districts

img

திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் மீன் பிடிக்க தடை

திருப்பூர், ஜூன் 26- நஞ்சராயன் குளத்தில் மீன் பிடிப் பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து  செய்து திருப்பூர் வட்ட மீனவர் கூட்டு றவு சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பெரியபா ளையம் பகுதியில் 480 ஏக்கர் பரப் பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இக்குளத்துக்கு உள்நாடு மற்றும்  வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்க ணக்கில் பறவைகள் வந்து செல்கின் றன. நஞ்சராயன் குளத்தை பற வைகள் சரணாலயமாக அமைக்க தமிழக அரசு கடந்த ஆண்டு செப். மாதம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், 7.5 கோடி அரசு நிதியைப் பயன்படுத்தி நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் தெரி வித்திருந்தார். இதையடுத்து, நீர்வ ளத்துறையின் கீழ் பவானி வடிநில  கோட்டத்தின் பராமரிப்பில் இக்குளம்  இருந்த நிலையில் பறவைகள் சரணா லயமாக அறிவிக்கப்பட்ட பின் வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.  இந்நிலையில், திருப்பூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு, குளத் தில் இருந்து மீன் பிடிக்க 5 ஆண்டு  குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஓராண்டு குத் தகை காலம் வருகிற 30 ஆம் தேதி யுடன் முடிகிறது. இக்குளத்தில் மீன்  பிடிப்பதன் வாயிலாக, பறவைகளுக் கான இரை இல்லாமல் போய்விடும் என்பதால் மீன் பிடிக்க தடை விதிக்க  வேண்டும் என, இயற்கை ஆர்வ லர்கள் வலியுறுத்தி வந்தனர். மீன் பிடி  தொழில் என்ற பெயரில் சிலர் பற வைகளை வேட்டையாடுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து குளத் தில் வணிக ரீதியாக மீன் பிடிக்கும்  ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என  திருப்பூர் வனக்கோட்ட ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்கு னர், கீழ் பவானி வடிநில கோட்ட  செயற்பொறியாளருக்கு பரிந்து ரைத்தார். அதன் அடிப்படையில் மீன்  பிடிப்பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து செய்து திருப்பூர் வட்ட மீனவர்  கூட்டுறவு சங்கத்துக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. மீன் பிடி குத்தகை உரி மம் தொடர்பாக எவ்வித விண்ணப் பமும் பரிந்துரை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.