சேலம், ஜூலை 31- அலுவலக நிர்வாகத்தில் தலையி டும், அதிமுக ஒன்றியக்குழு தலைவரின் கணவரின் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இச்சங்கத்தின் செயலா ளர் ஜான் ஆஸ்டின் உள்ளிட்ட நிர்வாகி கள் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகத்தி டம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள் ளதாவது, சேலம் மாவட்டம், காடையாம் பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவ ராக பதவி வகிக்கும் அதிமுகவைச் சேர்ந்த மாரியம்மாளின் கணவர் ரவி தொடர்ச்சியாக அலுவலக நிர்வாகத் தில் தலையிட்டும், ஊழியர்களிடம் அத் துமீறியும், ஒருமையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களாக பொறியியல் பிரிவு அலுவலர்களிடம் பட்டியல் விரைந்து தர நிர்பந்தப்படுத்தியும், பணி மேற்பார்வை யாளரை நிர்பந்தப்படுத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி அலு வலகத்தில் பணி புரியும் உதவியாளர் சுரேந்திரன் என்ப வரை அனைவர் முன்னிலையிலும் மிரட் டும் தொனியில் அலுவல கத்தை விட்டு வெளியே செல் என பேசியுள்ளார். கடந்த காலங்களில் இவரது அராஜகபோக்கு செயல்பாடுகள் குறித்து ஊராட்சிகள், உதவி இயக்குநருக்கு வட்டார வளர்ச்சி அலுவலரால் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. இருப்பினும் தற்போது வரை தனது போக்கினை மாற்றிக் கொள்ளாமல் ஊழி யர்களை மிரட்டி அச்ச உணர்வை ஏற் படுத்துகிறார். ஊழியர் நலன் கருதி அமைப்பின் சார்பாக ஊராட்சி ஒன் றியக்குழுத் தலைவர் மற்றும் அவரது கணவரோடு ஆணையாளர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இவரது போக்கினை மாற்றிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இச்சம்பவம் ஊழியர்களிடையே பெருத்த அதிருப்தியும். அச்ச உணர் வையும் ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியக் குழு தலைவர் மட்டும் நிர்வாகம் செய் திடாமல், அவரது குடும்பத்தினர் அனை வரும் நிர்வாகத்தில் தொடர்ச்சியாக எதிர்மறையாக தலையிட்டு நிர்வாகத்திற் கும் ஊழியர் நலனுக்கும் எதிராக செயல் பட்டு வருகிறார்கள். எனவே உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளனர்.