districts

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

காஞ்சிபுரம், செப்.7-  அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் செப். 14 அன்று சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்கு மாறு மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் போட்டி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , வருகிற  14 ஆம்  தேதி காலை 7 மணிக்கு  செங்கல்பட்டு -திருப்போரூர் கூட்டுச் சாலை காவல்துறை பூத் அருகில் தொடங்கி திருக்கழுக்குன்றம் வரை  இந்தப் போட்டி நடை பெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரி யரிடமிருந்து சான்று, பிறப்புச் சான்றுகளை கொண்டு வர வேண்டும். வருகிற 13 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலு வலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.  முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும், 4 முதல்  10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா  ரூ.250 ஆம் பரிசுத் தொகை யாக வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.  காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “வருகிற 15 ஆம் தேதி காலை 7  மணிக்கு காஞ்சிபுரம் பழைய  ரயில் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறை அருகில் சைக்கிள் போட்டி தொடங்கி வையாவூர் சாலை வழியாக மருதம் கரூர் வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற செல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

;