districts

img

காஞ்சிபுரத்தில் 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு !

காஞ்சிபுரம், மே 16- காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் இருந்த 30 டன் எடை கொண்ட அரசமரம் வேருடன் எடுக்கப்பட்டு மற்றொரு இடத்தில் பதியம் செய்த பசுமை ஆர்வலர்க ளின் செய்கை அனைத்து தரப்பின ரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீப காலமாகவே பொதுமக்க ளின் பாதுகாப்பான வாகன போக்கு வரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சாலையில் இருந்த மரங்கள் நெடுஞ்சாலை துறையால் அகற்றப் பட்டு, நான்கு வழி , ஆறு வழி, எட்டு வழி  சாலைகள் அமைக்கப்பட்டு வரு கிறது.

இதனால் சாலையோர மரங்க ளின் நிழல்களில் பயணித்து வந்த பொதுமக்கள் தற்போது கடும் கோடை வெயிலில் அவதிப்பட்டு வருவதும் , சாலை பணிகள் முடிந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலையோர மரங்களை மீண்டும் தற்போது நட்டு வருகின்றனர்.

மேலும் இயற்கை சூழலை அதி கரிக்க அதிக அளவில் மரங்களை  நடவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப் பட்டு, சிறு வயது பள்ளி மாணவர்க ளின் முதல் மூத்த குடிமக்கள் வரை  இதனை உணர்ந்து தற்போது இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பல்லவன் நகர் குடியிருப்பு பகுதியில் நடந்த 45 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசமரம் இருந்து வந்தது. அப்பகுதியில் குடி யிருப்பு கட்ட உரிமையாளர் தீர்மா னித்து இந்த மரத்தை அகற்ற தீர்மா னித்தார். இதனை அறிந்த கீழ்க்க திர்பூர் பகுதியைச் சேர்ந்த மாநில விருது பெற்ற பசுமை ஆர்வலர் மேக நாதன் , மோகன் தனது குழுவினருடன் அப்பகுதிக்கு சென்று அந்த உரிமை யாளரிடம் மரத்தை வேருடன் வேறு இடத்திற்கு நடவு செய்து கொள்ள விரும்புவதாகவும் மரத்தை சேதப் படுத்த வேண்டாம் என வேண்டு கோள் விடுத்தனர்.

இதனை ஏற்ற வீட்டு உரிமையாளர் அதற்கான கால அவகாச அனுமதி அளித்த நிலையில், அந்த அரசமரம் ஜேசிபி மற்றும் இரண்டு கிரேன் உதவியுடன் வேருடன் எடுக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பசுமை ஆர்வலர்கள், மின்வாரிய அலுவலர் கள், குடியிருப்பு வாசிகள் என அனை வரும் ஒருங்கிணைந்து அதனை காஞ்சிபுரம் கீழ்க்கதிப்பூர் அருகே நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு  அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி னர்.

வழிநெடுகிலும் குடியிருப்புக ளுக்கு செல்லும் மின் ஒயர்களை எந்த வித சேதமும் இன்றி அனைவரின் ஒத்துழைப்புடன் இதனை எடுத்து செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ராட்சத மரம் மீண்டும் உயிர்ப்பித்தது மகிழ்ச்சியளிப்பதாக தாவர ஆர்வலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.