நிபந்தனை ஜாமீனை மீறியவர் கைது
திருப்பூர், ஜூலை 11- நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளி வந்த வர், நிபந்தனைப்படி காவல் நிலையத்தில் கையெழுத்தி டாமல் தலைமறைவானதால் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று, பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் வினோத் கண்ணா உட்பட 5 பேர் காளிராஜா என்பவரை தாக்கியுள்ளனர். காளிராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வினோத் கண்ணா, கள்ளழகர், தமிழரசன், பிரவீன் குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருப்பூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் 5 பேரும் நிபந்தனை ஜாமினில் வெளி வந்தனர். தினந்தோறும் திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண் டும். இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கள்ள ழகர் (24) என்பவர் கையெழுத்திடாமல் தலைமறைவாகி யுள்ளார். இதையடுத்து நீதிமன்றம் கள்ளழகர் மீது பிடி ஆணை உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த கள்ளழகர் கைது செய்யப்பட்டு புதனன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
பிளாஸ்டிக் பயன்பாடு 5 கடைகளுக்கு அபராதம்
உதகை, ஜூலை 11– தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருட் கள் பயன்படுத்தியதாக 5 கடைகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நகரில் வருவாய் துறை சார்பில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன் பாடு குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆய்வின் போது கடைகளில் மறைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அபராதம், ‘சீல்’ நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, உதகை வருவாய் துறை சார்பில் துணை தாசில்தார் சுப்ரமணி தலைமையில் உதகை மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்துவது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வில், 5 கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டதை அடுத்து, ஒரு கிலோ தடை செய் யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா, 2 ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் அப ராதம் விதிக்கப்பட்டது.
ஈரோட்டில் பெரும் தீ விபத்து
ஈரோடு, ஜூலை 11- ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஹார்டு வேர் கடையில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பேருந்து நிலையம் அருகே சத்தி சாலையில் பரணி பைப் கடை (ஹார்டுவேர்) உள்ளது. இக்கடையை ஒட்டி பின்புறத்தில் உள்ள குடோனில் மின்சாரக் கசிவின் காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட் டது. கடையினுள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் அதி கம் இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவ லறிந்து, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு வாகங் ்கள் வந்து தொடர்ந்து தீயை அணைக்க முயன்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.
உதகை படகு இல்ல ஏரியை சுத்தப்படுத்த ஆய்வு
உதகை, ஜூலை 11- உதகை படகு இல்லம் ஏரியின் நீரை சுத்திகரிப்பது தொடர்பாக அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா புதனன்று ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச சுற்றுலாத் தலமான உதகை யில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள் தோறும் வந்து செல்கின்றனர். இங்கு உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்று லாப் பயணிகள் அதிகயளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், படகு இல்லம் ஏரியின் நீர் பச்சை நிறமாக மாறி உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண் டும் என சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் அறிவுறுத்திருந்தார். இதைய டுத்து, அணு விஞ்ஞானி டேனியல் செல் லப்பா படகு இல்ல ஏரியில் புதனன்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், படகு இல்ல ஏரி நீர் பல ஆண்டுகளாக தேங்கி நிற்பதால் பச்சை நிறமாக மாற்றியுள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணமா என தற்போது, 10 இடங்களில் இருந்து ஆய்வுக் கான நீரை சேகரித்துள்ளோம். மேலும், ரூ.7.5 கோடி மதிப்பில் நீரை சுத்திகரிக்க சுத்திக ரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக வும், அதற்கு முன் மாதிரி சோதனைகள் மூலம் எவ்வாறு தூய்மைப்படுத்தலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார். இதில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கூடுதல் ஆட்சியர் கௌசிக், உதகை நக ராட்சி ஆணையர் ஏகராஜ், மாசுக் கட்டுப் பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் ஜனார்த னன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் சுதாகர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
3 ஆண்டுகளில் 142 நியாய விலைக்கடைகள் திறப்பு
சேலம், ஜூலை 11- சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு களில் 142 புதிய நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி கூறுகையில், மாவட் டத்தில் 1,262 முழுநேர கடைகளும், 470 பகுதி நேரம் கடைகள் என மொத்தம் 1,732 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலைக்கடைகளுடன் 10,99,898 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற் றும் பாமாயில் ஆகியவை மாதம் சராசரி யாக 21,200 மெட்ரிக் டன் அளவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப் பட்டு வருகின்றன. மேலும், புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்க ளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 81,652 மின்னணு குடும்ப அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் தங்குதடையின்றி தங்களது அத்தியாவசி யப் பொருள்களை பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் 106 முழு நேரம் மற்றும் 36 பகுதிநேரமாக மொத்தம் 142 புதிய நியாயவிலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 70,447 குடும்ப அட்டைகளில் உள்ள 2,39,884 குடும்ப உறுப்பினர்கள் பய னடைந்து வருகின்றனர். வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் 480 நியாய விலைக்கடைகளுக்கு, பல்வேறு அரசு திட்டத்தின்கீழ் புதிய கட்டடம் கட்டு வதற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.13.10 கோடி மதிப்பீட்டில் 103 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப் பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 470 நியாய விலைக்கடைக ளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள் ளது, என்றார்.
சிறை கைதிகளுக்கு கணினிப் பயிற்சி
சிறை கைதிகளுக்கு கணினிப் பயிற்சி சேலம், ஜூலை 11- சேலம் சிறையிலுள்ள கைதிகளுக்கு கணினிப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கான கணினி பயிற்சி வகுப்பு புதனன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சிறை கள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்கு நர் மகேஷ்வர் தயாள் வழிகாட்டுதலின்படி இந்தப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இவ்வகுப்பில் போட்டோஷாப், பிரின்டிங், எம்ஸ் பவா்பாயிண்ட், எக்ஸல், ஸ்கேனிங் போன்ற அடிப்படை கணினி பயிற்சிகள் கற்று தரப்படுகிறது. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் (பொ) ஜி.வினோத் கூறுகை யில், இந்தப் பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ள நன்னடத்தை சிறைவாசிகள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுத்த கணினித் திறன் வாய்ந்த சிறைக் காவலர்கள் மூலம் சிறை வாசிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். ஞாயிறு விடுமுறை தவிர மற்ற ஆறு தினங்களிலும் சிறைவாசிகளுக்கு கணினிப் பயிற்சி வழக்கப்படும். மேலும் வரும் காலங்களில் கணினிப் பயிற்சி நிறுவனம் மூலம் சிறைவாசிகளுக்கு டிப்ளமோ வகுப்பு நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழக் கப்படும். இப்பயிற்சி வகுப்பு, சிறைவாசிகளின் விடுதலைக்கு பின்னர் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உறுதுணை யாக இருக்கும், என்றார். இதனிடையே, கணினி பயிற்சி துவக்க விழாவில் 40 சிறை வாசிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் உதவி சிறை அலுவலர் பிரபாகரன், காவல் உதவி ஆய்வா ளர் (தொழில்நுட்பம்) ஜெயமுருகராஜா, மனநல ஆலோ சகர்கள் செல்வகுமார், மார்டின் விமல்ராஜ், சமூகவியல் நிபு ணர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்!
எடப்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்! சேலம், ஜூலை 11- எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு கிராமத்தில் தோட்டத் தில் கட்டியிருந்த பசுவை சிறுத்தை வேட்டையாடியதால் அப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட பக்க நாடு ஊராட்சி, சன்னியாசி முனியப்பன் கோவில் அருகிலுள்ள ஓடுவங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமியின், தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு கடந்த ஜூன் 7 ஆம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அவர் ஆட்டினை தேடிச் சென்ற போது, சற்றுத் தொலைவில் உள்ள வனப்பகுதியில் இறந்து கிடப்பதும், அதன் உடலில் பெரும் பகுதியை அடை யாளம் தெரியாத விலங்கு தின்று இருப்பதும் தெரிய வந்தது. சந்தேகமடைந்த வனத்துறையினா், அதன் மாதிரிகளை சேக ரித்து ஆய்வுக்கு அனுப்பினர். பசுமாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றம் தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்து றையினர், அங்கு பதிவாகியிருந்த விலங்கின் கால் தடங்க ளைப் பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர்.
வெள்ளை பூண்டு வரத்து குறைவு
உதகை, ஜூலை 12– வெள்ளை பூண்டு சீசன் இல்லாததால் வரத்து அடியோடு குறைந்துள்ளதால், உதகையில் பூண்டு ஒரு கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகு படிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப் பாக, இங்கு வெள்ளை பூண்டு அதிக காரத் தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாக உள்ளது. இந்த பூண்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களி லும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை பொய்த்ததால் குறைந்தளவிலான வெள்ளை பூண்டு பயிரி டப்பட்டது. அறுவடைக்கு தயாரான வெள்ளை பூண்டுகளை விவசாய நிலங்களில் தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பப்பட்டது. நடப் பாண்டில் குறைந்தளவில் வெள்ளை பூண்டு அறுவடையால் கடந்த சில நாட்களாக கிலோ கணக்கில் வெள்ளை பூண்டு உதகை மார்க் கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படு கிறது. பூண்டு வரத்து அடியோடு குறைந்த தால், புதனன்று நிலவரப்படி, உதகை பூண்டு கிலோ, 500 ரூபாய், பிற மாநில பூண்டு கிலோ, 200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகி றது. இதற்கு முன் உதகை வெள்ளைப் பூண்டு கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட் டது.
தைவான் நாட்டுடன் கைகோர்க்கும் தமிழக ஜவுளித்துறை
கோவை, ஜூலை 11- தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியை மேம்ப டுத்த தைவான் நாட்டு ஜவுளி உற்பத்தி யாளர்களுடன் கைகோர்த்து உள்ளது. தைவான் நாட்டு தொழில் முனைவோர் களுடன் தமிழக ஜவுளித் தொழில் அமைப்பி னர் சிஐஐ அமைப்பினருடன் கலந்து கொண்ட கருத்தரங்கு, கோவை சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் உண வகத்தில் நடைபெற்றது. இதில் தைவான் நாட்டு தொழில் அமைப்பினருக்கு தேவை யான ஜவுளித் தொழில் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து கலந்துரையா டபட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த சி.ஐ.ஐ அமைப்பின் தமிழ் நாடு நெசவுத்துறைக் குழு துணை தொகுப்பா ளர் வேல்.கிருஷ்ணா மற்றும் கோபி கிருஷ்ணா கூறியதாவது, தைவான் நாட்டு ஜவுளித் தொழில் குறித்து நான் உள்பட 12 தொழில் அமைப்பினர்களுடன் தைவான் நாட் டிற்க்கு சென்று அங்குள்ள ஜவுளிக் கட்ட மைப்புகளை கண்டு ஆய்வு செய்ததுடன் அவர்களின் தொழில் துறைக்கு ஏற்ற தமிழ் நாட்டு உற்பத்திகளை காட்சி படுத்தினோம். எங்களுக்கு தைவான் டெக்ஸ்டைல் பெடரே ஷன் என்ற பழைமையான அமைப்பு எங்க ளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. இதனையடுத்து, தமிழகத்தின் டெக்ஸ்டைல் துறையின் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச் சிகளின் உற்பத்திகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கபட்டது. இதனைத் தொடர்த்து அவற்றை நேரில் காண தைவான் நாட்டு உற்பத்தியாளர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் இங்குள்ள பல்வேறு நிறுவனங்களை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து பின்னர் தமிழக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வும். இதனால், இருநாட்டு ஜவுளி துறை மேம் படுவதுடன் பல லட்சக்கணக்கானவர்க ளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து மீண்டும் நலிவடைந்த நிலையில் உள்ள ஜவுளித் துறை முன்னேற்றம் காணும் என்று நம்புவதாக தெரி வித்தனர். இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் ஜவு ளித்துறை நிச்சயம் புத்துயிர் பெறும் என நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக அரசின் நெசவுத்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.
ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு
கோவை, ஜூலை 11- தொண்டாமுத்தூர் அருகே ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வனவிலங் குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், வீட்டு வளர்ப்பு விலங்குகளைகள் வேட்டையாடி செல்வது வாடிக்கையாகி விட்டது. வியாழ னன்று காலை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவருக்கு சொந்த மான ஒர்க் ஷாப்பில் இருந்த இரண்டு ஆடு களை சிறுத்தை கடித்துக் கொன்றதாக தக வல் பரவியது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆடுகள் காயத்து டன் இறந்து கிடந்ததை பார்த்து ஆய்வு செய்தனர். சிறுத்தை தாக்கி தான் உயிரிழந் ததா? நாய்கள் கடித்து இறந்துள்ளதா என்பது குறித்து, பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்த பின்னரே உறுதி செய்ய முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகள்
குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகள் கோவை, ஜூலை 11- கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் சாலையை கடந்து செல்லும் காட்டு யானை கூட்டம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்க ளில் வைரலாகி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மருத மலை அதனை சுற்றி உள்ள வடவள்ளி, ஐ.ஓ.பி காலனி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப் போது ஊர்களுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக்கி விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை மற்றும் இரண்டு காட்டு யானைகள் மருதமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் மலைச் சாலையில் யானைகள் கடந்து சென்று வந்தன. இந்நிலையில் வியாழனன்று அதிகாலை பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் மலைச் சாலையை கடந்து சென்று உள்ளது. அதனை கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகி றது.
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது கோவை, ஜூலை 11- வடவள்ளி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில், நூலகப் பொறுப்பு ஆசிரி யரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்த விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், வடவள்ளியை அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 800 - க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நூலக பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ் என்பவர் பணி புரிந்த வந்தார். இந்நிலையில், அப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி, தனது. பெற்றோரிடம் தெரிவித்து உள் ளார். மேலும், அவர் பள்ளி வளாகத்தில் 2 சிறுமிகளை பாலி யல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது, பாதிக்கப் பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், பள் ளிக்கு வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளியில் விசா ரணை மேற்கொண்டனர். இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரி யரை கைது செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போ வதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எச்சரிக்கை விட்டிருந்தது. இந்நிலையில், கோவை மாநகரக் காவல் துறை அதிகாரி கள், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். குற்றத்தின் உண்மைத்தண்மையை உறுதி செய்த பின்னர் ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பள்ளி நூலகப் பொறுப்பு ஆசிரியரை போலீ சார் கைது செய்தனர். மேலும், ஆசிரியரிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ஆக.2,3 ஆகிய தினங்களில் வல்வில் ஓரி விழா
நாமக்கல், ஜூலை 11- கொல்லிமலையில், ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரு தினங்களில் வல்வில் ஓரி விழா நடைபெற உள்ளதென ஆட்சி யர் ச.உமா அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற் றும் மலர் கண்காட்சி ஆகிய விழாக் களை கொண்டாடுவதற்கான ஆலோச னைக்கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா பேசுகையில், கடையேழு வள் ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர் களை போற்றிடும் வகையில், ஆண்டு தோறும் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதே போல் இந்த ஆண்டும் வரும் ஆகஸ்ட் 2, 3 ஆகிய 2 நாட்கள் கொல்லிமலை யில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதைத்யொட்டி அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக் கப்பட வேண்டும். காவல் துறையினர் காரவள்ளியில் சோதனைச்சாவடிகள் அமைத்து, கொல்லிமலை மலைப் பாதையில் லாரி மற்றும் கனரக வாக னங்கள் செல்வதை தடை செய்திட வும், இருசக்கர வாகனங்களில் தலைக வசம் அணியாமல் வருபவர்களை அனு மதிக்கக்கூடாது. பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் சோதனை மேற் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழா நடைபெறும் 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற் பாடு செய்திட வேண்டும். ஊரக வளர்ச் சித்துறையினர் கொல்லிமலையிலுள்ள முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள் ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுமதி இன்றி மதுக்கடை- அமைச்சர் எச்சரிக்கை
அனுமதி இன்றி மதுக்கடை- அமைச்சர் எச்சரிக்கை கோவை, ஜூலை 11- அனுமதியின்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமை யாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட் டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி வியாழ னன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துச்சாமி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2 கோடியே 49 லட்சம் மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவிநாசி மேம் பால பணிகளும், சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவுப்படுத்தப்படும். அரசு மதுபான கடைகளை குறைப்ப தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது 500 கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்நி கழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி எம்பி., மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.