கோவை, அக்.31- சின்னியம்பாளையம் ஊராட்சி யில், நிதி நிறுவன அதிபர்கள், ஓட்டல் முதலாளிகள், தனியார் நிறுவன ஊழி யர்கள் ஆகியோர் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுவ தாக கணக்கு காட்டி பணம் எடுக்கப் பட்டு இருப்பது அதிகாரிகளின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளி யாகி உள்ளது. கோவை மாவட்டம், சின்னியம் பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட் டத்தில் மோசடி நடைபெறுவதாக வும், பணிபுரியாத நபர்களின் பெயர் களில் பணம் போடப்படுவதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதி காரிகளுக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சின்னியம் பாளையம் ஊராட்சியில் ஆய்வு மேற் கொண்டனர். இதில், நிதி நிறுவன அதிபர்கள், ஓட்டல் முதலாளிகள், தனியார் நிறு வன ஊழியர்கள், குடும்ப தலைவி கள் உள்ளிட்ட 18 பேர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத் தில் பணிபுரிவதாக கணக்கு காட்டப் பட்டு இருப்பது தெரிய வந்தது. எந் தப் பணியும் மேற்கொள்ளாத அவர் களுக்கு பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு எடுக்கப்பட்டு இருப் பதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஊராட்சி தலை வர் மற்றும் செயலாளர், வட்டார அலுவலர் உள்ளிட்ட இதை கண்கா ணிக்காத அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட் சியருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் சின்னியம் பாளையம் ஊராட்சிக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்குமாறும், தவறான தக வல் அளித்து பணம் பெற்று வந்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை கடிதம் வழங்கி யுள்ளனர்.