தருமபுரி, மார்ச் 6- அரூர் அருகே 11 ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த வணிகர் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள் ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திற்குட்பட்ட மருதிபட்டியில் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, வணிகர் நடுகல் ஒன்றை தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து போராசிரியர் சி.சந்திரசேகர் கூறுகையில், இது பண்டைய தகடூர் பகுதி ஆகும். அகமகாலத்தில் வணிக வழித்தடம் இப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். வணிகத் திற்காக வணிக குழுக்கள் தங்களது பொருட்களை ஏற் றிக்கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பொழுது இப்பகுதியைச் சேர்ந்த வழிப்பறி கொள்ளை யர்கள் வணிகக்குழுவை தாக்கி கொள்ளையடிப்பார்கள். அப்பொழுது ஏற்பட்ட பூசலில் இறந்திருக்கக்கூடிய வணிக தலைவன் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டு இருக்கிறது. இதில் குதிரையின் மீது ஒரு தலைவன் பய ணம் செய்வது போலவும், குதிரையின் பின்புறம் ஒருவர் நீர் குடுவையுடன் கையை மேல தூக்கியவாறும் அமைந்துள் ளது. பண்டைய காலத்தில் தருமபுரி பகுதியில் ஏராளமான வணிக வழித்தடங்கள் இருந்திருக்கின்றன. ஏற்கனவே மணி யம்பாடி, பென்னாகரம், சித்தேரிமலை பகுதி போன்ற இடங்க ளில் வணிக கல்வெட்டுகளும், வணிக வழித்தடங்களும் காணப்படுகின்றன. இதில் ஒரு பகுதியாக மருதிப்பட்டி வழி யாக செல்லும் வணிக வழித்தடம் இதில் ஏதோ ஒரு வழித் தடத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் செல் லும் வணிகக்குழு ஏதோ ஒன்றை வழிப்பறிகார்கள் தாக்கப்ப டும் பொழுது அத்தலைவன் இறந்திருக்கலாம் என தெரி கிறது. மருதிப்பட்டி மக்கள் இந்நடுகல்லை பெருமாள் கடவு ளாக வழிபடுகின்றனர், என்றார். இதுகுறித்து மதுராந்தகம் இந்து பள்ளி பட்டதாரி ஆசி ரியர் ரமேஷ் என்பவர் கூறுகையில், இப்பகுதியில் தொடர்ச் சியான கள ஆய்வுகளை வரலாற்று ஆய்வாளருமான பேரா சிரியர் சந்திரசேகருடன் இணைந்து மேற்கொண்டுள்ளோம். இதுபோன்ற நடுகற்கள் மூலம் இப்பகுதியின் வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்ய இயலும். பிற்காலத்தில் அது வர லாற்று மாணவர்களுக்கு நன்மை அளிக்க கூடியதாக இருக்கும், என்றார்.