கிருஷ்ணகிரி, மார்ச் 2- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உழவர் சந்தை உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வளா கத்திற்கு மூன்று நுழை வாயில்கள் உள்ளன. உழவர் சந்தைக்கு தினசரி காய்கறிகள் விற்க, வாங்க என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். எந்நேரமும் மக்கள் கூட்டம் அலை மோதும். அந்த நேரத்தில் மாடுகள் சர்வ சாதாரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும், கடைகளிலுள்ள காய்கறிகள், கீரை மூட்டை களை இழுத்து தள்ளி விடு கின்றன. உழவர் சந்தை யில் பணியாளர்கள் இருந்தும் மாடுகள் உலா வருவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுகுறித்து சிஐடியு நடைபாதை வியாபாரிகள் சங்கம் பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.