நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ச.உமா, வி.மாதேஸ்வரன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.