districts

img

அரசு போக்குவரத்து கழகத்தின் தொழிலாளர் விரோத போக்கு: சிஐடியு ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.26-  பொய் புகார் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இன்வாய்சில் திருத்தம் செய்ய அரசு போக்கு வரத்து தணிக்கையாளரின் தொழிற்சங்க விரோத போக்கை  கண்டித்து சிஐடியுவினர் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி 3ல் சிஐடியு சிடிசி கிளை செயலாளர் மணி கண்டன் மீது பொய்புகார் பதிவு செய்ய இன்வாஸ்சில் திருத் தம் செய்த தணிக்கையாளர் விஜயகுமார் மீது நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி சிஐடியு சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி போக்குவரத்து பணி மணை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில், திரளான அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்று கண்டன  முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொள் ளாச்சி கோட்ட மேலாளரை சந்தித்து தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கையும், தொழிற்சங்க விரோத போக்கையும் தனியாருக்கு சாதகமாக நடந்துகொள்ளும் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

;