districts

img

உடுமலை ஊராட்சி ஒன்றிய திட்டப்பணிகளுக்கு ரூ.1.93 கோடி ஒதுக்கீடு

உடுமலை, மார்ச் 12-  உடுமலை ஊராட்சி ஒன் றிய திட்டப்பணிகளுக்கு ரூ.1.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உடுமலை ஊராட்சி ஒன் றியத்தில் 26 வார்டுகள் உள் ளன. இந்த வார்டுக்கு உட் பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூல் செய்வது, குடிநீர்  வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு,  சுகாதாரம், அரசு ஒதுக்கும் நிதியில் வளர்ச் ்சிப்பணிகள் செய்வது, தூய்மைப்பணியா ளர், மோட்டார் ஆப்பரேட்டர், தூய்மைக் காவலர் ஆகியோருக்கு பணிகள் தருவது  உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப ஒன் றிய பொது நிதியில் கவுன்சிலர்கள் வாயி லாக பணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், ஒன்றியத்தில் 2022-23 ஆம் நிதியாண்டு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் அரசால் ரூ.1.93 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குடிநீர் மற்றும் தூய்மைப்பணிக்கு தலா ரூ. 58 லட்சம் வீதம் 60 சதவீதமாக ரூ.1.16 கோடி என வரையறை செய்யப்பட் டுள்ளது. அதன்படி கவுன்சிலர்கள் தங்கள் கருத்துக்களை ஒன்றிய அலுவலகத்தில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் திட்டப்பணிகளை மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்படவும் உள்ளது.