districts

img

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

கோவை, ஜன.12- அன்னூரில் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு  ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். கோவை மாவட்டம், அன்னூர், அவிநாசி சாலையி லுள்ள அகிலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பொகலூர் அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சார்பில் இரண்டாம் ஆண்டு ரத்த தான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. அன்னூர் பேரூ ராட்சித் தலைவர் பரமேஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் தாலுகாச் செயலா ளர் மணிகண்டன் ஆகியோர், இம்முகாமை துவக்கி வைத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அர்ஜூன், ஒன்றியத் தலைவர் பிர தீப், ஆசிரியர் மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகிகள் உட்பட  சுமார் 50 பேர் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்று ரத்த  தானம் வழங்கினர். தொடர்ந்து, முகாமில் சேகரிக்கப் பட்ட 52 யூனிட் ரத்தம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது.