districts

img

693 கோடி ரூபாய் திட்டத்தில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு தவிக்கும் வாய்க்கு தண்ணீர் தருமா சேலம் மாநகராட்சியின் 2.O

கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகம் பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட போராட்டங்களே இன்னும் ஓயாத நிலையில், 693 கோடி ரூபாய் திட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்க சேலம் மாநகராட்சி முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்ட சூழல் உருவாகும் என்ற நிலையில், திட்டத்தின் சாரம்சங்கள் ரகசியமாக காக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாநகராட்சியை பொறுத்த வரையில் தற்போது 10 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க சூரமங்க லம் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் ராட்சத குடிநீர் தொட்டி கள் அமைக்கப்பட்டு தனி குடிநீர் திட்டத்தின் கீழ் பெறப்படும் குடிநீர் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி கள் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் திட் டத்தை தான் சீர்படுத்தி தற்போது 2.0 என்ற அடிப்படையில் 693.49 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட  அறிக்கைக்கு அனுமதி கோரப்பட்டுள் ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட் பட்ட பகுதிகளில் நங்கவள்ளி மற்றும் மேட்டூர் தொட்டில்பட்டி தனி குடிநீர் திட்டம் ஆகிய இரண்டு குடிநீர் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்ச மாக 200 எம்எல்டி கொள்ளளவு குடி நீரை 24 மணி நேரமும் குடிநீர் விநியோ கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.  உத்தேச மதிப்பீடு தயாரிக்கப் பட்டு இந்த தொகையினை அனு மதிக்க முறையாக சேலம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே தற் போது சேலம் மாநகராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் தனி குடிநீர்  திட்டத்தால் சூரமங்கலம், அஸ்தம் பட்டி மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற இரண்டு மாநகராட்சி மண்டலங்களிலும் குடிநீர் வார கணக் கில் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன.  இந்த குற்றச்சாட்டுக்கும் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி மண்டல குழு தலைவரே விளக்கம் அளித்து அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மட்டுமே இந்த குடிநீர்  விநியோகம் செய்வதில் குளறுபடி ஏற் பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். மேலும், குடிநீர் விநியோகத்தை சரி செய்ய, குளறுபடிகளை களைய தற் போது குழுவும் அமைக்கப்பட்டுள் ளது. 

இந்நிலையில், ரூ.693.49 கோடி மதிப் பீட்டில் தனி குடிநீர் திட்டத்தை முறைப் படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய நடவ டிக்கை எடுத்திருப்பது கேள்விக்குறி யாக  உள்ளது. அதுவும் ஒன்றிய அரசின் நிதியாக 32 சதவீதமும், மாநில அரசு நிதியாக 10 சதவீதமும், மாநகராட்சி மற் றும் தனியார் பங்களிப்பாக 60 சத வீதமும் என 100 சதவீத நிதியை திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் பங்களிப்பு மட்டும் 416 கோடி ரூபாய் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஹைதரா பாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத் திற்கு இந்த ஒப்பந்த புள்ளி வழங்கப் பட்டுள்ளது  இந்த ஒப்பந்த புள்ளிக்கு மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்காக வைக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து தனியார் நிறுவனம் இந்த திட்டத்தை நடை முறைப் படுத்த  முன்வந்தால் குடிநீர் விநியோகம் தனியார் வாசம் ஆகும் இதனால் பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

குப்பை அள்ளவும் தனியார், குடிநீர் விநியோகமும் தனியார்

மேலும், இதுகுறித்து அதிகாரி களும் மன்ற கூட்டத்தில் விளக்கமாக பதில் அளிக்காமல் மலுப்பலாக பதில் அளித்ததால் இந்த தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.  இந்த நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மாநகராட்சியில் படிப்படியாக தனியார் வசமாக்கும் சம்பவம் அரங் கேறி வருகிறது. தூய்மை பணியா ளர்கள் தனியார் வசம், மாநகராட்சி பகு திகளில் மின்விளக்கு பராமரிப்பு, தனியார் வசம் குப்பை வண்டிகளை பராமரிப்பது தனியார் வசம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துவரும் நிலையில், தற் போது பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்வாதாரமான குடிநீரை பராமரிக்க தனியாருக்கு தாரைவார்ப்பது கண்ட னத்திற்குரியது.

தற்போதைய சூழ் நிலையில் குடிநீர் இணைப்பு பெற்று உள்ளவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் குடிநீர் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை செலுத்தி வருகின்ற னர். ஆனால், இதையே தனியார் வாசம் ஆக்கினால் நுகர்வோர் பயன்படுத் தும் தண்ணீரின் அளவை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படுவதோடு  நுகர்வோர் சேமிக்கும் தண்ணீருக் கும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்த னர். மேலும் தற்போது மின்சார கட்ட ணம் செலுத்துவது போன்று  குடிநீர் கட் டணமும் செலுத்த கடைசி தேதி என்ன நிர்ணயிக்கப்பட்டு கட்ட தவறி னால் அபராதத்துடன் கட்டணம் வசூ லிக்கும் அபாயமும் ஏற்பட நிலை உண்டாகும் என்றும் அச்சம் தெரி வித்துள்ளனர் இது தவிர ஒவ்வொரு வீடுகளுக் கும் தண்ணீர் பயன்படுத்துவதற்கான மீட்டர் வைக்கப்பட்டு தனியார் நிறுவ னமே குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளை லாபம் அடிக்க துடிக்கிறது. எனவே,  குடிநீர் திட்டத்தை தனியாருக்கு விடும் முடிவை சேலம் மாநக ராட்சியும் தமிழக அரசும் மறுபரிசீனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாநகராட்சியில் குடிநீர் திட்டத்திற்காக 416 கோடி ரூபாய் முத லீடு செய்யும் தனியார் நிறுவனம் திட்டத்தை நிறைவேற்றிய பின் அந்த நிறுவனத்தின் நடவடிக்கை என்ன என்பது ரகசியமாக வைத்துள்ளதாக, சேலம் மாநகராட்சி மீது சமூக ஆர்வ லர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, ஆரம்பத்திலேயே இது போன்ற திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள் ளனர். -எழில், சேலம்.