கிருஷ்ணகிரி, அக். 20- கிருஷ்ணகிரி சரக அளவிலான டென்னிஸ் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்ட டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சாருஹாசினி முதலிடமும், இரட்டையர் பிரிவில் சாருஹாசினி, மேனாவதி ஆகியோர் 2ஆம் இடமும் பிடித்தனர். மாவட்ட அளவில் நடந்த ஒற்றையர் பிரிவில் சாருஹாசினி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், மாநில அளவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். டென்னிஸ் போட்டியில் சாதனை படைத்துள்ள மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் (பொ) விஜய் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.