ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாஜக நிர்பந்தத்தால் அதிமுக ஆதரவு
துரை வைகோ பேட்டி திருப்பூர், ஜன.16 - ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ப தற்கு அதிமுக ஆதரவளிப்பதற்கு பாஜக நிர்பந்தமே காரணம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செய லாளர் துரை வைகோ கூறினார். திருப்பூர் சாமுண்டிபுரத்தில் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழ கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர் ஆர்.நாகராஜ் தலைமையில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சமத்துவ பொங்கல் திங்களன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற துரை வைகோ கட்சி கொடியை ஏற்றி, சமத் துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் ஒரு பகுதி யாக சாமுண்டிபுரத்தை சேர்ந்த புது மண தம்பதிகளுக்கு மதிமுக சார்பில் பொங்கல் சீர்வரிசைகளோடு, புத்த கங்களும், மரக்கன்றுகளும் வழங் கப்பட்டன. இதைத்தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக கூட திராவிட இயக்கம்தான், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பார திய ஜனதாவின் முழக்கத்தை அதி முகவும் ஆதரிக்கிறது. இன்று அதன் நிலை ஏன் இவ்வாறு ஆனது என்பதை அதிமுக கட்சி தலைவர்கள், தொண் டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழகம் மற்றும் தமிழ்நாடு குறித்து ஆளுநர் சர்ச்சை ஏற்படுத்தி வருவது ஆளுநர் சனாதனக் கொள் கைகளோடு செயல்பட்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந் திருப்பதாக குற்றம் சாட்டினார். கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் சமத்துவ பொங்கல் விழா நிகழ்வு கள் ஒருமைப்பாட்டை பாதுகாக்கின் றன. இதனை தொடர்ந்து மற்ற இயக் கங்களும் சமத்துவ பொங்கலை கொண்டாட முன்வர வேண்டும், என்று அவர் கூறினார். இந்த சமத்துவ பொங்கல் விழா வில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர்.
நகை திருட்டு
கோவை, ஜன.16- கோவை, அன்னூர் அருகே உள்ள செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள் ளது. இந்த கோவிலில் தங்க ராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நள்ளிரவில் இக்கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் கள், சாமி சிலையிலிருந்த 3 பவுன் நகையை கொள்ளை யடித்து சென்றனர். இதுகு றித்து அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாகனங்கள் மோதி விபத்து: மூவர் பலி
திருப்பூர், ஜன.16- திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து பழனி செல் லும் சாலையில் மைவாடி பிரிவு என்ற இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் (31), திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கதிரேசன் (22) இருவரும் உடுமலையிலிருந்து பழனி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது போள ரப்பட்டியை சேர்ந்த பாலச்சந்தர் (35) எதிரே உடுமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மை வாடி பிரிவு அருகே எதிர்பாராத விதமாக இவர்கள் பயணித்த இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதிக் கொண் டன. இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் பரிதாப மாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் காவல் துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.
தொழிலாளி மீது தீ வைப்பு
கோவை, ஜன.16- சிங்காநல்லூர் அருகே சாலையோரம் தூங்கி கொண்டி ருந்த தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர் செல்வோர் பேருந்து, ரயில் நிலையங்களில் காத்திருந்தனர். சிங்கா நல்லூர், ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் கூலி தொழிலாளி சுரேஷ் (30) என்பவர் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒரு வர் திடீரென சுரேஷ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றார். தீ சுரேசின் உடல் முழுவதும் பரவி யது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த னர். 90 சதவிகிதம் உடல் கருகிய நிலையில், சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக தீ வைப்பு சம்ப வம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? தீ வைத்த நபர் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
5 டன் கொப்பரை விற்பனை
திருப்பூர், ஜன.16- வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 5 டன் தேங் காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது. 5,000 தேங்காய்கள் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.80 லட்சம் அந் தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப் பட்டதாக தெரிவிக்கப்பட் டது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:46.19/60அடி
நீர்வரத்து:829கன அடி
வெளியேற்றம்:1101கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 83.27/90அடி.
நீர்வரத்து:175கனஅடி
வெளியேற்றம்:840கன அடி
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திமுக மரியாதை
அவிநாசி, ஜன.16- அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக் குட்பட்ட பெரியாயிபாளையத்தை சேர்ந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதி யிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து காலைநேரத்தில் பொதுமக்க ளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சேது மாதவன், செல் வம், அண்ணாதுரை, மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சு: தில்லி போலீசாரிடம் உச்ச நீதிமன்றம் விளாசல்
புதுதில்லி, ஜன.16 - முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்ய 5 மாதக்கால தாமதம் ஏன்? என்று தில்லி காவல்துறையிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சர மாரியாக கேள்வியெழுப்பி உள்ளனர். மேலும், இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், இதுவரை எத்தனை பேரை கைது செய் துள்ளீர்கள்..? எனவும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். தில்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘இந்து யுவவாஹினி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சுதர்சன் தொலைக்காட்சி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹான்கே தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பலரும் பேசினர். இதில் முஸ்லிம்களை நமது சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ரீதியில் சில இந்து மதத் தலைவர்கள் பேசி னர். இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களிலும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தில்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ததை சுட்டிக்காட்டி உச்ச நீதி மன்றத்தில் சமூக செயற்பாட்டாளரும், மகாத்மா காந்தியின் பேரனுமான துஷார் காந்தி மனுத்தாக்கல் செய்தார்.
“வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் படுகொலைகளைத் தடுக்க வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மூத்த காவல்துறை அதிகாரி கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் அவர் வலியுறுத்தினார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி போலீசாரை நோக்கி நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். “சம்பவம் நடந்து 5 மாதங்களுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறீர்களே.. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த தில்லி போலீசார், “நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தியதால் தாமதம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தனர். அதனைக்கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “சரி.. எப்ஐஆர் பதிவு செய்யதான் தாமதம் ஆகி விட்டது. எப்ஐஆர் பதிவு செய்தே 8 மாதங்கள் ஆகிவிட்டதே இத்தனை மாதங்களில் இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? எத்தனை பேரை கைது செய்திருக்கிறீர் கள்? யார் யாரிடம் விசாரணை நடந்திருக்கிறது? வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?” என மேலும், அடுக்க டுக்கான கேள்விகளை எழுப்பினர். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் திணறினார். அதன் பிறகு, போலீ சார் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக அவர் உறுதி யளித்தார்.
பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக்க முயற்சிப்பதா?
சென்னை, ஜன.16- மலம் கலந்த குடிநீரை பருகியதால் பாதிக்கப்பட்ட தலித் மக்களை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும். அது அந்த மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாயி ருக்கும் என்று எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். இதுகுறித்து எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ச.பாலமுருகன், அழகிய பெரியவன், சுகிர் தராணி, யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு: தமிழர் திருநாளாம் பொங்கலை நாம் உற்றார் உற வினரோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வேங்கைவயல் தமிழர்களாகிய தலித்துகள் மலம் கரைக் கப்பட்ட தண்ணீரில் எப்படி பொங்கல் வைப்பதென மருகிக் கிடக்கும் அவலத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அந்தச் சிற்றூரில் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வேறுசில தீண்டாமைக்கொடுமைகள் புதுக்கோட்டை மாவட்ட நிர் வாகத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும், அவர் களது குடிநீரில் மலத்தைக் கலந்த கொடூரர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. விரைவில் கைது செய்யப்படு வார்கள் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அங்கிருந்து வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன. குற்றவாளிகளைத் தேடி கைது செய்வதற்காக அமைக்கப் பட்ட காவல்துறையின் தனிப்படை, வன் கொடுமைக்கா ளான தலித்துகளையே குற்றவாளிகளாக்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது. தலித்துகளால் சந்தேகத்துக்குரிய குற்றவாளி கள் என சுட்டப்படுவோரை சுதந்திரமாக நடமாட அனுமதித்து விட்டு, விசாரணை என்கிற பெயரில் தலித்துகளை வரவ ழைத்து மிரட்டியும் அடித்துத் துன்புறுத்தியும் பொய்யான வாக்குமூலங்களைப் பெறுவதற்கு தனிப்படை முனைப்பு காட்டிவருகிறது. அவர்களது குடிநீர்த் தொட்டியில் அவர் களே மலத்தைக் கலந்துவிட்டு அதே தண்ணீரை குடித்துக் கொண்டிருப்பதற்கு மனம் ஒப்புமா என்கிற குறைந்தபட்ச தர்க்கத்தின் படியாகக்கூட யோசிக்காமல், இப்படி தலித்து கள் மீதே பழிசுமத்துவதானது மறுபடியும் மலம் கலப்பதற்கு ஈடான குற்றமாகும். காவல் துறை தனிப்படையின் இந்த அட்டூ ழியத்தை பாதிக்கப்பட்ட மக்கள் துணிச்சலுடன் ஊடகங்கள் வழியே வெளிக்கொணர்ந்துள்ளனர்.
மனிதமாண்புகளுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை யையும் எதிர்க்கிற எழுத்தாளர்களும் கலைஞர்களுமாகிய நாங்கள் இவ்வேளையில் தன்மதிப்புக்காகவும் கண்ணிய மான வாழ்வுக்காகவும் போராடிவருகிற வேங்கைவயல் தலித்துகளுக்கு எமது ஒருமைப் பாட்டைத் தெரிவிக்கி றோம். தாங்கள் வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட மக்க ளைச் சந்திப்பது அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையை யும் அளிப்பதாயிருக்கும். விசாரணையின் மீது தங்களது நேரடி கண்காணிப்பு தேவை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களும் வேங்கைவயலில் முகாமிட்டு அப்பகுதியை தீண்டாமைக் கொடுமைகளற்ற பகுதியாக்குவதற்கான பணி களில் ஈடுபடுமாறு தாங்கள் பணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை குடி மக்கள் தமது சொந்த வாழ்வில் உணர்வதற்கு எதிராக சாதிய வன்மத்துடன் நிகழ்த்தப்படும் குற்றங் களை ஒடுக்குவதற்கு அரசு நிர்வாகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக ளும் இணைந்து செயல் படுவதை தாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். சாதிய வன்கொடுமையில் ஈடுபடுவோரும் அவர்களுக்கு உடந்தையானோரும் அரசியல் சாசனத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாக கருதப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி, சேவைகள், இட ஒதுக்கீடு முதலானவற்றை அரசு திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிக்க வேண்டும். சாதிய மனோபாவத் திலிருந்து மக்களை விடுவிப்பதற்கான செயல்திட்டத்தை மாநில அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
ஷார்ஜாவுக்கு சென்ற கரும்பு, வெல்லம்
கோவை, ஜன.16- கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. இந்நி லையில், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக, கோவையிலி ருந்து விமானத்தில் கரும்பு, மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டது. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். கடந்த ஜன.8 ஆம் தேதி முதல் கரும்பு அனுப்பப் பட்டது. 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்கு கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட் களும் அடங்கும். இந்த பொருட்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு, விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன, என்றனர்.
டீசல் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
உதகை, ஜன.16- குன்னூரில் டீசல் என் ஜின் ரயில் சோதனை ஓட் டம் துவங்கியது. நீலகிரி மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளா கப் பயன்படுத்துவதால் ஏற் படும் புகை மற்றும் கரித்து கள்களில் இருந்து வெளியே றும் நெருப்புத் துகள்களால் தீ விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் வகையிலும், நிலக் கரி தட்டுப்பாடு காரணமாக வும் குன்னூா் ரயில்வே பணி மனையில் நீராவி மூலம் இயங்கும் 2 ஆவது என்ஜினை குன்னூரில் வடிவமைத்தி ருந்தது. இந்த என்ஜின் முதல் முறையாக 160 பயணிகளு டன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது.