districts

சேலத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண்கள் பலி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணைக்குழு அமைப்பு

சேலம், ஏப்.12- சேலத்தில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்த 2 பெண்கள்  உயிரிழந்த நிலையில், சார் ஆட்சியர் தலை மையில் விசாரணைக்குழு அமைக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஓலைப்பட் டியை சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவ ரது மனைவி இந்துமதி (32). இவர்க ளுக்கு ஒரு மகள் உள்ளார். இதனி டையே 2 ஆம் முறை கர்ப்பமான இந்து மதி, கடந்த ஏப்.4 ஆம் தேதியன்று பிர சவத்துக்காக ஓமலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின் ஏப்.5 ஆம் தேதியன்று அறுவை  சிகிச்சை மூலம் அவருக்கு ஆண்  குழந்தை பிறந்தது. அதனைத்தொ டர்ந்து இந்துமதிக்கு குடும்ப கட்டுப் பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவர் மயக்கமடைந்து, உயி ருக்கு ஆபத்தான நிலை உருவாகியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுபோன்று ஓமலூர் அரசு மருத் துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு  செப்.13 ஆம் தேதியன்று கஞ்சநாயக் கன்பட்டி, காட்டூரைச் சேர்ந்த சண்முகம் மனைவி சோனியா (29) என்பவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதில் அவரது உடல்  நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது சோனியா பரிதாப மாக இறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இதேபோன்று இந்துமதியும் இறந்திருப்பதால் மருத்துவர்கள் அலட் சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்துமதி இறந்த மறு நாள் சேலம் அரசு மருத்துவமனையிலி ருந்து வந்த மருத்துவ குழுவினர், ஓம லூர் அரசு மருத்துவமனையில் இந்து மதிக்கு அளித்த சிகிச்சை முறை, சிகிச் சையின்போது வழங்கிய மயக்க மருந் தின் அளவு உள்ளிட்ட விபரங்கள் குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தி னர். இதுகுறித்து சேலம் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட நிர் வாகம் சார்பில் விசாரணை நடத்த சார் ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அவரது தலைமையில் இந்துமதிக்கு சிகிச்சை அளித்த மருத் துவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதுபோல் மருத்துவக்குழு வழங்கிய தகவல், பிரேத பரிசோ தனை முடிவு ஆகியவையும் ஆய்வு  செய்யப்பட உள்ளது. மேலும் இந்து மதியின் கணவர், அவரது பெற்றோர் ஆகியோரையும் அழைத்து ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது, என்றனர்.