districts

img

தமுஎகச-வின் 246 ஆவது இலக்கிய சந்திப்பு

கோவை, டிச.3- கோவை தாமஸ் கிளப் அரங்கத்தில் நடைபெற்ற தமுஎகச-வின் இலக்கிய சந் திப்பில், நூல் அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க கோவை மாவட்டக்குழு சார்பில், 246 ஆவது இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி, தாமஸ் கிளப் அரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு இ.வெ.வீரமணி தலைமை வகித்தார். கலைவாணி வரவேற் றார். “தோழர் என்.சங்கரய்யா ஒரு வரலாற்று சகாப்தம்” என்ற தலைப்பில் தி.மணி அஞ்சலி  உரையாற்றினார். இலக்கிய சந்திப்பு நிகழ் வில் சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் எழுதிய, “இந் தியாவை உலுக்கிய வைக்கம்” என்ற கட் டுரை தொகுப்பை அறிமுகபடுத்தி என்.சிவ குரு உரையாற்றினார். நூலினை எழுத்தாளர் மு.ஆனந்தன் வெளியிட, மு.பரமேஸ்வரன், தஞ்சை தமிழ்வாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, கவிஞர் சோலைமாயவன் எழுதிய, “வெயில் மேயும் நீர்ப்புலி” கவிதை தொகுப்பினை ரா.மணி மேகலை அறிமுகபடுத்தி உரையாற்றினார்.  யு.கே.சிவஞானம், கவிஞர் சோலைமாயவன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். இதனி டையே, குழந்தைகளி நடனம், பாடல், கதை  கூறுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றன.