districts

img

கந்துவட்டி வன்கொடுமையால் உயிரை மாய்த்த அவிநாசி பெண்ணின் கணவருக்கு அரசு வேலை

அவிநாசி, டிச.1-  அவிநாசி அருகே ராயபாளையம் பகுதி யைச் சேர்ந்த, கொசு ஒழிப்பு பணியாளர் பரிம ளா சில மாதங்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண் டார். இப்பிரச்சனையில் தலையிட்டு நியா யம் கிடைக்கப் போராடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சி காரணமாக பரிமளா வின் கணவருக்கு அரசு வேலை கிடைத்தது. அவிநாசி அருகே ராயம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் சந்திரன் (35). பனியன் நிறு வனத் தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (30). அவிநாசி பேரூராட்சியில் ஒப்பந்த சுகா தார ஊழியராக பணியாற்றி வந்தார்.  இவர் களுக்கு சுதேசி என்ற மகனும் தேவதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சந்தி ரன், அதே பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவ ரிடம் ரூ.27 ஆயிரம் கந்துவட்டிக்கு வாங்கி இருந்தார். கடனை திரும்ப செலுத்தச் சொல்லி தனசேகரனும், அவரது தாயார்  பூவாத்தாளும் பரிமளாவை சாதிப் பெய ரைச் சொல்லி மிகவும் அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மன முடைந்த பரிமளா வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.  இச்சம்பவத்தில் தீண்டாமை ஒழிப்பு முன் னணி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் இறந்த பரிமளாவிக்கு நீதி கேட்டுப் போரா டினர்.

தனசேகரனையும், அவர் தாய் பூவாத் தாளையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தி லும், கந்துவட்டி தடைச் சட்டத்திலும் வழக்குப் பதிந்து கைது செய்யவும், பரிமளா குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக் கவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தனசேகரனை காவல் துறையினர் கைது செய்தனர். இழப் பீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், பரிமளா குடும்பத்திற்கு வேலை  கொடுப்பது பற்றி அரசு முடிவு செய்யும் என்று  தெரிவித்தனர். அத்துடன் பரிமளாவின் குடும்பத்திற்கு சிஐடியு உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 12ஆயிரத்து 600 ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பரிமளாவின் கணவருக்கு சேவூர் ஆதிதிராவிடர் நல விடு தியில் சமையலராக பணி நியமனம் வழங் கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கனகராஜ், ஒன்றிய தலைவர் முருகேஷ், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முத்துசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வர மூர்த்தி, சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பி.பழனிச்சாமி, வையா புரி, சாலைப் பணியாளர் சங்க மாவட்ட நிர்வா கிகள் ராமன், கருப்பன் உள்ளிட்டோர் சந்தி ரனை சந்தித்தனர். அப்போது பரிமளாவின் குடும்பத்தினர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.