districts

img

மதவெறி சக்திகளை வீழ்த்த திண்ணைப் பிரச்சாரம்

தருமபுரி, மார்ச் 19- வரும் மக்களவை தேர்தலில் சாதி, மதவெறி சக்திகளை வீழ்த்த திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டக்குழு கூட்டம், கட்சி அலுவ லகத்தில், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசு பாலன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசி னார். மாவட்டச் செயலாளர் அ.குமார் உட னடிக் கடமைகளை முன்வைத்தார். இக்கூட் டத்தில், தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி  மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் கடைபிடித்து வந்த மக்கள் விரோத கார்ப்ப ரேட் ஆதரவு - வகுப்புவாத நடவடிக்கைகள் காரணமாக நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சிறு, குறு தொழில் நிறு வனங்கள் நலிவடைந்து விட்டன. விலை வாசியும், வேலையின்மையும் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளன. பாஜக ஆட்சியில் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஏழைப் பெண்கள் உட்பட 5 லட்சம் பேர் தற்கொலை  செய்து கொண்டுள்ளனர். கார்ப்பரேட் ஆத ரவு கொள்கைகளை அமல்படுத்தி வரும் மோடி அரசு, வேளாண் விளை பொருட்க ளுக்கு ஆதார விலையைத் தர மறுக்கிறது. தேர்தல் பத்திர ஊழலில் சிக்கிய பாஜக, நாடு முழுவதும் அம்பலப்பட்டு நிற்கிறது. மறு புறம் இந்தியா கூட்டணி வலுவுடன் முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொகுதிப்பங்கீட்டை முடித்து, தேர்தல் களமிறங்கி விட்டது. தருமபுரி தொகுதியில் சாதி, மதவெறி சக்திகளையும், பாஜகவுடன் இறுதிவரை கூட்டணியில் இருந்துவிட்டு தற் போது தேர்தலுக்காக தற்காலிகமாக விலகி நிற்கும் அதிமுகவையும் வீழ்த்திட, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண் டும். இதற்கான வாக்குச்சாவடி வாரியாக தீவிரமாகக் களப்பணி ஆற்றுவது, திண் ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.