கேஸ் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து
அவிநாசி, ஏப்.7- அவிநாசியில் காலி கேஸ் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பின்றி, லாரியின் முன்ப குதி மட்டும் எரிந்து சேதமானது. பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில் கேஸ் இறக்கிவிட்டு, வெள்ளியன்று மாலை சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்று கொண்டி ருந்தது. பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி (38) லாரியை ஓட்டிச் சென்றார். அவிநாசி பழங்கரை புறவழிச் சாலை அருகே வந்த போது, ஓய்வெடுப்பதற்காக ரவி லாரியை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் இருக்கையின் இடது புறம் தீ பிடித்துள்ளதைப் பார்த்த ரவி கீழே குதித்து தப்பியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன் பகுதி மட்டும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பள்ளி மாணவி பலி
அவிநாசி,ஏப்.7- அவிநாசி அருகே முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மகள் விபத்தில் பலியானார். திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி, முருகம்பாளையம் பகு தியை சேர்ந்தவர் சிங்கராஜ், எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகள்கள் தனுஸ்ரீ (15), சாதனா (10). என்று இரு மகள்கள் உள்ளனர். தனுஸ்ரீ கணியாம் பூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப் பும், சாதனா வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் 5 ஆம் வகுப் பும் படித்து வந்தனர். தனுஸ்ரீ, சாதனாவை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, டிப்பர் லாரி மோதியது. இதில் மாணவி சம்பவ இடத்தி லேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரை கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு தொடங்கிய முதல் நாளில் காலையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு மாலையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
தாராபுரம், ஏப்.7 - தாராபுரம், கணபதி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை பணியாளர் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்ட னர். தாராபுரம், கணபதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (65). இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிசி யனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சம்பவத் தன்று காலை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மதி யம் வீட்டுக்கு வந்த ஜீவானந்தம் பின் கதவு திறந்து கிடந் ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந் தது. இதுகுறித்து ஜீவானந்தம் தாராபுரம் குற்றப்பிரிவு போலீ சில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வா ளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பகல் நேரத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயிர்க்கடன் மற்றும் பயிர்க்காப்பீடு திட்டங்களில் உள்ள நிபந்தனைகளை மாற்ற விவசாயிகள் கோரிக்கை
உடுமலை, ஏப்.7- விவசாயிகள், பயிர்க்காப்பீட்டு திட் டத்தின் இழப்பீடு பெறவும் மற்றும் பயிர்க்கடன் தவணைகளை திருப்பி செலுத்தவும் வேளாண்துறை கட்டுப் பாடுகள் விதித்துள்ளது. விவசாயி களை பாதிக்கும் வகையில் உள்ள இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளார்கள். உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் தற்பொழுது பெய்த மழையின் காரணமாக விவசாய பயிர்கள் கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் விளைவித்த பயிர்களுக்கு கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தின் மூலம் பயிர்க்கடனும், வேளாண்துறையின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடும் செய்துள்ளார்கள். இத்திட் டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதால் சில சமயங்களில் விவசா யிகள் பயன் பெற முடியாமல் போய்விடு கிறது. பயிர்க்கடன் திரும்ப செலுத்தும் நிபந்தனைகளையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து விவசாயிகள் கூறு கையில், கடந்த காலங்களில் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும் என்றால் மாவட்ட அளவில் அதிக சேதாரம் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். விவசாயிகளின் கடுமையான போராட்டங்கள் மூலம் பயிர்கள் சேதம் ஏற்பட்டால் கிராம அள வில் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில், விவசா யிகள் விளைவித்த பயிர்களின் தன் மையை ஒன்றிய (பிளாக்) என்ற அடிப்ப டையில் சேத அளவை கணக்கீட்டு இழப் பீடு வழங்கும் முறை நடைமுறை படுத் தப்படுகிறது. இதை மாற்றி காப்பீடு செய்த பயிர்கள் எங்கு சேதம் அடைத் தாலும் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தில் மூலம் தென்னை மரங்களுக்கு ஒரு வரு டத் தவணையும், மக்காசோளம் பயிர் செய்ய ஆறு மாத தவணையும், கொண் டைக்கடலை பயிர் செய்ய இரண்டு மாத தவணையில் பயிர்க்கடன்களை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்த னையின் படி விவசாயிகளுக்கு கடன் தரப்படுகிறது. ஆனால் விவசாயிக ளுக்கு வேளாண்மை செய்ய போதிய பணம் இல்லாமல் தான் கடன் பெறுகி றார்கள். தவணைகளை குறுகிய காலத் தில் திருப்பி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் மீண்டும் கடன் தொகை அதிகமாகிறது. எனவே பயிர்க்கடன் குறித்த நிபந்தனைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:42.44/60அடி நீர்வரத்து:569கன அடி வெளியேற்றம்:1124கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:54.43/90அடி.நீர்வரத்து:115கனஅடி வெளியேற்றம்:கன அடி
ஒரே பதிவெண்: 2 வேன்கள் பறிமுதல்
கோவை, ஏப்.7- சூலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு வாடகை வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்த 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்தது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினார். இதையறிந்த சூலூர் போலீசார் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர். பின் னர் ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில், அந்த 2 வேன்களும் ஒரே நபருக்கு சொந்த மானது என தெரியவந்தது. இந்த வாகனங்களுக்கு ஆர்.சி.புத்தகம் மட்டுமே இருப்பதாகவும், குறிப்பிட்ட வாகனங்களுக்கு இன்சூ ரன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிந்துரை செய்த சூலூர் போலீசார் மேல் நடவடிக்கை தொடர் பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை தீ வைத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
தருமபுரி, ஏப்.7- அரூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை தீ வைத்து கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ஜடையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன் (33). இவருடைய மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இத னால், தனது பெற்றோர் வீட்டுக்கு ஆஷா சென்றார். அவரை சமாதானப்படுத்த சென்னையன் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதியன்று சென்றார். பெற்றோர் வீட்டில் இருந்த ஆஷாவை அருகே உள்ள மற்றொரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போதும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சென்னையன் திடீரென மண்ணெண்னையை ஆஷாவின் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் உடலில் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்த ஆஷாவை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆஷா உயிரிழந் தார். இதுதொடர்பாக அரூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சென்னையனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் சென்னையன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனால் சென்னையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத் பர்க்கத்துல்லா வியாழனன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கல்பனா ஆஜராகி வாதாடினார்.
புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க தடை
புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க தடை நாமக்கல், ஏப்.7- கொல்லிமலை அடிவாரம், புளியஞ்சோலையில் உள்ள ஆற்றில் குளிக்க தற்காலிக தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தல மாக விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இங்கு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. மழை காலங்களில் வனப் பகுதியில் உள்ள காட்டாறுகளில் இருந்து வெளியேறும் மழை நீர், கோவிலூர் ஆற்றில் வந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியே றும் தண்ணீர், கொல்லிமலையின் மற்றொரு அடிவாரப் பகுதி யான துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில் கலக் கிறது. இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். பல்வேறு மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்கின்றனர். புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆற்றில் நாட்டாமடுவில் குளிக் கும்போது அங்குள்ள புதை மணலில் சிக்கி இறந்து விடு கின்றனர். இதுவரை அங்கு ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மாலிக் என்பவர், தனது நண்பர்களுடன் புளியஞ் சோலை ஆற்றில் குளித்த போது புதை மணலில் சிக்கி உயிரி ழந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து மாவட்ட வன அலு வலர் ராஜாங்கம், வனத்துறையினருடன் புளியஞ்சோலை பகுதிக்கு சென்று, அங்குள்ள ஆற்றுப்பகுதியில் ஆய்வு மேற் கொண்டார். ஆற்றின் ஆழமான பகுதியான நாட்டா மடுவு பகு தியில் அதிக அளவு மணல் இருப்பதால், இந்த மணலில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் இறக்க நேரிடுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இனி வரும் காலங்களில் வனத்துறை சார்பில், புளியஞ்சோலை ஆறு பகுதியில் கூடாரம் அமைத்து, வனத்துறையினர் முழு நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுற்றுலா பயணிகளை இங்கு குளிக்க கூடாது என அறிவுறுத்தப்படும். மேலும், வனப்பகுதியில் திடீரென மழை பெய்தால், வெள்ள நீர் வேகமாக புளியஞ்சோலைக்கு வரும். அதில் சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொள்ள நேரிடும். எனவே, பயணிகளின் வசதிக்காக வனத்துறையின் சார்பில், புளியஞ்சோலையில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், அங்கு குளிக்க தற் காலிகமாக தடை விதிக்கப்படுகிறது, என்றனர்.
உரிய விலை இல்லை: நாட்டுமாடு வளர்ப்போர் கவலை
தருமபுரி, ஏப்.7- உரிய விலை கிடைக்காததால் நாட்டுமாடு வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தேரோட் டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடை பெறும். 15 நாட்களுக்கு மாட்டுச்சந்தையும் நடை பெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்தில் திருவிழா மற் றும் மாட்டு சந்தை நடைபெறாத நிலையில், நடப் பாண்டு மீண்டும் தேரோட்ட திருவிழாவும், அதனை யொட்டி நாட்டு மாட்டுச்சந்தையும் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டுகளில் தருமபுரி, நல்லம் பள்ளி, பென்னாகரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகு தியில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் மாடுகளின் வரத்தும், அதே அளவு விற்பனையும் நடைபெற்ற வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு வெளி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடு களை வாங்குவதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாடு களும் விற்பனைக்கு குறைந்த அளவில் வந் துள்ள நிலையிலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட காளை வகைகளும் மாடு களும் விற்பனைக்கு வந்துள்ளது. நல்ல விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் விற்பனை மந்தமாகவும், கேட்ப தற்கு ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாடு களை விற்பனைக்காக கொண்டு வந்த மாடு வளர்ப் போர் வேதனை அடைந்துள்ளனர். நாட்டு மாடு களை பொறுத்த வரை அதிகளவில் விவசாய நிலங் களில் ஏர் உழுவதற்கு அதிக அளவில் பயன் படுத்துகின்ற நிலையில், தற்பொழுது அதிலி ருந்து மாற்றம் ஏற்பட்டு டிராக்டர் போன்ற சாத னங்களை பயன்படுத்தியதால் அதிகளவில் நாட்டு மாடுகள் வளர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வந்தாலும், தற் போது அதியமான் கோட்டையில் நடைபெறும் மாட் டுச்சந்தையில் மாடுகள் விற்பனை மற்றும் காளை களின் விற்பனை குறைந்து காணப்பட்டுள்ளது.
கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
தருமபுரி, ஏப்.7- மாரண்டஅள்ளி அருகே கிணற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரகாஷ் (20), தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண் டாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலை யில், அதேபகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்ற பிரகாஷ், நீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப் பாற்ற முயன்றனர். ஆனால், பிரகாஷ் மூச்சு திணறி உயிரி ழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், மாணவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாலக் கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ரயில் மீது கல்வீச்சு
சேலம், ஏப்.7- கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு செல் லும் கன்னியாகுமரி - புனே விரைவு ரயில் (வண்டி எண்: 16382) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நெய்க்காரப்பட்டி அருகே சேலம் நோக்கி இரவு 9 மணியளவில் வந்து கொண் டிருந்தது. அப்போது அடை யாளம் தெரியாத நபர்கள் ரயி லின் மீது கற்களை வீசினர். இதில் ரயிலின் ஏ1 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டியின் கண் ணாடி உடைந்தது. இதுதொ டர்பாக பயணிகள் பயணச் சீட்டு பரிசோதகரிடம் முறை யிட்டனர். அவர், சேலம் ரயில்வே கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தக வல் கொடுத்தார். அவர்கள், சேலம் ரயில்வே கோட்ட போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் தக வலறிந்த ரயில்வே போலீ சார் மற்றும் ரயில்வே பாது காப்பு படையினர் சம்பவ இடத் துக்கு நேரில் சென்று விசா ரணை நடத்தினர். இதுதொ டர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்வீசிய நபர் கள் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
விஷம் கலந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் பலி
தருமபுரி, ஏப்.7- தருமபுரி - சேலம் மாவட்ட எல்லை பகுதியான தொப்பூர் அருகே உள்ள செக்காரப்பட்டி கிராமத்தை நேர்ந்தவர் கிருஷ் ணன். இவரது கோமதி. இவர்கள் வாழ்வாதாரமாக தங்களு டைய விவசாய நிலத்தில் பூக்கள் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடுகள் வைத்து மேய்த்து வருகின்றனர். இந்நிலை யில் இவர்களது விவசாய நிலம் அருகே உள்ள நிலத்தில் வேலை செய்து வரும் நபருக்கும், கிருஷ்ணன் தம்பதியின ருக்கும் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை பெரிதுபடுத்தாமல் வழக்கம் போல ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற பின்னர் தண்ணீர் குடிப்ப தற்கு கால்நடைகள் அனைத்தும் வந்துள்ளது. அவற்றில் முத லில் வந்து தண்ணீர் குடித்த 5 ஆடுகள் ஒரு மாடு உள்ளிட் டவை தண்ணீர் குடித்தவுடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடக்க இருப்பவை
ஒரு ஊரு ஒரே சுடுகாடு பிரச்சார இயக்கம் நாள்: 08.04.2023 சனிக்கிழமை மாலை 5 மணி இடம்: அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், கோவை. சிறப்புரை: கே.சந்துரு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏற்பாடு: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி