தெருக்களில் சுற்றித்திரியும் குதிரைகள்
உதகை, டிச.14- உதகை நகர பகுதி தெருக்களில் சுற்றித்திரியும் குதிரை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இதனால் எந்த நேரமும் அந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இப்படிப்பட்ட சாலைகளில் ஏராள மான கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகளால் சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்ப டுவது வாடிக்கயைாக உள்ளது. சில நேரங்களில் நடந்து செல்லும் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே கால்நடைகள் சாலைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டனர். அதன் பேரில் உதகை நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில், பலமுறை எச்சரித்தும் பல அபராதங்கள் விதித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. இந்நிலையில், உதகை நகராட்சி, 21 ஆவது வார்டுக் குட்பட்ட இரட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தெருக்களில் குதிரைகள் சாலையை வழிமறித்து சுற்றி கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன. இதனால் அவ்வழி யாக சென்ற பாதசாரிகள் மற்றும் குழந்தைகள் அச்சம டைந்தனர். எனவே, மக்களை அச்சுறுத்தும் வகையில் இடை யூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலை வாய்பற்றோருக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல்
நாமக்கல், டிச.14- நாமக்கல் மாவட்டத்தில் படித்து முடித்து வேலை இல்லா தோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டு களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, வீதம் 3 ஆண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளி களுக்கான உதவித் தொகை இனி வரும் காலங் களில் மாதம் ஒன்றுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது அக்டோம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலாண் டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர் களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியான வர்கள் ஆவார். மேற்கண்ட தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடை யாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும், www.tnvelaivaaippu.gov.in. என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர் களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை வழங்கப் படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரேசன் அரிசி மீட்பு
தருமபுரி, டிச.14- கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 1,736 டன் கடத்தல் ரேசன் அரிசி மீட்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரேசன் கடைகளில் விநி யோகம் செய்யப்படும் அரிசி யை முறைகேடாக பெற்று அதை அண்டை மாநிலங் களுக்கு கடத்தி சென்று விற்பது, கோழி பண்ணை களுக்கு தீவனங்களுக்கு பயன்படுத்த விற்பது உள் ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு தமிழக மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி,சேலம்,திருப்பூர்,ஈரோடு, கோவை உள்ளிட்ட 8 மாவட் டங்களில் கடந்த 2 ஆண்டு களில் மட்டும் இதுவரை 1,736 டன் கடத்தல் ரேசன் அரிசி மீட்கப்பட்டுள்ளதாக போலீ சார் தெரிவித்துள்ளனர்.
யானை தந்தம் கடத்த முயன்ற 3 பேர் கைது
உதகை, டிச.14- முதுமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி கடந்த முயன்ற வழங்கில் மேலும், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், குண்டல்பெட் அருகே பசவன்பூர் பகுதியில் சந்தேகப் படும்படி சிலர் நடமாடுவதாக பந்திப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத் தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத் துக்கு சென்று வனத்துறையினர் விசா ரணை நடத்தி, அவர்கள் வைத்திருந்த சுற்றுலா காரை சோதனை செய்தனர். அதில் 2 யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுயானையின் தந்தங் களை வெட்டி கடத்தி சென்று விற்ப தற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மசின குடியைச் சேர்ந்த ரங்கசாமி (35), சஜீவ குமார் (38), உதகையைச் சேர்ந்த வினோத் (36), கோவையைச் சேர்ந்த கதிரேசன் (45), திருப்பூரைச் சேர்ந்த செல்வநாயகம் (44) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பந்திப்பூர் வனத் துறையினர் கொடுத்த தகவலின் பேரில் சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலை மையிலான வனத்துறையினர் விசா ரணை நடத்தி வந்தனர். அப்போது, மசினகுடியைச் சேர்ந்த அசோக் (28), அர்ஜூனன் (21), பாலன் (25) ஆகிய 3 பேரிடம் விசாரணை மேற்கொள் ளப்பட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சொக்கநல்லி வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து வனப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். இதன்பின் ரங்கசாமி மூலம் கடத்தி சென்று விற்பனை செய்வ தற்காக கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அசோக், அர்ஜூனன், பாலன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கலைத்திருவிழா: பரிசளிப்பு
தருமபுரி, டிச.14- கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர் களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு சான்றிதழ் வழங்கும் விழா தருமபுரி அரசு கல்லூரியில் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட அள விலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 1600 மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிழ்களை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி அரசு கல்லூரி முதல்வர் ப.கி. கிள்ளிவளவன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான் விழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகோபால், ஷகில், இராஜகோபால் மற்றும் தனியார் பள்ளி ஆய்வாளர் சீனி வாசன் ஆகியோர் பங்கேற்று பேசினர். மாவட்ட அளவிளான கலைத்திருவிழாவில் 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
தேங்காய் ஏலம்
ஈரோடு, டிச.14- சென்னிமலை அடுத் துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவ சாயிகள் 4,192 தேங்காய் களை விற்பனைக்கு கொண் டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், அதிக பட்ச விலையாக 34 ரூபாய் 34 காசுக்கும், சராசரி விலை யாக 27 ரூபாய் 72 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 1,801 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 71 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
திருப்பூர் ஈட்டும் ஏற்றுமதி வருவாயில் உள்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
திருப்பூர், டிச. 14 - திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பனி யன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஒன்றிய அரசுக்கு வரக்கூடிய வருவாயிலி ருந்து குறிப்பிட்ட சதவீதத்தை திருப்பூர் மாவட்டத்தின் உள் கட்டமைப்பை மேம்ப டுத்த ஒதுக்க வேண்டும் என்று திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தெரி வித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்ததா வது, ஒன்றிய அரசின் தவறான கொள்கைக ளால் திருப்பூர் தொகுதியில் உள்ள தொழில் துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் ஐந்து கண்டங்களில் உள்ள நாடு களுக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் பனியன் களை வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பங்களாதேசில் இருந்து இறக்குமதி செய் கிறது ஒன்றிய அரசு. உள்நாட்டு உற்பத்தியை பற்றிய புரிதல் இல்லாமல் செயல்படுகிறது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பனியன்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பல லட் சம் கோடிகள் வர்த்தகம் நடைபெறுகிறது. அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு வரக் கூடிய வருவாயிலிருந்து குறிப்பிட்ட சத வீதத்தை திருப்பூர் மாவட்டத்தின் உள் கட்ட மைப்பை மேம்படுத்த ஒதுக்குவதன் மூலம் மட்டுமே திருப்பூர் தொழில்களை பாதுகாக்க முடியும். வடமாநிலத்தில் இருந்து வரக்கூடி யவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். திருப்பூரை காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித் தார்.
இளம் காதலர்கள் தற்கொலை
திருப்பூர், டிச. 14 - மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் மாரி (20), சீதா (16). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் இவர்களது வீட்டிற்கு தெரிய வரவே, இருவரது உறவினர்களும் இவர்களை பிரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி மதுரையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருப் பூர் வந்து கடுகுக்காரர் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் வாழ்வாதாரத்திற்காக அரு கில் உள்ள கட்டட வேலைக்கு இருவரும் சென்று வந்துள்ள னர். இவர்கள் இருவரையும் காணவில்லை என சீதாவின் பெற் றோர் மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித் திருந்தனர். இந்த நிலையில் சீதாவின் தொலைபேசியின் மூலம் அவ ரது உறவினர் அழைத்து மதுரை வர வற்புறுத்தி உள்ளதாக தெரிகிறது. மீண்டும் தங்களது உறவினர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் செவ்வாயன்று இரவு இருவரும் விஷம் அருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். புதன்கிழமை காலை வீடு திறக்கப்படா மல் இருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்த போது இருவரும் சடலமாக கிடப்பது தெரியவந்தது. உடனடி யாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம் பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூ ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை யும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் தாங்கள் இருவரும் விருப்பப்படி வாழ திருப்பூர் வந்த நிலையில் எங்க ளின் இந்த முடிவுக்கு சில பேர் காரணம் எனவும், 100 வருடம் வாழ விருப்பப்பட்டதாகவும், வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தனர். காவல்துறையினர் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உச்சபட்ச நேர மின் பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
திருப்பூர், டிச. 14 - திருப்பூர் பின்னலாடை தொழிலில் உச்சபட்ச நேர (பீக் அவர்) மின் கட்டணத்தையும், உயர்த்தப் பட்ட நிலைக் கட்டணத்தையும் ரத்து செய்யுமாறு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) வலியுறுத்தி உள்ளது. தமிழக முதல்வருக்கும் மின் துறை அமைச் சருக்கும் சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் புதன்கி ழமை அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: மின் கட்டண உயர்வை சந்திக்க இயலாமல் எல்லோரும் தெரிவிக்கும் கருத்துதான் என்றாலும் எங்கள் அடி மன உணர்வை கவனமாக பரிசீலிப்பீர்கள் என்ற நம்புகிறோம். பொதுவாக மின் பற்றாக் குறை உள்ள காலத்தில் பயன்படுததப்படும் உச்சபட்ச நேர மின் பயன்பாட்டு கட்டணத்தை மிகை மின்சாரம் உள்ள இந்த காலத்தில் விதிப்பது ஏற்புடையதல்ல. பனியன் தொழிற்சாலைகள் காலை 9 மணிக்கு செயல்பட தொடங்கும் நிலையில், அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை உச்சபட்ச நேர மின் கட்டணம் கணக்கீடு செய்வது சரியானது அல்ல. பின்னலாடை உற்பத்தியைப் பெருக்கி பொருளா தாரத்தை உயர்த்த வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகள் கூறும் நிலையில் அதற்கு பரிசளிக்கா விட்டாலும் தண்டனை தருவது சரியா? மின் கட்ட ணத்தை உயர்த்தும்போதெல்லாம் நிலை கட்ட ணத்தையும் உயர்த்துவது சரியா? கொரோனா தொற்று, நூல் விலை சீராக இல்லா தது ஆகிய காரணங்களால் தாக்குண்ட இந்த தொழிலை பற்றி சமூக ஊடகங்கள் வாயிலாக அரசு அறிந்திருக்கும். பாரம்பரியமிக்க பின்னலாடை தொழிலை பாது காக்க உச்ச நேர மின் கட்டணம், நிலை கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் திருப்பூர் பின்னலாடை தொழில் ஜாப் ஒர்க் அடிப்படையில் வெவ்வேறு கட்ட டங்களிலோ அடுக்குமாடிகளிலோ உற்பத்தி நடை பெறுகிறது. இந்த நிலையில் வணிகரீதியான கட்ட ணம் என்பது பொருத்தமானது அல்ல. தொழில் கட்டணம் என்ற முறையில் வசூலிக்க வேண்டும் எனவும் சைமா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள் ளது.
அணை நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்: 46.08/60 அடி நீர்வரத்து: 927 கன அடி வெளியேற்றம்: 667 கன அடி மழையளவு: 48 மிமீ அமராவதி அணை நீர்மட்டம்: 89.24/90 அடி நீர்வரத்து: 1078 கன அடி வெளியேற்றம்: 1046 கன அடி மழையளவு: 16 மிமீ
சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனை சேலம் 2, கோவை 3 ஆவது இடம் பிடித்தன
கோவை, டிச.14- தமிழக அளவில் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவ மனைகளில் சேலம் 2 ஆம் இடமும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 ஆம் இடம் பிடித்துள்ளது. முதலி டத்தில் சென்னை அரசு மருத்துவமனை பிடித்தது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சுகாதார சீா்திருத்த திட்டம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத் தில் கடந்த 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பா்) சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. இதில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை 3 ஆம் இடம் பிடித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த ஆய்வில், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண் ணிக்கை, எம்ஆர்ஐ, இருதய பிரிவு, அறுவை சிகிச்சைகள், மகப் பேறு சிகிச்சை, பாம்பு கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சை, விபத்து சிகிச்சை, நோயாளிகள் கவனிப்பு, மருத்துவர்கள் - நோயாளிகளின் எண்ணிக்கை, நிர்வாக செயல்பாடுகள் உள் ளிட்ட 39 விதமான செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள் ளப்பட்டன. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர் மலா கூறுகையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் தினசரி சராசரியாக 3 ஆயிரத்து 204 பேர் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதுதவிர, உள்நோயாளிகள் பிரிவில் ஆயிரத்து 353 பேர் சிகிச்சைப் பெறு கின்றனர். மொத்த்த்ம 238 மருத்துவர்கள் உள்ளனர். மேலும், 936 சிக்கலான அறுவை சிகிச்சைகள், ஆயிரத்து 175 மகப்பேறு சிகிச்சைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் சராசரியாக மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடை பெற்றுள்ளன. அரசு மருத்துவமனையில் தாய் - சேய் உயிரி ழப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
அன்னூர் தொழிற்பூங்கா: அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் நிலம் எடுக்கப்படாது
ஆ.ராசா எம்.பி., பேட்டி
கோவை, டிச.14- அன்னூர் தொழிற்பூங்கா அமைப்ப தற்கு விவசாயிகளின் அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் நிலம் எடுக்கப்படாது என கோவையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோவை மாவட்டம் அன்னூர் அருகே அக்கரை செங் கம்பள்ளி, பொகளூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சார்பாக தொழிற்பூங்கா அமைக்கப்பட உள் ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொகுதி உறுப்பினர் எம்பி என்ற நிலை யில் என்னிடம் மக்கள் பல்வேறு கோரிக்கை களை வைத்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் ஆகி யோர் இடத்தில் பேசி மக்களிடம் நிலவி வரும் தேவையற்ற அச்சத்தை போக்க உள்ளேன். இங்கு வரபோவது சிப்காட் அல்ல டிட்கோ தான். மாசு, கழிவு நீர் வெளியேற்றும் நிறுவ னங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஒன் றிய அரசும் இதனை அனுமதிக்காது. அங்கு 2 ஆயிரம் ஏக்கர் தனியார் கம்பெனி நிலங்கள் உள்ளன. அதை தான் கையெகப்படுத்த உள் ளோம். விவசாயிகளிடம் இருந்து விளை நிலங் கள் எக்காரணம் கொண்டும் கையெகப்படுத் தப்பட மாட்டாது. தங்களது நிலம் அனுமதி யின்றி எடுத்து விடுவார்களோ என அப்பகுதி மக்கள் அச்சம் கொள்கின்றனர். அதை போக்க தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள் ளது. அதை முதல்வர் அறிவிப்பார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். விளை நிலங் களை தாமக முன்வந்து கொடுக்கும் விவசாயி களிடம் மட்டுமே வாங்கி கொள்வோம். இசைவு இல்லாமல், அனுமதி இல்லாமல் தனி நபரின் இடங்கள் எடுக்கப்படமாட்டாது. ஏழை, எளிய படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதியை சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும், என் றார்.
வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் மூடல்
கோவை, டிச.14- வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றலாத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றா லம். கோவையின் பிரதான சுற்றுலா தலமான இந்த பகுதிக்கு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர் களும் வந்து செல்கின்றனர். இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் மற்றும் ஊரகப்பகுதி களிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி களிலும் செவ்வாயன்று கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுற் றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற் றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
லஞ்சம் வாங்கிய அலுவலருக்கு 4 ஆண்டு சிறை
உதகை, டிச.14- ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ் சம் வாங்கிய குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வண்டிச்சோலை ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பாலன். ஒப்பந்ததாரரான இவர் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சிமெண்ட், தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், வண்டிச்சோலை ஊராட்சியில் 2006 ஆம் ஆண்டு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடர்பான வேலைகளை முடித்து அதற்கான பில் தொகைக்காக குன்னூர் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் பொறியாளர் வெங் கடேசன் என்பவரை அணுகினார். ஆனால் பில் தொகையை கொடுக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.10 ஆயி ரம் லஞ்சம் தர வேண்டும் என வெங்க டேசன் கூறியுள்ளார். இதற்கிடையில், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத பாலன் இது குறித்து உதகை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் பாலனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து வெங்க டேசனிடம் கொடுக்கும்போது மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை பிடித்தனர். இதன்பின்னர் வெங்கடேசனை கைது செய்து சிறை யில் அடைத்தனர். இதற்கிடையே வெங் கடேசன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். இந்த வழக்கு விசாரணை உதகை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. செவ்வாயன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி ஒரு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வெங்கடேச னுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை யும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேணுகா கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார். இதைத்தொடர்ந்து வெங் கடேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
லாட்டரி விற்பனை: ஒருவர் கைது
நாமக்கல், டிச.14- தாரமங்கலம் அருகே தமிழக அரசால் தடை செய் யப்பட்ட லாட்டரி சீட்டு விற் பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்த னர். நாமக்கல் மாவட்டம், தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் அழ கேசன் (65). இவர் தமிழக அர சால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தக வல் கிடைத்தது. இதைய டுத்து அப்பகுதியில் தாரமங் கலம் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப் போது அங்கு லாட்டரி விற் பனை செய்து கொண்டி ருந்த அழகேசனை கைது செய்தனர். மேலும், அவரிட மிருந்து பணம் ரூ.1100யை பறி முதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.