districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மோடி, அமித்ஷாவிற்கு பெரியார் புத்தகங்கள்

பொள்ளாச்சி, டிச. 13-  நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயரை அவைக்கு றிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து பொள்ளாச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திமுகவின் முகமது அப்துல்லா எம்பி., மேற்கோள்காட்டி பேசிய பெரி யாரின் கருத்துக்களை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட் டது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக ஒன்றிய  பாஜக அரசை கண்டித்து, திமுக சார்பில் பொள்ளாச்சி  தபால்  நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலாளர் நவநீதகி ருஷ்ணன், துணைச்செயலாளர் தர்மராஜ் மற்றும் திமுகவி னர் திரளானோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் ஆகியோருக்கு பெரியா ரின் புத்தகங்களை தபால் மூலம் அனுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டல்: 3 பேர் கைது

கோவை, டிச.13-  கோவையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மதுவை வாங்கிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலைய பகுதி யில் வசிக்கும் முருகப்பன் (27) என்பவரை கடந்த 10ம்  தேதி இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கி (ஏர் கன்) காட்டி மிரட்டி 3 பீர் பாட்டில்கள் வாங்கி  சென்றுள்ளனர்.  இது சம்பந்தமாக முருகப்பன் க.க.சாவடி  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவழக்கில்  தொடர்புடைய 3 பேரை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின் ஆரோக்கியம் (21), அர்ஜுன் (23) மற்றும் சுதேஷ் (21) ஆகியோர் மேற்படி குற்ற வழக்கில் தொடர்பு டையவர்கள் என்பது தெரியவந்து. இதைத்தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீ சார், அவர்களிடமிருந்து ஏர்கன்னை பறிமுதல் செய்தனர். மேலும், மூவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

நிவாரணப் பணி: மக்கள் பாராட்டு  சபாநாயகர் அப்பாவு பேட்டி

கோவை, டிச.13- வெள்ள நிவராணப் பணிகளை பொது மக்கள் பாராட்டி  வருவதாக, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரி வித்துள்ளார். கோவை விமான  நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பாவு கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங் கம் நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் புதனன்று பள்ளி,  கல்லூரி என இரு இடங்களில் கருத்தரங்கம் நடைபெறுகின் றது. வெள்ள நிவராணப் பணிகளை பொதுமக்கள் பாராட்டி  வருகின்றனர். மத்தியக் குழு நேரடியாக வந்து ஆய்வு செய்து,  தமிழ்நாடு அரசை பாராட்டி சென்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வ ளவு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தமிழ கத்தை சேர்ந்தவர், அவரிடம் பேசி சீக்கிரம் நிவாரண நிதி வாங்கி கொடுக்க வேண்டும் என்றார். இந்த பேட்டியின் போது,  சிறுபான்மை நல வாரியத்தின் தலைவர் பீட்டர் அல் ்போன்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க சிபிஎம் மனு

நாமக்கல், டிச.13- பள்ளிபாளையம் பகுதியில் பழுதான சாலைகளை சீர மைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நகர் மன்ற தலைவரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆவரங்காடு நகரக் கிளைகள் சார்பில் அளிக்கப் பட்ட மனுவில்,  பள்ளிப்பாளையம் சுற்றியுள்ள அனைத்து  வார்டுகளிலும், சாக்கடைக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய சாலை கள் பழுதடைந்து இருப்பதால், அதை சீர்படுத்தி தர வேண் டும். தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண் டும். நிரந்தர விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பள்ளிபாளையம் நகர் மன்ற  தலைவர் மோ.செல்வராஜிடம் மனு அளித்தனர்.  முன்னதாக, இவ்வியக்கத்தில், பள்ளிபாளையம் நகரக்  கிளை செயலாளர்கள் பெருமாள், தர்மன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். 

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை

திருப்பூர், டிச.13- பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின்  உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாபது, இந்திய அரசால்  அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என  மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது  தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான  தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது.   பல கிராமங்களில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாண யத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு  அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி  குற்றமாகும். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என கூறு வதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ,  வாங்கவோ  மறுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்திய  அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை அவ மதிக்கும் வகையில் நாணயத்தை  வாங்க மறுக்கும் நபர் அல் லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அனைத்து பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டிரு கிறது.

ரூ.40 லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள்  சென்னைக்கு அனுப்பி அவைப்பு

திருப்பூர், டிச.13- தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில்  ரூ.40 லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தொழில் அமைப்புகள் சார்பில்  தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் சைமா சங்கம்  சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான டீ-சர்ட், உள்ளாடைகள், பனியன்கள் உள்ளிட்ட பொருள் கள் சென்னைக்கு அனுப்புவதற்காக சேகரிக்கப்பட்டு வந்தன.  இதைத் தொடா்ந்து, சைமா தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலை மையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள் வாக னங்கள் மூலமாக செவ்வாயன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சைமா பொதுச் செயலாளர் கீதாஞ்சலி  எஸ்.கோவிந்தப்பன், துணைத் தலைவர் பிரியா எஸ்.பால சந்தர், பொருளார் ஐடியல் ஆர்.சுரேஷ்குமார், இணைச்செய லாளர் மிர்ரா கே.எஸ்.பழனிசாமி மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலி பணியிடங்கள் டிச.26க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், டிச.13- ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு டிசம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சார்பில் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட் டத்தில் காங்கயம், தாராபுரம், குண்டடம், மடத்துக்குளம், மூல னூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக் குளி, வெள்ளக்கோவில் ஆகிய 11 ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்  காவலர், பதிவறை எழுத்தர் மற்றும் வாகன ஓட்டுநர் பணியிடங் களுக்கு இன சுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண் ணப்பப் படிவம் ஆகியவை இணையதளத்தில் இருந்து தர விறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய  ஆணையர் அலுவலகத்துக்கு டிசம்பர் 26 ஆம் தேதி மாலை 5  மணிக்குள் நேரிலோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும். குறித்த காலத்துக்குப் பின்ன ரும், தகுதியில்லாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.18 சிறுதானிய உணவுத் திருவிழா

திருப்பூர், டிச.13- வரும் டிச.18 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடும் விதமாக தழிழ்நாடு அரசு உத்திரவிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா கொண்டாட நுகர்வோர் நலன் சார்ந்த அரசுத் துறைகள் ஒருங்கிணைத்து சிறுதானியங்களின் முக்கியத் துவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்து  பொதுமக்க ளுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் விதமாக வருகின்ற  டிச.18  ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் ஆட்சி யர் வளாகத்தில்  நடைபெற உள்ளது. சிறுதானிய  உணவு திரு விழா 2023 கொண்டாட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள்  மற் றும் பொதுமக்களாகிய நுகர்வோர்கள் (இளம் நுகர்வோர் களாகிய  பள்ளி  கல்லூரி மாணவர்கள்)   பெருமளவு கலந்து  கொண்டு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு சிறுதானி யங்களின் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளுமாறு  திருப்பூர்   மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சுரைக்காய் வரத்து அதிகரிப்பு

திருப்பூர், டிச.13- திருப்பூரில் உள்ள சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகரித் துள்ளதால், புதனன்று விலை குறைவாக விற்கப்பட்டது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவ சாய விளை நிலங்களில் விளைவிக்கப்படும் பொருட்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையாம் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். இங்கு  ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந் நிலையில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  சந்தைக்கு சுரக்காய் அதிகளவு விற்பனைக்கு கொண்டுவரப் பட்டிருந்தது. இதன் காரணமாக 15 கிலோ எடையுள்ள சுரைக் காய் பை ஒன்று 250 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே விற் பனை செய்யப்பட்டது. கடந்த வாரங்களில் 500 ரூபாய் வரை  விற்பனை செய்யப்பட்டதாகவும், வரத்து அதிகரித்ததன் கார ணமாக தற்போது விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

பட்டாக் கத்தியுடன் புகைப்படம்: ஒருவர் கைது

திருப்பூர், டிச.13- திருப்பூர், முருகம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவர் எஸ்.அரவிந்த் (25). இவர் கடந்த  2 நாள்களுக்கு முன்பாக தனது ஃபேஸ்புக் (முகநூல்) மற்றும்  இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பட்டாக் கத்தியுடன் இருக்கும்  புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். இவர் மீது ஏற்கெனவே அடிதடி வழக்குகள் இருந்த நிலையில், காவல் துறையினர்  இவரைக் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், இணையதளத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்டாக் கத்தியு டன் படத்தைப் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி காவல் துறையினர் அரவிந்தைக் கைது  செய்தனர். மேலும் இணையதளத்தை தவறாகப் பயன்படுத் தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில்  காவல் துறையினர் விழிப்புணர்வு

திருப்பூர், டிச.13- திருப்பூரில் அதிகரித்து வரும் குட்கா  போதை பொருள் விற்பனையை தடுக்கும்  வகையில் காவல்துறை சார்பில் வியாபாரி களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வா யன்று நடைபெற்றது. தமிழகம் எங்கும் தற்பொழுது தமிழக அர சால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்க ளான ஹான்ஸ், குட்கா போன்ற போதைப் பொருட்களால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அடிமையாகி வருவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ஹான்ஸ், குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வரும் கடை உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப் பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியான பெருமாள் கோவில் வீதி, அரிசிக் கடை வீதி, கே.எஸ்.சி பள்ளிக்கூடம் வீதி  ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மொத்த விற்பனையாளர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன்  தலைமையில் விழிப்புணர்வு, எச்சரிக்கை நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட வியாபாரிகளிடம் பேசிய காவல் ஆய்வாளர், தற்பொழுது ஹான்ஸ், குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய  கூடாது என்றும் அதே போல போலியான உணவு பொருட்கள், கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிய பட் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர். ரஜினி காந்த், திருப்பூர் மாநகராட்சி தெற்கு உணவு  பாதுகாப்பு துறை அலுவலர்.ரவி, தமிழ் நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி கள், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள், திருப்பூர் மளிகை வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

சேதமடைந்துள்ள சாவடிக் கட்டிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், டிச.13- காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன் சேதமடைந் துள்ள சாவடிக் கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாட் சியர் அலுவலகம், ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சி யர் அலுவலகம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகம் ஆகியவை  செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் பொதுமக்கள் தங்க ளுக்கு வேண்டிய சான்றுகளை பெற மனுகள் அளிக்கின்ற னர். அவ்வாறு வரும் பொதுமக்கள் மனுக்கள் எழுதுவதற் காக அலுவலகம் முன் கிராம சாவடிக் கட்டடம் உள்ளது. இங்கு  அமர்ந்துதான் பொதுமக்கள் மனுக்கள் எழுதி வருகின்றனர்.  மேலும், மனுக்களை சரியான முறையில் எழுதத் தெரியாத வர்களுக்கு கிராம சாவடிக் கட்டடத்தில் சிலர் மனுக்கள் எழு தித் தந்து உதவி வருகின்றனர். இதற்காக காங்கயம் வட்டாட் சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் ஓடு வேய்ந்த கிராம  சாவடிக் கட்டடம் சுமாா் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகி றது. தற்போது, இந்த கிராம சாவடிக் கட்டடம் மிகவும் சேத மடைந்த நிலையில் உள்ளது. மேற்கூறையில் உள்ள மரம்,  ஓடுகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது விழுகின்றன. பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் முன்பு இதனை சரிசெய்ய  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘அன்பிலதனை அறம்’ கலைப்பயணம் கோவை வருகை

கோவை, டிச.13- வெறுப்பரசியலை வேரறுப்போம், அன்பே அறமென முழக்கத்தை முன்வைத்து, அன்பிலதனை கலைப்பயணம் வெள்ளியன்று கோவை மாநாகருக்கு வருகை தர உள்ளது.  இப்பயணத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்று பல்சுவை கலை நிகழ்வுகளை நடத்த உள்ள னர். இதுகுறித்து இவ்வமைப்பின் கோவை மாவட்ட ஒருங் கினைப்பாளர்கள் கூறுகையில், இந்திய மக்களின் ஒற்றுமை  மற்றும் மத நல்லிணக்கம் ஆகிய நோக்கங்களைப் பரப்புரை செய்யும் வகையில் சென்னையில் துவங்கிய கலைப்பயணம், பல்வேறு மாவட்டங்களின் வழியாக “அன்பிலதனை அறம்  எனும் கலைக்குழு டிசம்பர் 15 அன்று கோவை மாநகருக்கு வருகிறது. இப்பயணக்குழுவிற்கு காலை 11 மணி வடவள்ளி  பேருந்து நிலையம் அருகே வரவேற்பும், பின்னர், மாலை 4  மணிக்கு காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகம் முன்பிருந்து டாடாபாத் பவர்ஹவுஸ் வரை கலைப்பேரணி நடைபெற உள் ளது.  இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு வடகோவை குஜ ராத்தி சமாஜத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  இதில், கலைஞர்களின் இசைப்பாடல்கள், நடனம், நாடகங் கள் எனப் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பி கைதிகள் உதகைக்கு அழைத்து வந்து விசாரணை

நீலகிரி, டிச.13- புலி வேட்டையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இருவரை மத்திய பிரதேசத்திலிருந்து உதகை அழைத்து வந்து  வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட னர்.  கடந்த பிப்ரவரி மாதம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள அரசூர் பகுதி யில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் இருப்பதாக கருதி சிலர் வனத்துறையினருக் குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர், அவர்களின் தங்குமிடத்தைச் சோதனை செய் தனர். அப்போது, அவர்களின் பைகளில் புலித் தோல், புலிநகம், எலும்புகள் பதுக்கி வைத்தி ருப்பது தெரியவந்தது. உடனடியாக அவற் றைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், பஞ் சாப்பை சேர்ந்த ரத்னா(40), மங்கல்(28), கிருண் ணன்(59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (50) ஆகிய நால்வரை கைது செய்து விசா ரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில், நீலகிரி மாவட் டம், குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட எடக் காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில், புலியை வேட்டையாடி தோலை கடத்தியது, தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களை புலி  கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்யப்பட்டு வேறு யாரே னுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத் தில் விசாரணை செய்தனர். இந்நிலையில், அந்த கும்பலுக்கு தொடர்புடைய புஜாரி மற் றும் கல்ஹா ஆகியோர் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கைதாகி இருந்தது அம் பலமானது. தொடர்ந்து, மத்தியபிரதேச வனத் துறையினர், புஜாரி மற்றும் கல்ஹாவை நீலகிரி மாவட்டம் அழைத்து வந்து புலி வேட்டை நடந்த பகுதியில் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையின் போது நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம், வன ஊழி யர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

குடிநீர் பாட்டில் மூலம் சாராயம் விற்பனை: ஒருவர் கைது

சேலம், டிச.13- ஆத்தூர் அருகே குடிநீர் பாட்டிலில் கள் ளச்சாராயம் நிரப்பி விற்பனையில் ஈடுபட்ட வரை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் கள்ளச்சாரா யம் காய்ச்சப்படுகிறது. இந்த கள்ளச்சாரா யம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற் றும் மலை கிராமங்களில் விற்கப்பட்டு வரு கிறது. அதனை போலீசார் கண்காணித்து நட வடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலை யில், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம், செல் லியம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதி யில் குடிநீர் போன்று அரை லிட்டர் அளவு கொண்ட குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப் பில் ஈடுபட்டு வந்தபோது, அரை லிட்டர் தண் ணீர் பாட்டிலில் சாராயத்தை அடைத்து குடிநீர்  போல விற்பனை செய்த செல்லியம்பாளை யத்தைச் சேர்ந்த சதீஷ் (29) என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். அப் போது அவரிடமிருந்து 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணை யில், கடந்த 6 மாத காலமாக இதேபோல விற்பனை செய்து செய்து வந்ததும், பொது மக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க குடிநீர் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்பனை செய்ததாகவும், அரை லிட்டர் சாராயத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததும், இதை வாங்கியவர்கள் அந்த பகுதியில் நின்றே குடி நீர் போல சாராயத்தை குடித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத் தனர்.

ரோஸ்மேரி நாற்றுகள் உற்பத்தி தீவிரம்

உதகை, டிச.13- தொட்டபெட்டா சின்கோனா பண்ணையில் ரோஸ்மேரி நாற்று உற்பத்தியில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடு பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டாவில் சின்கோனா  மூலிகை பண்ணை உள்ளது. இங்கு ரோஸ்மேரி, தைலம்,  லெமன்கிராஸ், ஜெரோனியம் உட்பட பல்வேறு வகையான மூலிகை செடிகள், வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் தாவரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர யூகலிப் டஸ் தைலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி  செய்யப்படும் பல்வேறு வகையான மூலிகை தாவரங்கள் விவ சாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படு கிறது. மேலும், பல்வேறு வகையான மூலிகை தைலங்கள் உற் பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிக ளுக்கு விற்பனை செய்வதற்காகவும், ரோஸ்மேரியில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக தற்போது சின்கோனா பண்ணையில் உள்ள நிழல்வலை கூடா ரங்களில் பல லட்சம் ரோஸ்மேரி நாற்றுகள் உற்பத்தி செய்வ தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாற்று தயாரானவுடன், விவ சாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இவைகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் உறைபனி துவங்குகிறது 

உதகை, டிச.13- நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் துவங்க இருப்ப தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோலை மரக்கன்று களை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் நவம்பர்  மாதம் தொடங்கி பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. இந்த காலங்களில் வெப்பநிலையின் அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தைத் தொட்டு, சில நாட்களில் மைனசுக்கும் கீழ்  இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறிப் பயிர்கள் போன்றவை கருகும்  நிலைக்கு தள்ளப்படும். இந்நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால், இதுவரை உறைபனி தொடங்கவில்லை. ஆனால், தற்போது உறைபனி தொடங்கும் அறிகுறியான, நீர் பனி தொடங்கி ஒரு சில நாட்கள் ஆகிவிட்டது. தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் நீர்பனி கொட்டி வரு கிறது. எனவே, உதகை சுற்றுவட்டார பகுதிகளான எம்.பாலாடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய பயிர்கள் மற்றும் சோலை மரக்கன்றுகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதி யாக சோலை மற்றும் பழ மரக்கன்றுகளை பிளாஸ்டிக் மற்றும் சாக்குப்பைகள் கொண்டு மூடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இன்று மின்தடை

கோவை, டிச.13- பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் வியாழ னன்று (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் கரட் டுப்பாளையம், சமத்துார், தள வாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப் பம்பாளையம், எஸ்.பொன் னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக் கம்பாளையம், குறிஞ்சேரி, நம்பியமுத்ததுார், பெத்த நாயக்கனுார், ரமணமுதலி புதுார் உள்ளிட்ட பகுதிக ளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது.