districts

img

ஓடும் ரயில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

கோவை, செப்.16- கோவை ரயில் நிலை யத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி தவறி விழுந்த நிலையில், துரித மாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பெண் பயணியை  காப்பாற்றிய சம்பவம் அனை வரின் பாராட்டை பெற்றுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து  வெள்ளியன்று பிற்பகல்  கோவை -  சென்னை சூப்பர்பாஸ்ட்  ரயில் புறப்பட்டது. அப்போது அவசரவசமாக வந்து ரயிலில் இரு பெண் பயணிகள் ஏற முயன்றனர். அதில் ஒரு பெண் பயணி ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை  காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு அந்த பெண் பயணியை நடைமேடைக்கு இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில்  பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.  இதனிடையே துரிதமாக செயல்பட்டு பெண் பயணியை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.