திருப்பூர், பிப். 26 – திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் டாப்லைட் நூலகம் இணைந்து திங்களன்று, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வாசகர் வட்டத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்தினர். இதில் மலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகர் சித்ரா தவப்புதல்வி வரவேற்றார். கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் தலைமை ஏற்று உரையாற்றினார். தமிழ்த் துறை தலைவர் நா. பாலசுப்பிரமணியன், இயற்பியல் துறைத் தலைவர் ச.அர விந்தன், எழுத்தாளர் சிவதாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இவ்விழாவில் வாசகர் வட்ட முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர். இவ்விழாவில் கவிஞர் சுடர்விழி், கவிஞர் கவி உழ வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர் கவிஉழவன், தமிழ் மொழியில் உள்ள சிறப்பு களை சுட்டிக்காட்டி மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வை தூண்டினார். இந்த நிகழ்வில் பத்து வருட வாசகர் வட்ட முன் னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முனைவர் பட்ட ஆய்வாளர் கவிஞர் ப. விஜயராஜ் நன்றி கூறினார்.