districts

img

வாலிபர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி வைப்பு!

கோவை, மே 19- கோவையில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் நடை பெற்ற இரத்ததான முகாமில் இளை ஞர்கள் பலர் ஆர்வத்துடன் முன்வந்து இரத்ததானம் செய்தனர். கோவை கணபதிபுதூர் இன்ஜினி யரிங் சங்க அலுவலகத்தில்  ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கோவை வடக்கு  நகரக்குழு மற்றும் கோவை அரசு  மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்ற இரத்த தானம் வழங்கினர். 40 யூனிட் ரத்தம்  சேகரிக்கப்பட்டு, கோவை அரசு மருத் துவமனையின் இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்வுக்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வடக்கு நகரக்குழு  தலைவர் நிசார் அகமது தலைமை  வகித்தார். நகரக்குழு பொருளாளர்  வி.சந்திரசேகரன் முகாமை துவக்கி வைத்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மற்றும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் முன்னாள்  மாவட்ட நிர்வாகிகள் சி.பத்மநாபன்,  என்.ஆர்.முருகேசன், ஆர்.சோமசுந் தரம், எஸ். நாராயணசாமி ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்க ளாக பங்கேற்றனர்.  மேலும், வாலிபர் சங்கத்தின்  மாவட்டப் பொருளாளர் தினேஷ்  ராஜா, மாவட்ட துணைச் செயலா ளர் ஏ.என்.ராஜா, வடக்கு நகரக்குழு  செயலாளர் ஆர்.விக்னேஷ், நகரக் குழு துணைச் செயலாளர்  ஷ்யாம் வில்சன், தோழர்கள் எம். அருண் ராஜ், எஸ்.ராகேஷ், ஜி.  அலெக்ஸ் பாண்டியன், எஸ்.பிரவீன்,  எம்.தினேஷ், பி.கதிரேசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;