districts

இரவு நேரத்தில் உலா வரும் கரடி

உதகை, செப்.17- உதகை அருகே இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி களில் உலா வரும் கரடியை அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை,  கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதி களில் இருந்து வெளியேறி குடியிருப்புகள் மற்றும் தேயிலை  தோட்டங்களின் அருகே பகல் நேரங்களில் உலா வருவது  அதிகரித்துள்ளது. அதேபோல் உதகை அருகே உள்ள கண்ணேரி என்ற கிராமத்தில் கரடி ஒன்று இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதி  அருகே உலா வந்தது. இதனை கண்ட மக்கள் வெளியே வர  அச்சமடைந்தனர். இதையடுத்து, கரடி மீது டார்ச் லைட் அடித்து கூச்சலிட்டதால், வனப்பகுதிக்குள் சென்றது. இதனி டையே குடியிருப்பு அருகே உலா வரும் கரடியால் அசம்பா விதங்கள் ஏற்படும் முன் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்  என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.