அவிநாசி, செப்.11 - அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நாள் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. அரசுப் பெண்கள் பள்ளி வளாகத்தில் பாரதியார் சிலை இருந் தும் அப்பள்ளி நிர்வாகம் பாரதியார் விழாவை கொண்டாடுவது பற்றி கண்டுகொள்ளாமல் விட்டது, குழந்தைகளிடம் எப்படி சுதந்திரப் போராட்ட வரலாற்றை கொண்டு செல்ல உத வும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர், பன்முகத் தன்மை கொண்ட தேசிய கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அவிநாசி கிளை சார்பில் அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாரதியாரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, வழக் கறிஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன், நல்லது நண்பர் அறக்கட்டளை நிர்வாகி ரவி ஆகியோர் மாலை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிஐடியு அவிநாசி பொதுத் தொழி லாளர் சங்கம் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் நிர்வாகிகள் சம்பத்குமார், தின கரன், நடராஜ், அருண், பழனிச்சாமி, உட்பட பலர் பாரதியின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் ஈஸ்வரன் பேசுகையில் திருப்பூர் மாவட் டத்தில் பாரதியின் திருவுருவ சிலை அவிநாசி யில் மட்டுமே உள்ளது. வருடம்தோறும் சொற்ப எண்ணிக்கை நபர்கள் மட்டுமே பிறந் தநாள் விழாவும், நினைவு நாளும் மரியாதை செலுத்தி வருகின்றோம். தற்பொழுது பள் ளிக்கூடமும் நடைபெற்று வருகிறது. மகத் தான கவிஞனுக்கு மரியாதை செலுத்துவதை பள்ளி நிர்வாகம் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பள்ளியின் முன்புற கதவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா மல் இருக்கவும், மாவட்ட நிர்வாகம் பாரதி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண் டும் என கோரிக்கை விடுத்தார்.