districts

img

இளம் குற்றவாளிகள் உருவாகுவதை “வீதி நூலகம்” தடுக்கும்

கோவை, அக்.13- இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் விதமாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் வீதிதோறும்  நூலகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் வியாழ னன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இளம் குற்றவாளி கள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங் களில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் கோவை யில் வீதிதோறும்  நூலகம் என்ற திட்டத்தை முன்னெடுத்துள் ளோம். முக்கியமாக குடிசைப்பகுதிகள், அடுக்குமாடி குடியி ருப்புகளில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், ஒரு நூலகம் என்ற அடிப்படையில் 30 இடங்களில் புத்தக அலமாரி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு இடத்திலும் 200 புத்தகங்கள் உள்ளன. அனைத்தும் குழந்தைகளுக்கான புத்தகங்கள். அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் விதமான புத்தகங்கள் தேர்வு  செய்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த 30 இடங்கள் மட்டுமின்றி, தனியார் கல்லூரி சார்பில் 50 பகுதிகளில் நூலகங்கள் அமைக் கப்பட்டுள்ளன. குழந்தைகளின் கற்பனைத் திறனை தூண்டக் கூடிய மற்றும் ஆர்வத்தை அதிகரிக்கும் புத்தகங்களான காமிக்ஸ், நீதிக்கதைகள், கார்டூன் இடம் பெற்றுள்ளன. போதை பொருட்கள் போன்ற தவறான பழக்கங்களுக்கு சென்றுவிடாதபடி இருப்பதற்காக இந்த நூலகம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த நூலகம் அமைந்துள்ள தெருவிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டவர் நூலகத்தை பராமரிப்பார். புத்தகங்களை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கலாம். குழந் தைகள் கொரோனா காலத்தில் செல்போனில் மூழ்கியிருந்த னர். தற்போது இத்திட்டத்தால் அவர்களின் மனநிலை மாறி யுள்ளது. குழந்தைகளாய் இருக்கும் போதே வாசிப்பு பழக் கத்தை கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் இம் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற் றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டது. அதே போல் டாக்சி நூலகமும் கொண்டு வரும் திட்டம் உள்ளது, என்றார்.