சேலம், ஜூன் 26- சேலத்தில் நடைபெற்ற, போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணியில், கல்லூரி மாணவர்கள் சாலையில் நடன மாடியும், எமன் வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக சேலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி, ஐந்து ரோடு வழியாக சென்று ஜங்ஷனில் நிறை வடைந்தது. அப்போது, தமிழ்நாட்டில் போதைப்பொ ருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், மது இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற, பொதுமக்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தக்கூ டாது. போதைப்பொருட்களை பயன்படுத்தினால் ஏற்ப டும் தீங்குகள் குறித்து, சாலையில் நடனமாடியும், எமன், ‘ஸ்பைடர்மேன்’ உள்ளிட்ட வேடமணிந்தும் பொதுமக் களிடையே விழிப்ணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி யில் சேலம் காவல் துணை ஆணையர் எஸ்.பிருந்தா, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.