திருப்பூர், நவ. 30 - இந்திய அரசியல் சாசனத்தில் மதச் சார்பற்ற, ஜனநாயக, சோசலிச குடியரசு என்ற அடிப்படை விழுமியங்களை கட்டமைத்த தில், விடுதலைப் போராட்ட காலத்தில் இடது சாரிகள் நடத்திய வீரஞ்செறிந்த மக்கள் போராட்டத்திற்கு மகத்தான பங்கு உள் ளது என்று மார்க்சிய கல்வியாளர் வேலாயு தம் தெரிவித்தார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டக்குழு சார்பில் அரசியல் சாசன விழுமியங்களும், கம்யூனிஸ்டுகளின் பங்க ளிப்பும் என்ற தலைப்பில் 10 நாள் காலை நேர தொடர் வகுப்பு நடத்தப்படுகிறது. திருப்பூர் அவிநாசி சாலை தியாகி பழனிசாமி நிலை யத்தில் புதன்கிழமை காலை இந்த தொடரின் முதல் வகுப்பு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி தலைமையில் தொடங்கியது. இதில் விடுதலைப் போராட்டத்தில் கம்யூ னிஸ்டுகள் என்ற தலைப்பில் மார்க்சிய கல்வி யாளர் வேலாயுதம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 1857இல் நடைபெற்ற முதல் இந்திய விடுதலைப் போரை, பிரிட் டிஷார் சிப்பாய் கலகம் என கூறினர். ஆனால் அதன் தன்மையை கவனித்து, அது இந்தியா வின் முதல் தேசிய எழுச்சி என வரை யறுத்தது பிதாமகன் கார்ல் மார்க்ஸ். இந்த விடுதலைப் போராட்டத்தில் இருந்து பிரிட் டிஷ் கற்றுக் கொண்ட படிப்பினை, இந்து - முஸ்லிம் ஒன்றுபடக் கூடாது. அதற்காக நிலப் பிரபுக்களை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ததா கும்.
அதேசமயம் இந்த விடுதலைப் போராட் டத்தில் அப்போதைய இடதுசாரிகள் பெற்ற படிப்பினை, மதம், பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றையும் கடந்து ஒற்றை நோக்கத் திற்காக மக்கள் ஒற்றுமை சாத்தியம் என்ற படிப்பினையைக் கற்றுக் கொண்டனர். இந்தி யாவில் இந்த ஒற்றுமை இயல்பாக உருவா னது. இந்தியாவுக்கு முழு விடுதலை வேண்டும் என்ற முழக்கத்தை முதன் முதலில் எழுப்பி யவர்கள் கம்யூனிஸ்டுகள். அதுவரை பிரிட் டிஷ் ராணியின் அதிகாரத்திற்கு உட்பட்ட சுயாட்சி என்ற டொமினியன் அந்தஸ்து வேண் டும் என்றுதான் காங்கிரஸ் கோரிக்கை விடு த்தது. விடுதலைப் போராட்டத்தின்போது காங்கிரசுக்குள் இரண்டு விதப் போக்கு உரு வானது. ஒன்று சோசலிச கருத்துகளை வாய ளவில் பேசிக் கொண்டே முதலாளித்துவ சார் பாக இருப்பது. மற்றொரு தரப்பினர் உண்மை யிலேயே மக்கள் பிரச்சனைகளைக்காக, உழபவனுக்கு நிலம், வேலை, கல்வி, சுகாதா ரம் என இடதுசாரி கொள்கைகளை முன் வைத்தனர். மற்றொரு தரப்பினர் நாட்டு விடுதலைக்கு எந்த பங்கும் செலுத்தாதவர்கள். அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்கவில்லை, நவீன இந்தியாவின் அரசி யல் அமைப்புச் சட்டத்தையும் ஏற்கவில்லை. மதவாத அடிப்படையில் தேசியம் என கட்ட மைக்க முயன்றனர். அவர்கள்தான் தற்போது சாவர்க்கரின் இந்துத்துவா என்ற கருத்தி யல் அடிப்படையில் செயல்பட்டு இந்திய அர சியல் சாசனத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார் கள். எனவே இந்தியாவின் மதச்சார்பற்ற ஜன நாயக சோசலிச குடியரசு என்ற அரசியல் சாச னத்தைப் பாதுகாக்க நாம் தற்போது போராட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த வகுப்பில் திருப்பூர் மட்டுமின்றி தாராபுரம், அவிநாசி உள்பட பல்வேறு பகு திகளில் இருந்தும் வந்திருந்து, பெருந்திர ளானோர் கலந்து கொண்டனர்.