districts

img

மார்ச் மாத இறுதியில் சேலம் - சென்னை இடையே விமான சேவை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., தகவல்

சேலம், மார்ச் 11- சேலம் - சென்னை இடையேயான விமான சேவை மார்ச் மாத இறுதியில், மீண்டும் துவங்கப்படும் என சேலம் விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர் எஸ்.ஆர்.பார்த்தி பன் எம்.பி., தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத் தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலை யத்தில், ஒன்றிய அரசின் உதான் திட்டத்தில் இயக்கப்பட்ட சேலம் - சென்னை பயணியர் விமான சேவை தற்போது தற் காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே திட்டத்தில் மீண்டும் விமான சேவையை தொடர விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சேலத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சேலம் விமான நிலைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், சேலம் விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர் பார்த்திபன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது.  இதில், சேலத்தில் இருந்து இரவு நேர விமான சேவையை துவங்க தேவையான பூர்வாங்க பணிகளை உடனடியாக தொடங்குதல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள சேலம் - சென்னை இடையேயான விமான சேவையை ஒன்றிய விமான அமைச்சகம் தெரிவித்தப்படி மார்ச் மாத இறுதியில் துவங்குதல், சேலத்திலிருந்து - சென் னைக்கு மாலை நேர விமான சேவை, சேலத்தில் இருந்து திருப்பதி, ஹைதராபாத், பெங்களூரு, கோவாவிற்கு  விமான சேவை துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்ட தாக எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., தெரிவித்துள்ளார்.