கிருஷ்ணகிரி, மே 21- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி யின் உயிர் தொழில் நுட்பவியல் துறையின் சார்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. முதல்வர் முனைவர் ஜி.ரங்கராஜ் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் முனைவர் மணிவாசகன் இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கினார். தனியார் நிறுவனங்களில் பணிபுரிய மாணவர்கள் எவ்வாறு தன்னை மேம்படுத்க் கொள்ள வேண்டும் என விஞ்ஞானி மதுசூதன் விளக்கினார். முனைவர் ஜெகநாதன் மாணவர்களின் நூதன கண்காட்சியை பார்வையிட்டு தடுப்பூசி தயாரிப்பில் உயிர் தொழில் நுட்பவியளின் முக்கியதுவத்தை விளக்கினார். விஞ்ஞானி சிவபாதசேகரன் “உயிர் மூலக்கூறுகள்” குறித்து கலந்துரையாடினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரைகளின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் பிரவின் பெருமாள், பேராசிரியர்கள் சரண்யா, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி அர்ச்சனா நன்றி கூறினார்.