districts

img

போதைக்கு எதிரான மாபெரும் ரத்ததான முகாம்

கோவை, ஜூன் 17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் நடைபெற்ற, போதைக்கு எதி ரான மாபெரும் ரத்ததான முகாமில், இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதி ரான ரத்ததான முகாம் ஞாயிற்றுக் கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகி றது. அதன்படி, கோவை மாவட்டம், சவு ரிபாளையம் பகுதியில் உள்ள கத்தோ லிக்க தேவாங்கர் சமூக நலச்சங்கத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, வாலிபர் சங்கத்தில் சிங்கை நகரத் தலைவர் சனோஜ் தலைமை வகித்தார். நிர்வாகி கள் ஹெயில் மேரி, ரெனீத் குமார், குணா, ஸ்டாலின், ரகுராம், மகேஷ் குமார், மணிகண்டன் மற்றும் சிவபா ரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிங்கை நகரச் செயலாளர் வி.தெய் வேந்திரன் மற்றும் இ1 காவல் நிலைய  ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். கோவை மாமன்ற உறுப்பினர் ராம மூர்த்தி, கத்தோலிக்க தேவாங்கர் சமூக  நலச்சங்க செயலாளர் மைக்கேல் கென் னடி, சமூக சேவகர் கௌரிசங்கர் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற் றனர். வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் விவேகானந்தன், மாவட்டச் செய லாளர் அர்ஜூன், மாவட்டப் பொருளா ளர் தினேஷ் ராஜா, சிங்கை நகரச் செய லாளர் மணிபாரதி, பொருளாளர் தியாகு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம் முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர் வத்துடன் பங்கேற்று ரத்ததானம் வழங் கினர்.