கோவை, பிப். 18- கலைஞரின் கனவு இல்லம் திட் டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில், ரூ.49.98 கோடியில் 1428 வீடுகள் கட் டப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். காரமடை ஊராட்சி ஒன்றியத் திற்குப்பட்ட, பெல்லாதி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறி வித்துள்ளார், ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனை வருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரு வது இத்திட்டத்தின் நோக்கம். அதன் படி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆனைமலை, அன் னூர், காரமடை, மதுக்கரை, பெரிய நாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, எஸ்.எஸ்.குளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர், கிணத் துக்கடவு உள்ளிட்ட ஊராட்சி ஒன்றி யங்களில், மொத்தம் 1428 பயனாளி களுக்கு ரூ.49.98 கோடி மதிப்பீட் டில் வீடுகள் கட்டப்பட்டு வரு கின்றன என்றார். முன்னதாக, காரமடை பெல்லாதி ஊராட்சியில், ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல் லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடு களை ஆட்சியர் ஆய்வு மேற் கொண்டு, வீட்டின் அளவுகள், பயன் படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் பயனாளிகள் தேர்வு உள்ளிட் டவைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கீத் குமார் ஜெயின், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கம லக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.