திருப்பூர், ஏப்.27– திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள் ளிகளில் படிக்கும் 50 மாணவ, மாணவி கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மூலம் சனியன்று சென்னைக்கு விமானம் மற்றும் ரயில் மூலம் அறிவி யல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப் படுகின்றனர். காங்கயம் நகரில் அரசுப்பள்ளிக ளில் படிக்கும் 17 மாணவ, மாணவிகள் சனியன்று கோவையில் இருந்து விமா னம் மூலம் சென்னை செல்கின்றனர். இந்த மாணவர்களில் விமானம் பறப் பதைக்கூட பார்க்காதவர்களும் உண்டு. முதன்முதலாக விமான நிலையத்திற் குள் சென்று, விமானத்தில் பறக்க இருப் பதால், கடந்த ஒரு வாரமாக தினமும் விமானம் மட்டுமே கனவில் வருகிறது என்று அவர்கள் ஆர்வத்துடன் கூறி யுள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விமா னக் கட்டணத்தை திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கே.கார்த்திக் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாணவர்கள், அறிவியல் இயக்கத்தி னர் நன்றி தெரிவித்தனர். அதேபோல் இதுவரை ரயில் நிலை யம் சென்று ரயிலைத் தொட்டு பார்க்காத திருப்பூர், அவிநாசி, தாராபுரம், குண்ட டம் பகுதியைச் சார்ந்த 33 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சனியன்று ரயிலில் சென்னைக்கு செல்கின்றனர். இவர்களுடன் அறிவியல் இயக்கத் தினர் 11 பேர் பாதுகாப்புக்குச் செல்கின்ற னர். சனி, ஞாயிறு இரு நாட்கள் மேற் கொள்ளும் இந்த அறிவியல் சுற்றுலா வில் முதலில் கல்பாக்கம் சென்று அணு மின் நிலைய விஞ்ஞானிகளுடன் உரை யாடுகின்றனர். பின் மகாபலிபுரம் சென்று ஆறாம் நூற்றாண்டில் வடிக்கப் பட்ட பல்லவ மன்னர்கள் உருவாக்கிய கடற்கரை கோவில் போன்ற சிற்பங் களை பார்வையிடுகின்றனர். சென்னை யில் பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மையம், அண்ணா நூலகம், கிண்டி பாம்புப் பண்ணை ஆகியவற் றைப் பார்த்துவிட்டு, எழும்பூர் அருங் காட்சியகம், மெட்ரோ ரயிலில் பயணம், மெரீனா கடற்கரை, தலைமைச் செயல கத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகி யவற்றைப் பார்வையிட்டு திருப்பூர் திரும்புகிறார்கள்.