அரசுப் பேருந்துகளில் 46.60 லட்சம் பேர் பயணம்
ஈரோடு, அக்.27- தமிழகத்தில் தீபாவளியையொட்டி பொதுமக்கள் தங் களது சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன. கடந்த 20ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, கொடுமுடி, அந்தியூர் உள்பட 11 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் இருந்து தீபாவளியையொட்டி கடந்த 20ஆம் தேதி முதல் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 25 ஆம் தேதி வரை தீபாவளியையொட்டி நகரப் பேருந்துகளில் 21 லட்சத்து 24 ஆயிரத்து 560 பயணிகள், வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 927 பயணிகள், தீபாவளி கூட்ட நெரிச லைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட மாற்றுப் பேருந்து களில் 14 லட்சத்து 8 ஆயிரத்து 663 பயணிகள் என மொத்தம் 46 லட்சத்து 62 ஆயிரத்து 150 பயணிகள் தீபாவளி பண்டி கையொட்டி பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழர் குடியிருப்புகள் கட்டும் பணி
தருமபுரி, அக்.27- தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இலங்கைத் தமிழர் குடியிருப்புகள் கட்டும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டம், நாகாவதி அணை பகுதியில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதன அள்ளி ஊராட்சி, சந்தனூரான் கொட்டாய் பகுதியில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் 88 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலக்கோடு, சின்னாறு அணை புலம்பெயா்ந்த இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பஞ்சப் பள்ளி ஊராட்சி, சின்னாறு பகுதியில் ரூ.2.51 கோடி மதிப் பீட்டில் 50 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ. தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனி ருந்தனர்.
சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் 5 பேர் கைது
நாமக்கல், அக்.27- நாமக்கல்லில் சட்டக்கல்லூரி மாணவர் கொலை செய் யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள் ளனர். நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொசவம்பட்டி வஉசி நகரை சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சங்கீத்குமார் (21). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர் பிரவீன் என்ப வருடன் கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவு கொசவம்பட்டி சுடுகாடு அருகே தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் (35), மவுலீஸ்வரன் (23), பாரத் என்கிற பரத் (26) உள்ளிட் டோருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் காரண மாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி யதில் சங்கீத்குமார், பிரவீன் ஆகிய இருவரையும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கீத்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து மாணவர் கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் போதுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்திலிருந்து இறங்கிய வந்த அலெக்ஸ் என்கிற அலெக்ஸ் சாண்டர் (35), மவுலீஸ்வரன் (23), பாரத் என்கிற பரத் (26) ஆகிய 3 பேரையும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோணங்கிப்பட்டியை சேர்ந்த அரவிந்த் (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொசவம்பட்டியை சேர்ந்த சூர்யா (24) என்ப வரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய் தனர்.
ஏரியில் கழிவுகள் - பொதுமக்கள் மறியல்
சேலம், அக்.27- தேக்கம்பட்டி அருகே உள்ள வட்டக்காடு தாக் குட்டை ஏரி மாசுபடுவதை தடுக்கக்கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள தேக் கம்பட்டி ஊராட்சி, வட்டக் காடு ஏரியில் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பயன் படுத்தும் நிலையில், மீன் வளர்க்க குத்தகைக்கு விடப் பட்டுள்ளது. இந்த ஏரியில் கோழி கழிவுகள் கொட்டு வதால், நோய் தொற்று ஏற் படும் நிலை உள்ளது. இதனை கண்டித்து பொது மக்கள் வட்டக்காட்டில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அதிகாரிகள் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சர்வதேச அளவிலான “பேஷன் ஷோ” கோவையின் 6 வயது சிறுவன் வெற்றி
கோவை, அக்.27- துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவி லான சிறுவர்களுக்கான “பேஷன் ஷோ” போட்டியில் கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளார். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சங்கர் - சாரதாதேவி தம்பதியினரின் மகன் திஷன் (6). இவர் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக்.18 ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் மாடல் இன்டர் நேஷனல் (JMI) பட்டத்திற்கான போட்டியில் இந்தியா சார்பாக திஷன் தேர்வு செய்யப் பட்டு, இறுதி போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளார். இந்தியா, இங்கிலாந்து, இந்தோ னேசியா, கென்யா, அமெரிக்கா, துருக்கி, ஈராக் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்கள் பங்கேற்ற இப்போட்டியில் மேற் கத்திய ஆடை சுற்று, தேசிய பெருமையை பிரதிபலிக்கும் ஆடை, கலாச்சார ஆடை சுற்று, திறமை கண்டறியும் சுற்று மற்றும் நேர்காணல் போன்ற சுற்றுகளில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான “சர்வதேச ஜூனியர் மாடல் 2022” பட்டத்தினை பெற்றுள்ளார். “பேஷன் ஷோ” குறித்து எந்த பின் புலமும் இல்லாத சிறுவன் திஷன், சர்வதேச அளவில் சாதித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்
பொள்ளாச்சி, அக்.27- கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு நீரேற்று நிலையத் திலிருந்து கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கம்பாலப்பட்டி, பில் சின்னாம் பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், எஸ். நல்லுர், ஜல்லிப்பட்டி மற்றும் கோட்டூர், சமத்தூர் பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஒப் பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின் றனர். இந்நிலையில், ஒப்பந்த பணியாளர் களுக்கு ஊதியம் சரிவர வழங்குவதில்லை என்றும், தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து ஆழியாறு நீரேற்று நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறுகையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங் கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 25 ஆம் தேதி தான் சம்பளம் வழங்கப்படுகிறுது. அரசு ஒதுக்கீடு செய்த சம்பளம் ரூ.13 ஆயிரத்தை வழங்காமல், ரூ.7 ஆயிரத்து 500 வழங்கு வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீரேற்று நிலையத்தில் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் உள்ளன. இருப்பினும் குடிநீர் விநியோகம் செய்யும் பணிக்கு பணியாற்றி வருகிறோம். எனவே எங்களுக்கு மாதந் தோறும் 7 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். மேலும், தீபாவளி போனஸ் மற்றும் நீரேற்று நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட் டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள் ளோம். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப் படும், என்றனர்.
விதிகளை மீறி செயல்பட்ட கல்குவாரிகளுக்கு ரூ.7 கோடியே 55 லட்சம் அபராதம்
தாராபுரம், அக். 27 - தாராபுரம் அருகே அரசு அனுமதித்த அளவை மீறி கல்கு வாரியில் அதிக அளவு கல்லை வெட்டி எடுத்து விற்பனை செய்த 2 குவாரி உரிமையாளர்களுக்கு ரூ.7 கோடியே 55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட குண்டடம் மற் றும் காங்கேயம் அருகே உள்ள பச்சாபாளையம் ஆகிய பகுதிகளை சுற்றி ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வரு கின்றன. இதில் அரசு அனுமதித்ததை விட பல மடங்கு அதிகமாக கல் வெட்டி எடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர்க்கு புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கல் குவா ரிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசனுக்கு ஆட்சியர் உத்தரவு பிறப் பித்தார். இதைதொடர்ந்து தாராபுரம் கோட்டாட்சியர் கும ரேசன் தலைமையில் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக் குனர் வள்ளல், காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி, அள வையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் காங்கேயம் அடுத்துள்ள பச்சாபாளையம் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 குவாரிகளில் அரசு அனுமதி வழங்கிய அளவை விட பல மடங்கு கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இந்த கல்கு வாரிகள் சந்திரன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவருக்கு சொந்த மானது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அர சுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய கல்குவாரி உரிமையா ளர்களுக்கு ரூ. 7 கோடியே 55 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டது. குவாரி உரிமையாளர்கள் உடனடியாக இந்த அபராதத் தொகையை கட்ட வேண்டும் கட்ட தவறினால் அவர்கள் மீது குவாரி விதிமீறல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என கோட்டாட்சியர் குமரேசன் தெரிவித்தார்.
பஞ்சு மில்லி தீ வைத்த உ.பி. இளைஞர் கைது
திருப்பூர், அக். 27 - உடுமலை பகுதியில் பஞ்சு மில்லில் வேலை பார்த்து வந்த உத்தர பிரதேச மாநில இளைஞர் பஞ்சில் தீ பற்ற வைத்து பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப் பட்டார். உடுமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அந்தியூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகா டெக்ஸ்டைல்ஸ் என்ற தனி யார் நிறுவனம் உள்ளது. இங்கு உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ர.அஜய் (24) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இவர் தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என மேலாளர் செந்தில்குமாரிடம் தொடர்ந்து கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதியன்று பணியில் இருந்த அஜய், கையில் வைத்திருந்த தீப்பெட்டி மூலம் நிறுவனத்தில் உள்ள பஞ்சில் தீ பற்ற வைத்து விட்டதாக கூறப்படுகிறது. உட னடியாக அருகில் பணியில் இருந்தவர்கள் மற்றும் உடுமலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்துள்ள னர். பஞ்சு மற்றும் இயந்திரத்தின் சேத மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்து பார்த்தபோது அஜய் தீ பற்ற வைத்தது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது நிறு வனம் எரிந்தால் அனைவரும் ஊருக்குச் செல்லலாம் என்ப தால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். நிறுவனத்தில் தீ வைத்து சேதப்படுத்திய அஜய் மீது நடவடிக்கை எடுக்கு மாறு மேலாளர் செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல் துறையினர், பஞ்சுக்கு தீ வைத்த அஜய்யை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
காங்கேயத்தில் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருப்பூர், அக். 27- திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை சார்பு ஆய்வாளர் இசக்கி உட்பட காவல் துறையினர் காங்கேயம் சிவன்மலை கோவில் அருகில் சோதனையில் ஈடு பட்டனர். ரேசன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம் மந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை செய் ததில் அங்கு ரேசன் அரிசி 1010 கிலோ இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. மேற்படி அரிசியை பதுக்கி வைத்த நபரை பற்றி விசாரணை செய்ததில் காங்கேயம் திட்டுபாறை, வடக்கு ராம லிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ச.கருப்புசாமி என்பவர் ரேசன் அரிசியை அப்பகுதி பொது மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 1,010 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந் தது. எனவே கருப்பசாமியை ரேசன் அரிசி கடத்திய குற்றத்திற் காக கைது செய்தனர்.அவரிடமிருந்த ரேசன் அரிசி 1010 கிலோவை கைப்பற்றி, திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை
திருப்பூர், அக். 27 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகு தியில் 13 வயது பள்ளி சிறுமியை பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண் டனை விதிக்கப்பட்டுள்ளது. காங்கேயம் காவல் எல்லைக்கு உட் பட்ட பரஞ்சேர்வழி, தீத்தம்பாளையம் பழைய காலனியில் மா.பழனி (62) என்பவர் வசித்து வந்தார். அவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி, அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது பள்ளி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். இந்த சம்பவம் குறித்து மாணவி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 29 ஆன்று காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போக்சோ சட்டப் பிரி வில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மக ளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள், விசாரணை அடிப்படையில் பழனி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1000 அபராதமும், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 506 பிரிவு 2இன்படி ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும், 376 (3) பிரிவின்கீழ் 20 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ.2000 அபராதமும் என மொத்தம் 47 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
காவுத்தம்பாளையத்தில் குவாரி உரிமத்தை புதுப்பிக்க விவசாயி ஆட்சேபம்
திருப்பூர், அக். 27 – ஊத்துக்குளி வட்டம் காவுத்தம்பாளை யத்தில் தனியார் கல் குவாரியின் உரிமத்தைப் புதுப்பிக்கக் கூடாது என்று விவசாயி ஆட்சே பம் தெரிவித்துள்ளார். ஊத்துக்குளி வட்டம் காவுத்தம்பா ளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேவ ணன் வியாழக்கிழமை திருப்பூர் கோட்ட விவ சாயிகள் குறை தீர்க்கூட்டத்தில் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: காவுத்தம்பாளையம் கிராமத்தில் எனது வீட்டிற்கு அருகில் 223/1, 30/25 ஆகிய சர்வே எண்களில் கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரி இயங்குவதால் அன் றாடம் வெடி வெடிக்கும்போது அதிர்வு ஏற்படு வதுடன், வீட்டின் மேல் கற்கள் விழுவதால் உயிர் பயம் ஏற்படுகிறது, வீடுகளின் சுவர் களிலும் விரிசல் ஏற்படுகிறது. கற்களால் ஜன் னல் கண்ணாடிகள் உடைகின்றன. விவசாய வேலைகளில் கடும் இன்னல் ஏற்படுகிறது. மேலும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் வர மறுக்கின்றனர். கால்நடைகளை மேய்ச்ச லுக்கு தோட்டத்தில் கட்ட இயலவில்லை. வெடி வெடிக்கும்போது உருவாகும் புகை காரணமாக மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் பாதுகாப்பற்ற சூழலில் அச்சத்துடன் இருக் கிறோம். இந்த காரணங்களால் மேற்படி குவா ரியை புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண் டாம் என்று மாவட்ட ஆட்சியரிடமும் கடந்த 3ஆம் தேதி கோரிக்கை மனு அளித்துள் ளோம். எனவே சார் ஆட்சியரும் இந்த குவா ரிக்கு உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று விவசாயி தேவ ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவும், ஊத்துக்குளி சாலை களைச் செப்பனிட்டுத் தரவும் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கோரிக்கை மனு அளித்தார்.
நத்தக்காடையூர் வட்டாரத்தில் தொடர் திருட்டு: காவல்துறை நடவடிக்கை எடுக்க சிபிஎம் கடிதம்
திருப்பூர், அக். 27 - காங்கேயம் வட்டம் நத்தக்காடையூர் வட் டாரத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காவல் துறை நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நத்தக்காடையூர் பகுதிக் கிளைச் செயலாளர் இரா.செல்வராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயிக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: காங்கயம் வட்டம் நத்தக்காடையூர் பகுதியில் இரவு நேரங்க ளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த வாரங் களில் இதே பகுதி நஞ்சப்பகவுண்டன்வலசு ஊருக்குள் பல வீடுகளில் தொடர் திருட்டும், பல ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டுப் போயுள்ளது. அதேபோல் சிக்காம்பாளை யம் பகுதியிலும் தொடர் திருட்டு நடந்துள் ளது. இரவு நேரங்களில் தனிமையில் காடுக ளில் விவசாயிகள் குடியிருப்பு பகுதிகளில் தொடர் திருட்டும், கொலைகளும் நடந்துள் ளன. அதேபோல் நத்தக்காடையூர் சுந்தரபுரி சா.தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 25 ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் சூப்பர் எக்ஸ்எல் வண்டி திருட்டு போயுள் ளது. பல வண்டிகளில் இருந்து பெட்ரோல் திருட்டு போயுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த எம்.கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் 2 சமையல் எரிவாயு உருளைகளும், பல பொருட்களும், பணமும் திருட்டுப் போயுள் ளது. இந்த வட்டாரத்தில் தொடர் திருட்டு சம் பவங்கள் நடைபெறுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காவல் துறை துரிதகதியில் நடவடிக்கை எடுத்து இந்த குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொது மக்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு இரா.செல்வ ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செக் மோசடி வழக்கில் அதிமுக பிரமுகருக்கு பிடிவாரண்டு
தாராபுரம், அக். 27 - தாராபுரத்தில் போலி செக் கொடுத்து ஏமாற்றிய வழக்கில் அதிமுக பிரமுகர் மற்றும் அவரது தந்தைக்கு தாராபுரம் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. தாராபுரம் மணியம்மை நகரை சேர்ந்த டி.பி.எம்.ஜின்னா (65). இவ ரது மகன் திருப்பூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலா ளர் டி.பி.எம் ஆத்திக் (31) ஆகிய இருவரும் கடந்த 2020 ஆண்டு சென் னையை சேர்ந்த ஹபானா பர்வின் என்பவரிடம் ரூ.11 லட்சம் கடனாக பெற் றனர். அதற்கு ஈடாக ஜின்னா மகன் ஆத்திக் கடந்த 2020 மே 5 ஆம் தேதி யில் ரூ. 3லட்சம் மற்றும் 2022 ஜூன் 7 ஆம் தேதியில் ரூ. 3 லட்சம் என 2 தவணைகளாக ரூ 6 லட்சத்திற்கான செக்கை கொடுத்தார். அதேபோன்று மீதமுள்ள ரூ. 5 லட்சத்திற்கு இவரு டைய தந்தை டி.பி.எம் ஜின்னா கடந்த மார்ச் 7 ஆம் தேதியில் ரூ.3 லட்சம், 2022 மார்ச் 9 ஆம் தேதியில் ரூ.2 லட்சத்துக்கான 2 செக் சேர்த்து ரூ.5 லட்சத்துக்கான செக்கை கொடுத் தார். மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு டி.பி. எம். ஜின்னா மற்றும் மகன் டி.பி.எம். ஆதிக் இருவரும் செக்கை வழங்கி உள்ளனர். இந்த நான்கு செக்கை யும் ஹபானா பர்வீன் சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்திய போது இருவ ரும் வழங்கிய 4 செக்குகளிளும் பணம் இல்லை என வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹபானா பர்வீன் தாராபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் மற்றும் அவ ரது தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ். பாபு முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.அதனை விசாரித்த நடுவர் மன்ற நீதிபதி, ஜின்னா மற்றும் ஆத்திக் ஆகியோர் மீது பிடிவா ரண்டு பிறப்பித்து அவர்களை வரும் நவம்பர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.57/60அடி நீர்வரத்து:880கன அடி வெளியேற்றம்:1132கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 82.62/90அடி. நீர்வரத்து:389கனஅடி வெளியேற்றம்:645கன அடி
கேரட் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
உதகை, அக்.27- கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்த படியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடு பொருட்கள், உரங்களின் விலை ஏற்றம் மற்றும் வனவிலங்கு கள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயி ரிட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரட்டிற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலை கிடைத்து வரு வதால், பெரும்பாலான விவசாயிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு தங்களது தோட்டங்களில் கேரட்டை பயிரிட்ட னர். கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறு வடைக்கு தயாராகி உள்ளது. தற்போது கேரட் கொள்முதல் விலை கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கரில் கேரட் பயி ரிட்டு, அறுவடை செய்ய தொழிலாளர் சம்பளம், விதை, உரம், மருந்து உள்ளிட்டவைகளுக்கு என ரூ.1.50 லட்சம் செலவாகி றது. ஒரு ஏக்கரில் அறுவடை செய்தால் 60 முதல் 80 மூட்டை கள் கிடைக்கும். தற்போது விளைநிலங்களுக்கே வந்து நல்ல கொள்முதல் விலை கொடுக்கப்பட்டு, அறுவடை செய்த கேரட்டை கொண்டுச் செல்வதால் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறைகிறது. தற்போது போதுமான கொள் முதல் விலை கிடைப்பதால், கேரட் பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றனர்.
கார் வெடிப்பு சம்பவம்: மேலும் ஒருவர் கைது
கோவை, அக்.27- கோவை கோட்டைமேடு பகுதியில் அக்.23 ஆம் தேதி யன்று கார் ஒன்று வெடித்தது. அதில், உக்கடம், ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டதில் முபினிடம் 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி மருந்துகளை கைப்பற்றினர். மேலும், இவ் வழக்கிற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகு தியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு, 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய புல னாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டா லின் பரிந்துரை செய்துள்ளார். இதனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இந்நிலையில், கோவை கார் வெடிப்பு கைதான முகமது தல்கர், முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில், 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார். தற்போது இச்சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினின் உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த அப்சர்கான் என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்க னவே இவர் காவல் துறையினரின் விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து வாகன சோதனை தீவிரம்
உதகை, அக்.27- போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவல் துறையினர் வாகன சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். நாடு முழுவதும் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை ஒன்றிய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு அதி ரடியாக உயர்த்தி அறிவித்தது. இதன்படி பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங் களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த சட்டத்தை தமிழகத் தில் அமல்படுத்துவது தொடர்பான அர சாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்டவைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், புதனன்று முதல் இச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் இந்த சட் டம் அமலுக்கு வந்தது குறித்து பெரும் பாலான வாகன ஓட்டிகளுக்கு தெரிய வில்லை. இதனால் போலீசார் வாகன சோத னையை தீவிரபடுத்தியுள்ளனர். நீலகிரி மாவட் டம், உதகையில் லவ்டேல் சந்திப்பு, சேரிங்க ராஸ் மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, கூட லூர் பகுதிகளிலும் போலீசார் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் அபராத தொகை வசூலிப்பதால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் காவல் துறை யினருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தம் 2019-ன் படி 46 வகை விதிமுறை மீறல்களுக்கு அபராதம் உயா்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், பொதுமக்களில் ஏராளமானவருக்கு இது குறித்து தெரியாததால் முதலில் அறிவுரை கூறுகிறோம். அதை மீறினால் அபராதம் விதிக்கிறோம், என்றனர்.