எண்ணெய் அளவையாளர்களின் கூலி உயர்வு உடன்பாடு
ஈரோடு, செப்.13- நல்லெண்ணெய் மில்களில் எண்ணெய் அளக்கும் தொழிலாளர்களான அளவையாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது. ஈரோட்டில் 25க்கும் மேற்பட்ட நல்லெண்ணெய் உற் பத்தி செய்து விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் உள்ளன. எண்ணெய் ஆலைகளில் உற்பத்தியான எண்ணெயை அள விட்டு தகர டின், பிளாஸ்டிக் கேன், பிளாஸ்டிக் பவுச் ஆகியவற்றில் நிரப்பும் பணியில் எண்ணெய் அளவை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலாளர் கள் மத்தியில் சிஐடியு சங்கம் செயல்பட்டு வருகிறது. இத் தொழிலாளர்களுக்கான ஊதியம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமையாளர் சங்கங்களுடன் பேசி தீர்வு காணப் படும். இந்நிலையில், கடந்த ஒப்பந்தம் காலாவதியான நிலை யில் புதிய கூலி உயர்வு கோரிக்கை விடப்பட்டது. அதன்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 கிலோ டின் எடை போட்டு சீல் அடித்து அடுக்க ரூ.4.50லிருந்து 5.50 கொடுப்பது, கயிறு கட்டி, லேபிள் ஒட்டி, பில்டர் செய்வது, பெட்டி போடுவது, பேரல் பிடிப்பது, லோடிங், அன்லோடிங், பவுச் போடுவது போன்ற பணிகளுக்கு சுமார் 60 விழுக்காடு வரை கூலி உயர்வு வழங்கவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் சிஐடியு தலைவர் எஸ்.சுப்ரமணியன், சங்கத்தின் தலைவர் ரமேஷ், செயலாளர் தங்கராஜ், உரிமையாளர்கள் தரப்பில் முரு கேசன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரே நாளில் 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கோவை, செப்.13- கோவையில், ஒரே நாளில் 150 இரு சக்கர வாகனங் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரம், சாய்பாபாகாலனி காவல் நிலை யங்கள் உள்ளிட்ட மாநகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில், போலியான நம்பர் பிளேட் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமை, போலி யான ஆவணங்களுடன் இயங்கி வந்த இருசக்கர வாகனங் களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், இந்த வாகனங்கள் மூலம் செயின் பறிப்பு, வழிப் பறி உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தல்
தருமபுரி, செப்.13- தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கத் தின் தருமபுரி மாவட்டத் தலைவர் சி.அங்கம் மாள், பி.ஆறுமுகம் ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியிரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்ப்லிடம் மனு அளித்தனர். இதில், தருமபுரியில், தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. தமிழக அரசு புதிய உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்துள்ளது. கூட்டுறவு சங் கங்களின் பதிவாளர் அவர்களின் சுற்றறிக் கையின்படி, எங்களது சங்கத்தின் உறுப் பினர்கள் முறையாக தையல் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். முறையாக தையல் பயிற்சி பெற்ற எங்களது சங்க உறுப்பினர்கள் 112 நபர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க விண்ணப்பம் கொடுத்தோம். மூன்று மாதங் களாகியும் எந்த தகவலும் இல்லை. எனவே, நாங்கள் கொடுத்துள்ள மனு தாரர்களை தருமபுரி தையல் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் களாக சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் முகாம்
கோவை, செப்.13- வால்பாறை வருவாய் துறை அலுவல கத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் புதனன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், வால்பாறை வரு வாய் துறை அலுவலகத்தில் வால்பாறை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் பிரியங்கா தலைமையில் நடை பெற்ற நிகழ்வில், வால்பாறை வட்டாட்சியர் அருள்முருகன் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, இம் முகாமில், ஏராளமான மாற்றுத் திறனாளி கள் கலந்து கொண்டனர். இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, இரு சக்கர வாகனம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த வழிகாட்டுதல், மற்றும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இம்முகாமில், வால்பாறை, ஷேக்கல் முடி. பன்னி மேடு. உருளிக்கல். அக்காமலை. வாட்டர்பால் உள்ளிட்ட பலபகுதிகளில் இருந்து திரளான மாற்று திறணாளிகள் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் மீண்டும் மக்னா யானை
கோவை, செப். 13- சின்னக்கல்லார் பகுதியில் இறக்கி விடப் பட்ட மக்னா யானை, மீண்டும் வால்பாறை பகுதிக்குள் வந்துள்ளது, குடியிருப்புவாசி களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குரங்குமுடி, சிவாகாபி, எஸ்டேட் பகுதி யில் செவ்வாயன்று குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதியில் உள்ளே நுழைந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளது. மேலும், குடியிருப்பு அருகாமை யில் உள்ள கொய்யா மரங்களில் உள்ள கொய்யா கனிகளை உண்டு சென்றுள்ளது. மீண்டும் மக்னா யானை ஊருக்குள் நுழைந் துள்ளதால், அப்பகுதி அச்சத்தில் உள்ள னர். ஆனைமலை புலிகள் காப்பக மானாம் பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை ஈடுபடாத காரணத்தினால் மக்னா யானை வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடியிருப்பு கள் மற்றும் பணி செய்யும் இடங்களில் உலா வருவதால் தேயிலைத் தோட்ட தொழிலா ளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் மிகவும் பயத்தில் உள்ளனர். இந்நிலையில், மக்னா யானை சிறுகுன்றா மையப்பகுதியான கூழாங்கல் ஆற்றுப்பகுதி யில், அதிகாலை நேரங்களில் உலா வந்த வீடியோ வைரலாகி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித் துள்ள நிலையில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சட்ட விரோதமாக மண் கடத்தல்
சேலம், செப்.13- எடப்பாடி அருகே சட்ட விரோதமாக மண் கடத்தல் சம்ப வம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகாவிற்குட்பட்ட பகுதி களில் சட்டவிரோதமாக கிராவல் மற்றும் செம்மண் கடத்தப் படுவதாக சேலம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மற் றும் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததால், மண் கடத்தல் குறைந்து காணப்பட்டது. தற் போது எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட தங்காயூர் ஊராட்சி கோழிப்பண்ணை அருகே ஒரு ஏக்கர் பரப்பளவில் 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை கொண்டு மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதுதொடர் பாக எடப்பாடி வட்டாட்சியர் மற்றும் கொங்கணாபுரம் வரு வாய் ஆய்வாளர்களுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் தெரிவித்தும், மண் கடத்தலை தடுக்க அதிகாரிகள் எந்த வித மான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. நாள்தோறும் இப்பகுதியிலிருந்து திருச்செங்கோடு, சங்க கிரி பகுதிகளுக்கு கடத்தப்பட்ட மண் கொண்டு செல்லப் படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மண் கடத்தலை தடுத்து நிறுத்த வேண் டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கம் உண்ணாவிரதம் அறிவிப்பு
ஈரோடு, செப்.13- பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் கோபிசெட்டிபாளையம் கோட்ட செயற்குழு கூட்டம், தலைவர் என்.முருகவேல் தலைமையில் கோபியில் நடை பெற்றது. மாநிலச் செயலாளர் எஸ்.செந்தில்நாதன் பங்கேற்ற, இக்கூட்டத்தில் 8 ஆவது மாநில மாநாடு முடிவின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கால மாக அறிவிக்க வலியுறுத்தி செப்.29 ஆம் தேதி முதல்வர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடத்துவது என்றும், அக்.25 ஆம் தேதியன்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தொகுதியில் உண்ணாவிரதம் இருப்பது என வும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் திருட்டு: காவல் நிலையம் முற்றுகை
கோவை, செப்.13- கோவை ரத்தினபுரி பகுதியில் தொடர் திருட்டு சம்ப வங்கள் நடைபெறுவதையடுத்து, பொதுமக்கள் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஜி.பி.எம். நகர், பூம்புகார் நகர், சேவா நகர், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில், கடந்த 15 நாட்களாக 7க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று பகல் நேரத்திலேயே ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கே அச்ச மான சூழல் உள்ளது. பெண்கள் வீட்டினுள் தனியாக இருப்ப தற்கே அச்சமாக உள்ளது. எனவே, தொடர் கொள்ளை சம்ப வத்தில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து எங்க ளிகன் அச்சத்தை போக்க வேண்டும், என்றனர்.
தடை செய்யப்பட்ட அரசாணைப்படி ஊதியம்: சிஐடியு ஆட்சேபணை
ஈரோடு, செப்.13- ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பிரிவில் பணியாற் றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளி லும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு அரசாணை எண். (2டி) 36/ 16.06.2023ன்படி ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்க கடந்த ஆக.31 ஆம் தேதியன்று நடைபெற்ற மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மேற்படி அரசாணைக்கு எதிராக சிஐடியு உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள் ளது. எனவே, மாநகராட்சியில் நிரந்தரப்படுத்தப்படாத தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சார்பில் மேற்கண்ட அரசாணையின்படி ஊதியத்தை தீர்மானிப்பது தவறானது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியது ஆட்சே பணைக்குரியது மட்டுமின்றி நீதிமன்ற தீர்ப்பிற்கு விரோத மானதும் ஆகும். ஆகவே, நீதிமன்ற தீர்ப்பிற்கு விரோதமான தீர்மானத்தின்படி ஊதியம் வழங்குவதற்கான பட்டியல் தயா ரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். அத்துடன் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அடிப்படை ஊதியமாக தினக்கூலி ரூ.500ம், அகவிலைப்படி ரூ.225ம் சேர்த்து ரூ.725 தின ஊதியமாக வழங்க வேண்டும். இதேபோல, இதர பிரிவு தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டுமென சிஐ டியு தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எஸ்.மாணிக்கம் வலியுறுத்தியுள்ளனர்.
கோவில் உண்டியல் உடைப்பு: ஒருவர் கைது
சேலம், செப்.12- சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே செலவடை பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் அர்ச்சகர் குண சேகரன் என்பவர், கோவிலில் பூஜை செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்பின் கோவிலுக்கு வந்த பார்த்தபோது, உண்டியல் உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந் தார். இதுகுறித்து குணசேகரன் ஜலகண்டாபுரம் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலை யில், கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சுரேஷ் என்கிற ஆறுசாமி (36), வணவாசி பேருந்து நிலையத் தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று சுரேஷ் என்கிற ஆறுசாமியை கைது செய்து, ஜலகண்டாபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவில் உண் டியலை உடைத்து ரூ.1500 திருடியதை அவர் ஒத்துக்கொண் டார். இதையடுத்து போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
போக்சோ மற்றும் சைபர் கிரைம் சட்ட விழிப்புணர்வு முகாம்
தாராபுரம், செப்.13- தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார் பில் போக்சோ மற்றும் சைபர் கிரைம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார் பில் போக்சோ மற்றும் சைபர் கிரைம் சட்ட விழிப்புணர்வு முகாம் அலோசியஸ் பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் சட்ட பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபி ரபு தலைமை வகித்து மாணவர்கள் மத்தி யில் பேசுகையில், மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து நன்றாக படிக்கவேண்டும். பள்ளிக்கு வருகை யில் யாராவது அடையாளம் தெரியாத நபர் கள் சந்தேகப்படும் வகையில் பின்தொடர்ந் தால் உடனடியாக தாராபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல சமூக வலைத்த ளங்கள் மூலம் பழகி அதை யாராவது தவ றாக பயன்படுத்த போவதாக மிரட்டினால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் போக்சோ சட்டம் குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு, தாராபுரம் மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரியா, வழக்கறி ஞர் சங்க தலைவர் கலைச்செல்வன், செயலா ளர் எம்.ஆர் ராஜேந்திரன், வழக்கறிஞர் சித்ரா பாண்ட்ஸ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற் பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட னர்.
குண்டடத்தில் விவசாயி மர்மமான முறையில் மரணம்
தாராபுரம், செப்.13- தாராபுரம் அடுத்து உள்ள குண்டடம் பகுதியை சேர்ந்த விவசாயி தோட் டத்தில் மர்மம்மான முறையில் இறந் ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குண் டடம் போலீசார் வழக்குபதிவு செய்து மருமகள் பேத்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் அடுத்து உள்ள குண்டடம் முத்தையம்பட்டியை அடுத்த ஓட்டக் காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந் தசாமி (86). இவருக்கு சாமிநாதன் (50), நடராஜ் (48) ஆகிய இரண்டு மகன் கள் உள்ளனர். நடராஜின் மனைவி ஈஸ் வரி (45), மகள் லாவண்யா (25). இச்சூழ லில் இளையமகன் நடராஜூடன் ஏற் பட்ட சொத்து தகராறு காரணமாக விவ சாயி கோவிந்தசாமி மூத்தமகன் சாமி நாதனுடன் வசித்து வருகிறார். சம்ப வத்தன்று கோவிந்தசாமி மாடு மேய்த் துக்கொண்டிருந்தார். அப்போது ஈஸ் வரி, லாவண்யா ஆகிய இருவரும் கோவிந்தசாமியிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது கீழே விழுந்த கோவிந்தசாமி மயக்கமானார். உடனே அருகில் இருந்தவர்கள் மூத்த மகன் சாமிநாத னுக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து, தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித் தனர். இதுகுறித்து குண்டடம் போலீசார் மர்மசாவு என வழக்குபதிவு செய்து ஈஸ்வரி மற்றும் லாவண்யாவிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.