districts

img

பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை

சேலம், மார்ச் 24- சேலம் கோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங் கும் பேருந்துகளில் பள்ளி, கல் லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் மேற்கொண்டு வருவதால், அப்பகுதிகளில் கூடுதல் பேருந்து கள் இயக்க நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊர டங்கு முடிந்து, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகி றது. இதனிடையே மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாண வர்கள் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி யபடி பயணம் மேற்கொண்டு வரு கின்றனர். இதுசம்பந்தமான வீடி யோக்கள் சமூக வலைதலங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்துகி றது. இதையடுத்து மாநிலம் முழு வதும் இதுபோன்ற ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள் ளும் வழித்தடங்கள் குறித்த பட்டி யல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டது. தற்போது சம் பந்தபட்ட பகுதிகளில், கூடுதல் பேருந்துகளை இயக்க நடவ டிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித்துறை மற்றும் போக்கு வரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

இருந்தபோதி லும், போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஒரு சில இடங்க ளில் மாணவர்கள் பேருந்து படிக் கட்டுகளில் தொங்கியபடியே செல் கின்றனர். தற்போது அந்த இடங்கள் தனியாக பட்டியல் எடுக்கப்பட் டுள்ளது. அதில் சேலம் மாநகரத்தில் சேலம் டவுன் – ஏற்காடு அடிவா ரம், நெத்திமேடு, சேலம்  பேளூர் இடங்களிலும், புறநகரில் தலை வாசல் – ஆத்தூர் – கெங்கவல்லி, இளம்பிள்ளை, எடப்பாடி, சங்க கிரி, வாழப்பாடி, ஓமலூர் என  20க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இடம்பெற்று உள்ளன. இதேபோல், நாமக்கல் மாவட் டத்தில் மோகனூர், திருச்செங் கோடு, ராசிபுரம் பகுதிகளிலும், தரு மபுரி மாவட்டத்தில் ஏரியூர், பரி கம், கடத்தூர், பாப்பாரப்பட்டி, பென் னாகரம், அரூர் பகுதிகளிலும் என  சேலம் கோட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழித்தடங்கள், கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டு களில் பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களாக பட்டியலிடப்பட் டுள்ளது. இந்நிலையில், சம்பந்த பட்ட வழத்தடங்களில் பள்ளி, கல் லூரி நேரங்களில் மாணவிகளுக் காக தனியாக கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும்.

காவல் துறை கட்டுப்பாட்டு அறை, உள்ளூர் காவல் நிலைய தொடர்பு எண்களை பேருந்துகளில் இடம் பெறச்செய்ய வேண்டும். உரிய நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி, மாணவர் களை ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்து படிக்கட்டுகளில் மாண வர்கள் பயணம் செய்ய தூண்டு வோர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. இதேபோல், பள்ளிக்கல்வித் துறைக்கும் பல்வேறு வழிகாட்டு தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப் பிற்கான நேரங்களில் பேருந்து நேர மாற்றம் செய்யலாம். அதிக மானவர்கள் பயணம் செய்யக் கூடிய வழித்தடங்களில், கூடுதல்  பேருந்துகள் இயக்க போக்கு வரத்து துறைக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் வலியுறுத்த வேண் டும். ஆபத்தான படிக்கட்டு பயணத் தால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, மாண வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும். படிக்கட்டு பய ணம் மேற்கொள்ளும் மாணவர்கள் குறித்து, அவரது பெற்றோர்களை அழைத்து எச்சரிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், போக்குவரத்து, வருவாய் மற்றும் காவல் துறையினரை அழைத்து வந்து மாணவர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். ரோந்து போலீசார், இந்த ஆபத்தான பய ணம் குறித்து கண்காணித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவி டப்பட்டுள்ளது, என்றனர்.