districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பாஜக-வினர் மீது வழக்கு பதிவு

கோவை, அக்.28- அனுமதியின்றி பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூரில், அன்மையில் பாஜகவின் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இதனையொட்டி கரு மத்தம்பட்டி சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடை யூறாக பேனர்கள் வைக்கப்பட்டன. பொது இடங்களில் அனு மதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு போலீசார்  தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பாஜகவினர் கருமத்தம் பட்டி நால் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத னால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதில், பாஜகவின் மாவட்ட பொதுச் செயலாளர் சத்திய மூர்த்தி, துணைத் தலைவர் பரமசிவம், மாவட்டச் செயலாளர்  சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது, அனுமதியின்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மூவரும்  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சூலூர் காவல் நிலை யத்தில் இருந்து சம்மன்  அனுப்பப்பட்டது.

விவசாயி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை, அக்.28- ஊராட்சி தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டு எழுப்பிய விவசாயி மீது தாக்குதல் நடைபெற்ற நிலை யில், தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி  நடைபெற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில்,  விவசாயியான ரமேஷ் என்பவர் ஜல்ஜீவன் மிஷன் திட்டத் தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேடு  நடைபெற்றது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அப் போது அரசூர் ஊராட்சித் தலைவரின் ஆதரவாளர்கள், ரமேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து விவசாயி ரமேஷ் தரப்பில் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து சூலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர் கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாயி  ரமேஷை தாக்கிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை  எடுக்க வேண்டும். அரசூர் ஊராட்சியில் தொடர்ந்து நடை பெற்று வரும் ஊழல்கள் குறித்து ஆட்சியர் விசாரணை  நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.

குடியிருப்பு பகுதிகளில் சிங்கவால் குரங்குகள்

கோவை, அக். 28- வால்பாறை புது தோட்ட  பகுதியில் உள்ள சிங்க வால்குரங்குகள்வால்பாறை  டவுன் பகுதிக்கு வர ஆரம் பித்தது. தற்போது 100க்கும்  மேற்பட்டசிங்கவால் குரங்கு கள் துளசிங்க நகர், காமராஜ்  நகர், கூட்டுறவு காலனி,  அண்ணா நகர், வால்பாறை டவுன் போன்ற இடங்களில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி  திரியும் குரங்குகள் வீடுக ளில் நுழைந்து உணவு பொருள் களை சாப்பிட்டு பொருட் களை சேதப்படுத்தி வருகிறது.  இதனால் பொதுமக்கள்  அச்சத்தில் உள்ளனர். குரங்கு களை குடியிருப்பு பகுதி களில் வராமல் தடுக்க  வனத்துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

நீதிபதி பெயரை சொல்லி பணமோசடி வழக்கறிஞரின் குமாஸ்தா கைது

தாராபுரம், அக்.28- தாராபுரத்தில் நீதிபதியின் பெயரைக் கூறி பண மோசடி யில் ஈடுபட்டதாக வழக்கறிஞரின் குமாஸ்தா கைது செய்யப் பட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய வீட்டு வசதி வாரிய  குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருப்பவர் இளவேந்திரன்.  இவரது மகன் ஸ்டீபன் (50). தாராபுரத்தில் உள்ள ஒரு வழக்கறி ஞரிடம் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். இந்நிலை யில் தாராபுரம் சித்ராவுத்தன்பாளையம் ஓடை தெருவை சேர்ந்த சாமிக்கண்ணு (57) என்பவர் குற்ற வழக்கு ஒன்றில்  நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்று கோவை மத்திய  சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தாயாரை சந்தித்த வழக்கறிஞரின் குமாஸ்தா ஸ்டீபன், சாமிக் கண்ணுவின் தண்டனை காலத்தை குறைத்து அவரை விடு தலை செய்ய நீதிபதி ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும்  எனக் பொய்யாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். மேலும் அவரிடம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி, குமாஸ்தா ஸ்டீபன்  மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தாராபுரம்  போலீசாருக்கு உத்தரவிட்டார். குமாஸ்தா ஸ்டீபன் தன் மீதுள்ள மோசடி வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக சென்னை  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவின்  மீதான விசாரணையை பரிசீலனை செய்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, குமாஸ்தா  ஸ்டீபனை கைது செய்து நடவடிக்கை எடுக்க தாராபுரம் காவல்  நிலையத்தை அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து தாராபு ரம் போலீசார் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்த னர். வழக்கறிஞரின் குமாஸ்தா ஒருவர் நீதிபதியின் பெயரைக்  கூறி பண மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் தாராபுரம்  பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசுர வேகத்தில் வந்த கார் மோதி விவசாயி பலி
 

திருப்பூர், அக். 28 - திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில்  கால்நடை தீவனம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத் தில் சென்ற விவசாயி தங்கமுத்து (60) என்பவர் மீது, அதிவேக மாக வந்த கார் மோதியது. இதில் அவர் சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த விபத்து காட்சி சமூக வலைதளங்களில் பரவி  வருகிறது. இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

20 ஆண்டு போராட்டம் வெற்றி: இடுவாய் மதுபானக் கடை இடமாற்றம்

திருப்பூர், அக். 28 – திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் 20 ஆண்டு காலமாக பொது மக்களுக்கு பல்வேறு வகையிலும் இடையூறாக செயல் பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உள்ளாட்சி நிர்வாகத்தின் தொடர் முயற்சி மற்றும் போராட்டத் தின் காரணமாக இடமாற்றம் செய் யப்பட்டது. இடுவாய் கிராமத்தில் இருந்து  சீராணம்பாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டு செயல்பட்டு  வந்தது. இந்த கடையினால் இந்த கிராமத்தைச் சேர்ந்த சாதாரண மக் கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பல்வேறு சிர மங்களைச் சந்தித்து வந்தனர். எனவே இக்கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என பொது மக் கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக இடுவாய் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை வைத்து போராடி வந்தது. இந்த நிலையில்  கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளாட்சி  தேர்தல் நடைபெற்றபோது மார்க் சிஸ்ட் கட்சியின் கே.கணேசன் ஊராட்சிமன்றத் தலைவருக்குப் போட்டியிட்டார். அப்போது தேர் தல் வாக்குறுதியாக இடுவாய் மது பானக் கடையை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார். இத்தேர்தலில் கே.கணேசன் பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்று ஊராட்சித் தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஊராட்சி நிர் வாகத்தின் சார்பிலேயே இந்த மது பானக் கடையை அகற்ற வேண்டும்  என்று ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பல முறை கிராம சபைக் கூட்டங்களிலும் மதுபானக் கடையை அகற்றுவதற்கு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இத்து டன் கோவை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் மூலமும் இக்கடையை அகற்று வதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டது. மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிக ளுக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஒரு கட்டத்தில் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து மதுபானக் கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். அதன் பிறகும் அதிகாரிகள் தெரிவித்த காலக்கெடுவில் கடை  அகற்றப்படாத நிலையில் மார்க் சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த நிலை யில் இடுவாய் கிராமத்தில் அமைக் கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்  கடை வெள்ளியன்று மூடப்பட்டு வேறு பகுதிக்கு இடமாற்றம் செய் யப்பட்டது. இடுவாய் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றுவதற்கு தலையிட்டு முயற்சி மேற்கொண்ட கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், இடு வாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசன், ஊராட்சிமன்ற நிர்வா கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள் ளிட்டோருக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பட்டா இல்லா வீடுகளுக்கு தடையின்மைச் சான்று: கோட்டாட்சியரிடம் நகர்மன்ற தலைவர் மனு

தாராபுரம், அக்.28- தாராபுரத்தில் பட்டா இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு  பெற தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும் என நகர் மன்றத் தலைவர் சனியன்று கோட்டாட்சியரிடம் மனு அளித் துள்ளார். தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நீண்டநாள் கோரிக் கையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண் டும். அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டு பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் மற்றும் பட்டா இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு பெற  தடையின்மை சான்றிதழ்  வழங்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரா மல் இருப்பவர்களுக்கு, உரிய தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது.  மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர்  செந்தில்அரசன் இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

7 பவுன் திருட்டு
 

அவிநாசி, அக்.28-  அவிநாசி அருகே அவிநா சிலிங்கம்பாளையம்  பெரி யார் நகர் பகுதியை சேர்ந்த வர் நெல்லை ராஜா (58). பனி யன் நிறுவன அலுவலர். இந் நிலையில் இவர் குடும்பத் துடன் வியாழக்கிழமை மாலை வெளியூர் சென்றுள் ளனர். வெள்ளிக்கிழமை மதி யம் வந்து பார்த்த போது, வீட் டின் முன் கதவு பூட்டு உடைக் கப்பட்டு இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்தி ருந்த 7 பவுன் தங்க நகை, 50  ஆயிரம் ரொக்கப் பணம் ஆகி யவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. தக வல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த போலீஸார் சோதனை மேர்கொண்டனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

தருமபுரி, அக்.28- நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் முனிகி ருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது, பாப்பி ரெட்டிப்பட்டியை அடுத்த பொம்மிடியில், சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் நடை பெற்று வருகின்றன. திருந்திய பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் சம்பா பரு வம் ஆகஸ்ட் முதல், நவம்பர் 15 வரை விதைப்பு மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் க்கடன் பெறும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்ய லாம். விதைப்பு தவிர்த்தல், விதைப்பு தோல் வியுறுதல், விதைப்பு முதல் அறுவடை வரை  உள்ள பயிர் காலத்தில் பயிர் மகசூல் இழப்பு,  அறுவடைக்கு பின் ஏற்படும் மகசூல் இழப்பு,  புயல், ஆலங்கட்டி மழை, வெள்ளம் போன்ற  இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல்  இழப்பு ஆகியவற்றிற்கும் காப்பீடு வழங்கப் படுகிறது. நெல் பயிருக்கான பிரீமியம் ஏக்க ருக்கு ரூ.550.50 ஆகும். காலக்கெடு நவம் பர் 15 ஆம் தேதியாகும். அதேபோல் பருத்தி  பயிருக்கான பிரீமியம் ஏக்கருக்கு ரூ.628.04  ஆகும். அக்.31 ஆம் தேதி வரை செலுத்த லாம். எனவே நெல், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முன்மொழிவு படிவம், பதிவு படி வம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும்  வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங் களுடன் வட்டாரத்தில் உள்ள பொது  சேவை மையம், தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் வங்கி, தேசிய மயமாக் கப்பட்ட வங்கியில் காப்பீடு செய்து பயன்பெ றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல அளவிளான விளையாட்டுப் போட்டிகள்

கோவை, அக்.28- வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவங்கி உள்ளது.  தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகம், மாணவர் நல மையத்தின் சார்பில் கல்லூரிகளுக் கிடையே மண்டல அளவி லான விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றன. முதற் கட்டமாக அக்.27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் 770 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதில், 10  வகையான உட்புற மற்றும்  வெளிப்புற விளையாட்டுகள் நடைபெறுகின்றன.  இந்த விளையாட்டு போட்டி துவக்க விழா நிகழ் விற்கு,    தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக பதி வாளர் இரா.தமிழ்வேந்தன் தலைமை ஏற்றார். மாண வர் நல மையத்தின்  முதன் மையர் நா.மரகதம் துவக்கி வைத்தார். பாரதியார் பல் கலைக்கழக பதிவாளர் பொறுப்பு மற்றும் உடற்  கல்வித் துறை மூத்த பேரா சிரியரும், முனைவரான க. முருகவேல், தேசீய மற்றும் பல்கலைக்கழக கொடி, ஒலிம்பிக் விளக்கை ஏற்றி சிறப்புரையாற்றினார்.  இறுதியாக விளை யாட்டுத்துறை துணை இயக்குநர் முனைவர் ஜே.பி. தேசிக ஸ்ரீநிவாசன் நன்றி  கூறினார்.