத் தான் பயன்படுத்துகிறோம். மேலும் அனைவருக்கும் போதுமான அளவில் பேருந்து வசதி இல்லை, பல மணி நேரத்துக்கு ஒரு முறை தான் பேருந்து கள் இயக்கப்படுகிறது. இதனால் நாங்கள் உடுமலை மற்றும்  பிற கிராமங்களுக்கு இவ்வழியாகத் தான் இரு சக்கர  வாகனம் அல்லது நடந்து செல்கிறோம். இந்நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் எங்க ளுக்கு எவ்வித பாதுகாப்பும் இருக்காது. எனவே இங்கு  அமைக்கப்படும் மதுக்கடையை மூடுவதற்கு அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

ஆத்துப்பாளையம் வெங்கமேடு சாலையில் தெருவிளக்கு வசதி செய்ய கோரிக்கை

திருப்பூர், ஜூன் 23– திருப்பூர் மாநகரம் ஆத்துப்பாளையம் – வெங்கமேடு சாலையில் புதர்களை அகற்றி கூடுதல் தெரு விளக்கு கள் அமைக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  ஆத்துப்பாளையம் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர். ஆத்துப்பாளையம் மையக் கிளை மற்றும் மேற்கு கிளை  மாநாடுகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன. இம்மாநா டுகளில் ஆத்துப்பாளையத்தில் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி நிலையம், பூங்கா அமைத்திட வேண்டும், குப்பை, சாக்கடைகளை முறையாக அப்புறப்படுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மைய கிளைத் தலைவர் வெ.பாலாஜி, செயலாளர் எஸ். லோகேஸ்வரன், பொருளாளர் ஏ.மெய்யரசன், துணைச் செயலாளர் அருண்குமார், துணைத் தலைவர் பவித்ரன் ஆகி யோரும், மேற்கு கிளைத் தலைவர் சித்திக், செயலாளர் காளீ ஸ்வரன், பொருளாளர் முகமது இர்பான், துணைச் செயலா ளர் ஓம் பிரகாஷ், துணைத் தலைவர் சையது முகமது ஆகியோ ரும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் சந்தோஷ் தொடக்கி வைத் தார், ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள் வாழ்த்திப் பேசி னார். மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன் நிறைவுரை ஆற் றினார்.

கடன் பெற்றுத் தருவதாக நூதன மோசடி

திருப்பூர் ஜூன் 23- திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் அருண் என்பவர்  கடன் பெற்றுத் தருவதாக கூறி பொதுமக்களிடம் ஆதார்  கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற் றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு வங்கி  கடன் வழங்கப்பட்டது போல குறுந்தகவல் வந்துள்ளது. அவர்கள் வங்கிக் கணக்கில் 11,000 ரூபாய்  வரவு வைக்கப் பட்டு, அடுத்த நாளே அதில் 7,800 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு ஒரு லட்சம் வரை கடன்  வழங்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக கடன் தவ ணையை கட்ட வங்கி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.  இது குறித்து அருணை தொடர்பு கொள்ள முடியாத நிலை யில் இருப்பதால் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்த னர்.  இதைதொடர்ந்து புகாரின் பேரில் விசாரணைக்காக அருண் என்பவர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட  நிலையில் அவரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க காவல்துறையினர் அருணை காவல் துறை அனுப்பி வைத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அருணை காப்பாற்றுவதாக குற்றஞ் சாட்டி பொதுமக்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆதரவாக வந்த மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவிநாசியில் ரூ..43 லட்சத்துக்குப் பருத்தி ஏலம் 

அவிநாசி,ஜூன் 23 – அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில்  நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.42 லட்சத்து 91ஆயிரத்துக்குப் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆத்தூர், மலையப்பாளையம், சத்திய மங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி, அவிநாசி,  புளியம்பட்டி, குன்னத்தூர், மேட்டூர், கோபி, நம்பியூர் ஆகிய  பகுதிகளிலிருந்து 331 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 22 பருத்தி வியாபாரிகளும் பங்கேற் றனர்.  இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, பருத்தி வரத்து அதிகரித்து மொத்தம் 1374 பருத்தி  மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ. 9 ஆயிரம் முதல்  ரூ.10ஆயிரத்து 919 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2ஆயிரம் முதல்  ரூ.4 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.42 லட்சத்து 91ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற் றது.

இடிந்து விழும் நிலையில் ரேசன்கடை கட்டிடம் காளம்பாளையத்தில் மாற்று இடம் தர கோரிக்கை

திருப்பூர், ஜூன் 23 –  பொங்குபாளையம் ஊராட்சி காளம்பா ளையத்தில் உள்ள ரேசன் கடை (எண் 32 பிபி  116 பிஒய்) அமைந்துள்ள கட்டிடம் பழுத டைந்து மிகவும் மோசமாக இடிந்து விழக்கூ டிய அபாய நிலையில் உள்ளது. இக்கட்டி டத்தைப் புதுப்பிக்கும் வரை அருகாமை யில் உள்ள இ சேவை மையக் கட்டிடத்தில்  காலி அறையை ரேசன் கடைக்கு பயன்ப டுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியச்  செயலாளர் எஸ்.அப்புசாமி இது குறித்து  கோரிக்கை விடுத்தார். ஏற்கெனவே பொங் குபாளையம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றி பெருமாநல் லூர் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி, திருப் பூர் வடக்கு குடிமைப் பொருள் வட்டாட்சி யர்க்கும் அனுப்பி நான்கு மாதங்களுக்கு  மேல் ஆகிறது. எனவே உடனடியாக  அனுமதி வழங்கி ரேசன் கடையை மாற்று  இடத்தில் செயல்பட ஏற்பாடு செய்ய  வேண்டும் என கோட்டாட்சியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தறிக்கூடத்துடன் பசுமை வீடுகள் கட்டித் தர சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜூன் 23– திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி நெச வாளர்களுக்கு தறிக்கூடத்துடன் பசுமை வீடு கள் கட்டித்தருமாறு திருப்பூர் மாவட்ட கைத் தறி நெசவாளர் சங்கம் (சிஐடியு) கோரி யுள்ளது. சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் கே.கோபால் தலைமையில் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் என். கனகராஜ், நிர்வாகிகள் கே.திருவேங் கடசாமி, வைஸ் சுப்பிரமணியம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தனியார் கைத்தறி நெச வாளர்களுக்கு தறிக்கூடத்துடன் பசுமை வீடு கள் கட்டித் தர வேண்டும், குறிப்பாக பல்ல டம் வினோபா நகர் மக்களுக்கு இந்த வீடு கள் கட்டித் தர வேண்டும், கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப கைத் தறி நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும், ஒன்றிய அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி ஜூலை 17ஆம் தேதி பல்லடத்தில் கோரிக்கை மாநாடு நடத்துவது என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திருப்பூர்காரர் போட்டி

திருப்பூர், ஜூன் 23- ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் இந்திய குடி யரசுத் தலைவர் தேர்தலில் திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த முகமது முத்து  போட்டியிடப் போவதாக வும், தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், ஆந் திர முதல்வர் மற்றும் பாஜக வின் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாகவும் வியாழக்கிழமை கூறினார். முன்னதாக மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து விட்டு நிருபர் களிடம் இதை கூறினார்.