districts

img

தியாகி பன்னீர்செல்வத்தின் 25ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், மார்ச் 17 – திருப்பூர் கேத்தம்பாளையம் தியாகி பன் னீர்செல்வத்தின் 25 ஆம் ஆண்டு நினைவஞ் சலி நிகழ்ச்சி எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட் டது. பனியன் தொழிலாளர்கள் சங்கம் சேரும்  உரிமைக்காக உறுதியாக நின்றதால் கடந்த  1998ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பன்னீர் செல்வம் படுகொலை செய்யப்பட்டார். அவ ரது 25 ஆம் ஆண்டு நினைவு தினமான வெள்ளி யன்று, பிச்சம்பாளையம் புதூர் பேருந்து நிறுத் தம் முன்பிருந்து மார்க்சிஸ்ட் கட்சியினர், சிஐ டியு சங்கத்தினர், தொழிலாளர்கள் அணி வகுத்துச் சென்று கேத்தம்பாளையத்தில் உள்ள அவரது நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன் செங்கொடியை ஏற்றி  வைத்து அஞ்சலி செலுத்தினார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், சிஐடியு மாவட்ட தலைவர் சி. மூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ்,  பனியன் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம் பத், மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய  செயலாளர் ஆர்.காளியப்பன் உள்பட திர ளானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பிச்சம்பாளையம் புதூர் பேருந்து  நிறுத்தம் அருகே தியாகி பன்னீர்செல்வம் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பிச்சம்பாளையம் புதூர் கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எஸ்.கே.மகேந்திரன், கே.காமராஜ், செ. முத்துக்கண்ணன் ஜி.சம்பத், ஆர்.காளியப் பன், பஞ்சாலை சங்க மாவட்ட தலைவர்  பழனிசாமி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர்  எஸ்.அருள் உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர்.  இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு ஒன்றி யம் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி அணியினர், சிஐடியு சங்கத் தினர் பெருந்திரளானோர் கலந்து கொண்ட னர். முன்னதாக வெள்ளியன்று காலை தியாகி பன்னீர்செல்வம் நினைவாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிஐ டியு, வாலிபர் சங்கத்தினர் இணைந்து ரத்த தானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.