districts

இழப்பீடு கேட்டு விவசாயி நூதன போராட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 10- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி வட்டம் வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி மணி. இவரது நிலத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின் வாரியத்தால் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது. அதற்கான இழப்பீடு வழங்குவதாக மின்வாரியம் ஒத்துக் கொண்ட நிலையில், இதுவரை இழப்பீடு வழங்க வில்லை. இழப்பீடு கேட்டுபலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு பாடையை கட்டி அதில் பிணம் போல் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி காவல் துறையினர், வட்டாட்சியர் தேன்மொழி ஆகியோர் மணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தனர். இதையடுத்து மணி போராட்டத்தை விலக்கொண்டனர்.