கோவை, மே 7- ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கூடுதல் காவல் அதிகாரிகள் நியம னம் செய்யப்பட்டுள்ளதாக கோவை யில் அமைச்சர் அ.ர.சக்கரபாணி தெரி வித்துள்ளார். கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங் கல் அலுவலர்களின் மாநில அளவி லான பணி முன்னேற்ற ஆய்வு கூட் டம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.ர. சக்கரபாணி தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற் றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின் அமைச்சர் அ.ர.சக்கர பாணி செய்தியாளர்களிடம் கூறுகை யில், ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கவும், ஆய்வு மேற் கொள்ளவும் தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது.
747 ஆலைகளில் கருப்பு பழுப்பு இல்லாத அரிசியை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் மற்றும் கண் ஸ்கேன் மூலம் பொருட்களை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சிறுதானிய உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. அனைத்து ரேசன் கடைகளில் பணம் இல்லாமல் கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, பண பரி வர்த்தனை மூலம் பொருட்களை பெற கோவையில் துவங்கப்பட்டுள் ளது. வாடகை கட்டத்தில் உள்ள ரேசன் கடையை மாற்றி, சொந்த கட்டி டத்தில் கடை செயல்படுவதற்கு எடுக் கப்பட்டு வருகிறது. கோதுமையை பொறுத்தவரை ஒன்றிய அரசு குறைவாக கொடுத் துள்ளதால், தட்டுப்பாடு நிலவி வரு கிறது. மண்ணெண்ணெய் ஒன்றிய அரசிடம் இருந்து பெற முடிய வில்லை. தட்டுப்பாட்டை போக்க மண் ணெண்ணெயை வாங்கி மானிய விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட் சியில் உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க சென்னை, மதுரை உள்ளிட்ட இரண்டு இடங்களில் மட்டுமே கூடு தல் போலீஸ் அதிகாரி நியமிக்கப் பட்டிருந்தனர். தற்போது ரேசன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு மாவட் டங்களில் கூடுதல் காவல் அதிகாரி கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், என் றார்.