மேட்டுப்பாளையம், அக்.8- தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்தில் ஊட்டி மலைப் பாதையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக 57 பேர் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் இருந்து 52 மாணவ, மாணவிகள் உள்பட 57 பேர் உதகைக்கு தனியார் சுற்றுலா பேருந்து மூலம் வந்தனர். சனியன்று உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் இரவு எட்டரை மணிக்கு உதகை யில் இருந்து நாமக்கல்லுக்கு புறப்பட்டனர். இந்நிலையில், நள்ளிரவில் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லார் அருகே சுற்றுலா பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் வலது பின்புற டயரில் தீ பற்றியதாக தெரிகிறது. இதனை கண்டதும் பின்னால் வந்த வாகன ஓட்டுநர் தெரி வித்ததன் பேரில், பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலை யோரத்தில் நிறுத்திவிட்டு பேருந்தில் வந்த மாணவ, மாணவிகளை பேருந்தில் இருந்து பத்திரமாக இறக்கினார். ஆனால், டயரின் பற்றிய தீ மள மள வென எரிந்து பேருந்து முழுவதும் பரவ தொடங்கியது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை யடுத்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு வாகனங்கள் வர வழைக்கப்பட்டு தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டுநரின் முன்னெச் சரிக்கை நடவடிக்கையால், பேருந்தில் பயணம் செய்த அனை வரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.