districts

img

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: ஆபத்தை உணராத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, மார்ச் 17- ஓசூர் மாநகராட்சியின் சாலை ஓரம் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள மின்சார கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஓசூர் மாநகராட்சி ராமநாயக்கன் ஏரிக்கரை மீது செல்லும் உள் வட்டச் சாலையில் கை நீட்டினால் தொடும் தூரத்தில் மின்சார கம்பிகள் செல்கின்றன. கடந்த டிசம்பர் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக அந்த மின் கம்பியை தொட்ட தால் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான நிலையிலுள்ள மின் கம்பி களை மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் சாராட்சியருக்கும், மின்சார வாரியத் திற்கும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதேபோல்,  ராமநாயக்கன் ஏரிக்கரையில் செல்லும் உள்வட்ட சாலை தற்போது 4 வழிச் சாலை யாக மாற்றப்பட்டு வருகிறது.  மேலும் ரயில் தடத்திற்கும், உள்வட்ட சாலைக்கும் இடையே வணிகத்திற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டங்களுக்கு இடையே உள்வட்ட சாலையின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலை ஓரம் குடிசை அமைத்து வாழும் இந்தி மொழி பேசும் 100க்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தை உணராமல் குளிப்பது, துணி துவைப்பது என்று பயன்படுத்தி வருகின்றனர். ஆழமான பகுதிக்குள் சென்று விட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையும் ஓசூர் மாநகராட்சியும் நீர் தேங்கி உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.