districts

img

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை, மே 23- ஆனைமலை அரசுப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் வாகன பழகுநர் உரிமம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வா யன்று நடைபெற்றது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட் டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் வாகன பழகுநர் உரிமம் (LLR) விழிப் புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செவ்வாயன்று தொடங்கி வைத் தார். கிராமப்புற மக்களை சென்றடையும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் 30 ஆண்கள், 20 பெண் கள் என 50 பேருக்கு பழகுநர் உரிமம் வழங் கப்பட்டது. மேலும், பயன்படுத்தப்பட்ட வாக னம் விற்பனை செய்தபின், வாகனத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் கையொப்பம் இட்ட படிவம் 29, 30-யை உரிய கட்டணம்  செலுத்தி சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்திற்கு 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். வாகனத்தை வாங்கிய வர் 30 நாட்களுக்குள் வாகனத்தை உரிமை மாற்றம் செய்து கொள்ள வேண்டும். தவ றும் பட்சத்தில் வாகனத்தை விற்பனை செய்த வர் வாகனம் தொடர்புடைய அனைத்து வில்லங்களுக்கும் உட்பட்டவராகிறார். இத னால் விபத்து, காவல். நிலைய குற்ற வழக்கு போன்றவற்றிற்கு வாகனம் விற்றவர் பொறுப்பாக்கப்படுகிறார். இது தொடர்பாக வும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. இம்முகாமில் வட்டார போக்குவரத்து அலுவலர் பி.முருகானந்தம், காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.கீர்த்திவாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக உதவி மேலா ளர் பி.ஜோதிமணி, ஆனைமலை அரிமா சங்க  தலைவர் வி.ஜவகர்பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.