மேட்டுப்பாளையம், ஆக.8- ஜெர்மன் நாட்டின் விமானப்படைத் தலை வர் மற்றும் அதிகாரிகள் நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை மலை ரயிலில் ஆர்வமுடன் பயணித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை நீலகிரி மலை ரயில் இயக் கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்பட்டு வரும் இந்த நீலகிரி மலை ரயிலில் பயணித்தபடி நீல கிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச ராணுவ கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்திருந்த ஜெர் மன் நாட்டு விமானப்படைத் தலைவர் லெப்டி னன்ட் ஜெனரல் இங்கோ ஜெர்ஹர்டஸ் தலை மையில் 15 பேர் கொண்ட ராணுவ உயர் அதிகாரிகள், வியாழனன்று மேட்டுப்பாளை யம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டி ருந்த மலைரயில் தொடர்பான கண்காட் சியை கண்டு ரசித்தனர். தங்களை வரவேற்ற ரயில்வே அதிகாரிகளிடம் மலைரயிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ரயில்வே துறையால் அவர்களுக் கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் அமர்ந்து பிற சுற்றுலாப் பயணிகளோடு சென்ற மலைர யிலில் பயணம் மேற்கொண்டனர். குன்னூர் ரயில் நிலையம் வரை உள்ள இயற்கை எழில் மிகுந்த செங்குத்தான மலைப்பாதையில் பயணிக்கும் இந்த அதிகா ரிகள் குன்னூர் வெல்லிங்டனில் உள்ள இந்திய ராணுவ முகாமிற்கு சென்றனர்.