districts

img

விவசாயிகள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறையை கைவிடுக!

நாமக்கல், பிப்.26- தில்லியில் போராடும் விவசாயிகள் மீது தொடுக் கப்படும் அடக்குமுறையை பாசிச பாஜக அரசு கைவிட  வேண்டும் என்பதை வலியு றுத்தி, சமூக நீதிக்கான இட துசாரி ஜனநாயக கூட்ட மைப்பு சார்பில் தெருமுனை பிரச்சாரக்  கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார  விலையை நிர்ணயம் செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு றுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை சட்டமாக்கி அமுல்படுத்த வேண்டும். விவசாய கடன் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.  தில்லியில் போராடும் விவசாயிகள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறையை, பாசிச பாஜக அரசு கைவிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் ஆவரங்காடு பகுதியில், சமூக நீதிக்கான  இடதுசாரி ஜனநாயக கூட்டமைப்பு சார்பில், தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  மதிமுக, புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிட கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.