காஞ்சிபுரம், ஜூலை 19 - காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்புட்குழி மற்றும் கா.மு.சுப்பராயர் தொடக்கப் பள்ளிகளில் ஆறு வகுப்புகள் கொண்ட கட்டிடம் திறக்கப் பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் கல்வி திட்டத்தில் கீழ் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு ஆறு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் தலா ரூ94 லட்சம், என ஒரு கோடியே 88 லட்சரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டிடங்களை பள்ளி மாணவர் பயன்பாடுகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருப்புட்குழி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கா.மு.சுப்புராய ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மேயர் மகாலட்சுமியை ஊராட்சி, மாமன்ற உறுப்பினர் சூர்யா சோபன் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.